Tuesday, 20 April 2021

டாப் 200 வரலாற்று மனிதர்கள்-பூ.கொ.சரவணன்

#30D0044
நாள்-25
புத்தகம்-42



பூ.கொ. சரவணன் எழுதிய இப்புத்தகம் வரலாற்று மனிதர்களை அறிந்து கொள்ள உதவியாய் இருப்பதை பார்க்கிறேன். இதிலுள்ள ஆளுமைகளைப் பற்றி அறியாத தகவல்களையும் அறிந்த விஷயங்களை நினைவூட்டும் விதமாய் சில பகுதிகள் உள்ளன முன்னுரையில் குறிப்பிட்டது போல
எந்தப் புத்தகமும் முழுமையான ஒன்றாக முடியாது. அதே சமயம்
தேடலின், அறிவு வானின் பரந்த பரப்பில் அகல்விளக்கு அளவு வெளிச்சமேனும் தர வேண்டும் என்ற ஆவலில் எழுந்தவையே என இக்கட்டுரையை குறிப்பிடுகிறார்.

வாழ்தலின் அறம் உயிர்களை காத்தலும், பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமல், கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்ற அவரது reference of life எனும்  தத்துவம் ஆப்பிரிக்காவில் காண்டாமிருக கூட்டத்துக்கு நடுவில் போகும்போது உதித்தது என்ற செய்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் ஸ்வைட்சர் பற்றி அறியமுடிகிறது. வாழ்க்கைதான் எல்லாவற்றையும் விடப் பெரியது; தனிமையில் இருப்பதை விட வாழ்ந்து மடிவது மேலானது. இணைந்து வாழ்வதலே பெரிது எனும் ஆண்டன் செகாவின் வரியை குறிப்பிட்டு அவரின் வாழ்க்கையை சுருக்கமாகச் சொல்கிறார்.

சில நேரங்களில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை என்று கூறும் ராகுல் டிராவிட் தனக்கு தெரிந்த சுவாரசியமான ஒரு கதையையும் கூறியிருக்கிறார். கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பதால் கடவுள் தரவே மாட்டார் என்று அர்த்தமில்லை.

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தால் அது முளைக்காது. ஐந்து வருடம் ஆனாலும் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும். அது ஐந்து வருடங்கள் தன்னுடைய வேர்களை வளர்த்துக்கண்டு இருந்தது.அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை, ஆர்வம், திறமை, மீதான பிடிப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வேன்  என்றார் திராவிட் 

பள்ளிக்குப் போகும் பொழுது இரண்டு மணி நேர ரயில் பயணத்தில்.. தான் படித்த சாகச கதைகள்.. என்னை வேறு ஒரு கனவு உலகத்திற்கு கூட்டிப்போயின. இயல்பான எளியவன் நான்! புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான். அசாதாரணமான கனவுகளைக் கண்டு உழைத்தேன் என்று கூறும் எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி உண்ணா நோன்பு இருந்த போது "இவர் இன்னும் சாகவில்லையா" என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதியவர். இந்திய மக்கள் பஞ்சத்தால் இருந்தபோது உணவு கப்பல் அனுப்ப மாட்டேன் எனச் சொல்லி பல லட்சம் பேரை சாக விட்டவர். உலகப் போர் பற்றிய நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிய முடிந்தது.

இங்கிலாந்து போயிருந்தபோது நீரழிவு, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட போதும் 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார். அவருடன் வாழ்நாள் முழுக்க முரண்பட்ட திலகர் 'இந்தியாவின் வைரம்' என்று அவர் மரணத்தின்போது பெயர் சூட்டினார். காந்திக்கு மட்டுமல்ல ஜின்னாவுக்கும் இவர்தான் குரு.. அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே

பாகிஸ்தான் பகுதியின் தலைவராக இருந்த லியாகத் அலிகான் "உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எப்பொழுதும் உதவ காத்திருக்கிறோம் என்று சொன்னபோது, எங்களுக்கான தேவைகளை சிக்கல்களை நாங்களே தீர்த்துக் கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசம் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு உதவி செய்கிறதாய் இருந்தால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்ளுங்கள் என்று கம்பீரமாய் சொல்லிவிட்டு நடந்தாராம் கண்ணியமிகு காயிதே மில்லத்.

"விடுதலைப்போரின் தாய்" .அன்று அவர் எழ மறுத்ததால் தான் இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறோம் என்று ரோசா பார்க்ஸ் குறித்து மக்கள் கூறிய சொற்கள் கருப்பின மக்களை தலைநிமிர வைத்தது". மிகச்சிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ஏரியின் அழகி என்னும் கவிதை இயற்றிய சரோஜினி நாயுடுவை படித்தபோது வியக்கத்தான் செய்தோம்.

த கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரின் கனவை சாப்ளின் பேசியிருப்பார். ஹன்னா! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு, பேராசை, மிருகங்கத்தனங்களை கடந்து மனிதர்கள் எழப் போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்குச் சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும். அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ஹிட்லரின் பேச்சாக சாப்லின் பேசிய அந்த வசனம் இன்று வரை மிகப் பிரபலமானது.

வெடிப்பதில் எந்த பயங்கரமும் இல்லை, எதிர்பார்ப்பில் தன் அது இருக்கிறது என்று சொன்னவர். மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்று புகழப்படும் திரைப்படத்தின் இயக்குனர். பறவைகளின் அட்டூழியங்களை, உயரத்துக்கு பயப்படும் நாயகனை, அம்மாவாக தன்னை உணரும் நாயகனை, ஒரே ஒரு அப்பார்ட்மெண்ட் அறையில் நடக்கும் சம்பவங்களை என எந்த கதையாக இருந்தாலும் சிலிர்க்கவைக்கும் கதைசொல்லி ஆல்பிரட் ஹிட்ச்காக் 

என்னை ஹிட்லர் தவிர்த்தார் என்று சொல்கிறீர்கள். அமெரிக்க ஜனாதிபதியும் அதையேதான் செய்தார். என்னால் பேருந்தின் முன்பக்கம் இப்போதும் போக முடியவில்லை. நான் என் நிறத்தால் எடைபோட படுகிறேன். நினைத்த இடத்தில் என்னால் வாழ முடியவில்லை. எதுவுமே மாறவில்லை என்று பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கில பாடப் புத்தகத்தில் நான் படித்த ஜெஸ்ஸி ஓவன்ஸ் கதையை மீண்டும் படிக்கும்போது பழைய நினைவுகளை கொண்டு வந்தது

#மனம் கவர்ந்த வரிகள்

*பேயைப் போல பயிற்சி செய்யுங்கள் தேவதையை போல ஆடுங்கள்-சச்சின்

*மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான். குறை சொல்லிக்கொண்டே வாழ்கிறான். ஏக்கத்தோடு இறக்கிறான்.

*எரியாத உண்மையை தத்துவம் என்பேன். மனதின் தீயால் நிறையும் உண்மையே கவிதை என்பேன்.-இக்பால்

*உன்னை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தை பயன்படுத்தாதே. விவாதத்தால் தான் ஜெயிக்க வேண்டும்.

*நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே விரும்புகிறேன்

*யாரும் விடுதலை சமத்துவம் நீதி ஆகியவற்றை உனக்கு தர முடியாது. நீ மனிதன் என்றால் நீயாகவே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் -மால்கம் எக்ஸ்

பலதரப்பட்ட ஆளுமைகளை ஒரே புத்தகத்தில் படிக்கும் போது, அவர்களைப்பற்றிய பிம்பங்களை நமக்கு கடத்துவதில் பூ.கொ சரவணனின் பங்கு முக்கியமானது. ஒவ்வொருவரை பற்றி ஒரு துளியேனும் தெரிந்துகொள்ளவேண்டும் ஆர்வத்தை தூண்டுகிறது.

 தொடர்ந்து பகிர்வோம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment