Thursday, 15 April 2021

அறத்தின் குரல்-நா.பார்த்தசாரதி





எப்போது படித்தாலும் பிரமிக்கத்தக்கது மகாபாரதம். ஏதேனும் ஒரு புதிய விஷயம் தென்படுவது மகாபாரதக் கதைகளில் தான். நா பார்த்தசாரதியின் அறத்தின் குரலும் மகாபாரத கதையின் சுருக்கம் தான்.

சன் டிவியில் பார்த்த பி.ஆர்.சோப்ராவின் பாரதத்தை பார்த்ததால் படிக்க படிக்க அப்படியே காட்சி விரிந்தது.திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவரின் பிறப்பிலிருந்து கதை தோன்றுகிறது. திருதராட்டிரன் மன்னனாகவும், பாண்டுவை சேனாதிபதியாகவும்,
விதுரனை அவனுடைய அறிவாற்றலுக்கு ஏற்ற அமைச்சராகவும் நியமிக்கிறார்கள். திருதராஷ்டிரனுக்கு காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை மணமுடித்து வைக்கிறார்கள்.

கன்னியான குந்தியின் அரண்மனைக்கு வரும் தவ வலிமைமிக்க துர்வாச முனிவருக்கு ஓராண்டு பணிவிடை செய்த காரணத்தினால்  அவளுக்கு ஒரு வரம் அளிக்கிறார்.  உனக்கு விருப்பமான எந்த தேவர்களை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறினாலும் அழகும் ஆற்றலும் மிக்க ஒரு புதல்வனை உனக்கு அளித்து விட்டுச் செல்வார்கள்.மந்திரத்தை விளையாட்டுத்தனமாக சோதித்துப் பார்க்க நினைத்த குந்தி சூரியனை நினைத்ததால் அவர் மூலம் கரணன் பிறந்தான். செய்வதறியாது திகைத்த குந்தி கர்ணனை ஆற்றில் விட்டு அதன்பின் பாண்டுவை மணமுடித்து இருவரும் வாழ்ந்து வந்தனர்

இந்தும முனிவரிடம்
பாண்டு பெற்ற சாபத்தினால் எப்போதெல்லாம் மனைவியை இன்பம் நாடி தீண்டுகிறாயோ அப்போது இறந்து போவாய் எனும் சாபத்தினால் குந்தியை தீண்டவில்லை. அதன்பின்னர் குந்தியின் வரத்தின் மூலம் தருமராசன் மூலம் தர்மனும் வாயுதேவன் மூலம் பீமனும் இந்திரன் மூலம் அர்ஜுனனும் 3 ஆண்கள் பிறந்தனர். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்திரிக்கும் இதேபோல் வரத்தை அளித்து அஸ்வினி தேவர்கள் இருவரின் மூலம் நகுல சகாதேவன் பிறந்தனர். ஒருகட்டத்தில் பாண்டுவின் சாபத்தினால் இறக்கிறார்.அவருடன் மாத்திரியும்.

அப்போது இருந்தே காந்தாரியின் குடும்பத்திற்கு குந்தியின் குடும்பம் மேல் பொறாமை இருந்துகொண்டே இருந்தது. இளமையிலிருந்து நடைபெறும் போராட்டமும், துரோணாச்சாரியார் எவ்வாறு பாண்டவர்கள் கௌரவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார் என்ற வரலாறும், இளமையிலேயே முளைத்த பகைமை எப்படி இறுதிவரை தொடர்கிறது என்பது குறித்த வரலாறும், பாஞ்சாலியை திருமணம் செய்த கதையும்,பாஞ்சாலியை தாயின் கட்டளைக்கிணங்க ஐவர் பங்கிட்டு கொண்டதையும் கூறிய முதல் பருவம் முடிகிறது.நாட்டுக்காக துரியோதனன் செய்த சூழ்ச்சியும் நாவல் முழுக்க நமக்கு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது

இரண்டாம் பாகத்தில் வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்ட பாண்டவர்களை வம்படியாக சூதாட்டத்திற்கு அழைத்துச் செல்ல விதுரனை தூது அனுப்புகிறார்கள். சூதாட்டத்தில் ஒவ்வொரு பொருளாக வைத்து ஆடி தோற்றுப்போன தர்மன் இறுதியில் கானகம் செல்வதோடு இரண்டாம் பாகம் முற்றுகிறது

காட்டில் அர்ஜுனன் தன் தவத்தின் மூலம் வரம் பெறுவதும், பீமன் யாத்திரை மூலம் வரம் பெறுவதும் 12 ஆண்டுகள் வனவாசத்தில் பல்வேறு இடங்களுக்கு அலைவதும் வனவாசம் முடிந்து ஒரு சிறு போருடன் வெளிப்படுவதும் விறுவிறுப்பாக இருக்கிறது.

போர் குறித்து பல்வேறு விஷயங்களை அலசி போர் நியாயம் தானா என்பதை எல்லாம் இருதரப்பினரும் பேசி முடிவில் கண்ணன போர் பற்றி பேச அஸ்தினாபுரம் வரும்போது துரியோதனன் அவரை மதிக்காமல் அரண்மனையிலேயே இருந்து விடுகிறான்.விதுரன் மட்டுமே எதிர்கொண்டு அழைத்துப் போய் விதுரன் மாளிகையில் தங்கி ஆலோசனை நடத்தி விட்டு செல்கிறார்.தன்னை காணாமல் விதுரனை கண்ணன் கண்டதால், துரியோதனின் கோபமெல்லாம் விதுரன் பக்கம் திரும்புகிறது. ஆகவே விதுரனை மிகவும் கேவலமாக திட்டியதால் விதுரன் நான் போர் புரியமாட்டேன் என்று வில்லை உடைத்து போடுகிறார். இப்படி ஒவ்வொருவராக அவர்களில் சிலர் போருக்கு வராததை கிளை கதைகளுடன் கதை சொல்கிறது.

போர் துவங்கிய நாள் முதல் போரின் முடிவு வரை ஒவ்வொரு நாள் நிகழ்ந்த சம்பவங்களும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் 14 வருஷஙகளாக காட்டில் மறைந்திருந்த தர்மம் மீண்டும் அரியணை ஏறிய துடன் புத்தகம் நிறைவுறுகிறது


*பாஞ்சாலியை திருமணம் செய்ய கர்ணன் எத்தனித்த போது அவனுடைய வில் தலையிலே முட்டி தடுமாறி முடியையும் அவனையும் கீழே விழும்படி செய்துவிட்டது. 

*கசப்பு என்ற சுவை இருப்பதால் தான் இனிப்பின் பெருமை விளங்குகின்றது

*விதி என்பதோ அல்லது இயற்கை என்பதோ தவறிக்கூட அநீதிக்கு துணை செய்வதில்லை

*நம்புவதில் தான் எல்லாம் இருக்கிறது நம்பாததில் எதுவுமிலலை

*உலகத்தில் எல்லாருமே கன்னத்தில் அறைந்து பல்லை உடைத்த கைகளுக்குதான் பயப்படுகிறார்கள் அணைக்கிற கைக்கு பயப்படுவதில்லை.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment