Saturday, 29 April 2017

மலரும் நினைவு

மலரும் நினைவுகள்

ஒரு இருபத்து நாலு வருசத்து முன்னால்(1993) எங்கள் வீட்டில் வாங்கிய முதல் டிவி டைனோரா.கீழே உள்ள மாடலில் கருப்புகலர்.அந்த டிவி வைப்பதற்காக எங்க அப்பா டான்சியில் வேலை செய்த போது டேபிள் செய்து கொண்டு வந்தார்.நான் மூணாவது படிக்கிறேன்.காலையில் 8மணிக்கு கோபு என்ற எலக்ட்ரிசன் தான் வந்து செட் பன்னினார்.பட்டையான ஒயரைஎடுத்து சீவிக் கொண்டு மேலிருந்த ஆன்டனாவுக்கு இணைப்பு கொடுக்க ஆயத்தமானர். ப்ளு கலரில் இருந்த அழகிய டப்பாவை பூஸ்ட் னு சொன்னார்.ஹார்லிக்சையே பச்சையா திங்கிற நமக்கு பூஸ்டானு நினச்சிக்கிட்டு பள்ளிக்கூடம் போயிட்டேன்

ஸ்கூலில் பூராவும் இதே நினைவு தான்.எங்க வீதியிலயே இது இரண்டாவது டிவி.முதலில் இருப்பது அஞ்சு வீடு தள்ளி BPL டிவி.ஞாயித்துக்கிழமை டிவி பாக்க பத்துபைசாவிலிருந்து இருபது பைசா அதிகப்படுத்தியதே டிவி வாங்க உடனடி காரணம்.இனி ஒளியும் ஒலியும்,நிஷாகந்தி,இந்திநாடகம்,இந்திரஜித் பாக்கலாம்.ஸ்டாண்டிங் காமிரா வைத்து பொதிகையில் நாடகம் வரும் ஒருமணி நேரம் பார்க்கலாம்.திரைமலர் பாக்கலாம்.
எதிரொலி மட்டும் பார்க்கமாட்டோம் ஒரே போர்.சனிக்கிழமை மராத்தி,வங்காளி படம்.வெள்ளி இரவு இந்திப் படம்.தேசிய நாளில் பிரதமர்/ஜனாதிபதி உரை கேட்போம்(இந்தியில் தான்)
அப்போ அது பேமஸ்.ஏழைஜாதி சூட்டிங் ஸ்பாட் காமிப்பாங்க..ஒரே குசி

மாலை வந்தவுடன் நான்தான் டிவி போட்டேன்.அப்போது 'கொய்ங்' ஒரு சத்தம்.மாலை 6மணிக்கு மேலதான் மண்டல ஒளிபரப்பு.அதுவரை காத்துக்கிட்டிருந்தோம்.அப்போது நிமிடம் ஓடியது.ஓடிமுடிஞ்சதும் வணக்கம் சொன்னார்கள்.நானும் வணக்கம் சொன்னேன்.அப்பெல்லாம் டிவியில் வணக்கம் சொன்னால் நாமும் சொல்வதுதான் மரியாதை..

இரவு செய்தி வரும்.அதில் ஷோபனா ரவியை ரசிப்பதக்கென்றே பெண்கள் கூட்டம்.நாங்க பார்க்கும் போது வரதராஜன்,நிஜந்தன்,ஸ்ரீ தர்,ஜெயஸ்ரீ சுந்தர்,சந்தியா ராஜகோபால் னு வருவாங்க.ஞாயித்துக்கிழமை பரதநாட்டியத்தை மணிக்கணக்கில பார்ப்போம்.அப்புறம் படம் போடுவாங்க.முதன்முதலில் நான் டிவியில் பார்த்தது மாநகரக்காவல். ஏறகுறைய ஒரு முப்பத்தைந்து பேர் இருப்பாங்க.பெண்கள் வெங்காயம் தொலித்துக்கொண்டே பாப்பாங்க.கரன்ட் கட் ஆனா உடனே போகமாட்டாங்க.கொஞ்ச நேரம் உக்காந்திட்டுதான் போவாங்க

ஜனூன், சந்த்ரகாந்தா, கனூன், ஜெயின் ரோபாட், என் இனிய இயந்திரா, வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிறன்று சித்ரகார், ரங்கோலி, டெல்லி அஞ்சல், முதல் VJ ப்ரியா, உஜாலா, நிர்மா, லைப்பாய், நரசூஸ் காபி (உசிலை மணி), லியோ காபி (அர்விந்த் சுவாமி), ஹமாரா பஜாஜ், கண்ணன் தேவன் தேயிலை (பி.டி. உஷா), உட்வாட்ஸ் க்ரைப் வாட்டர்

" டெக்'" கில படம்

முதன் முதலில் டெக்கில பார்த்த படம் மாப்பிள்ளை ரஜினி படம்.அடுத்தது படம் முடிந்ததும் செந்தூரப்பூவே.அப்புறம் சாப்பிட்டு அரை மணி கழித்து புலன் விசாரணை

அந்தப் புலன்விசாரணை படத்தை இப்ப டிவியிலும் போடுவதில்லை.முதல் பாட்டு "அதுதான் அதுக்குத்தான்,இதுதான் இதுக்குத்தான்" னு ஒரு பாட்டு.அடுத்தநாள் பள்ளிக்கூடம் பூரா அந்த பாட்டுதான் பாடினோம்

கேபிள் கனெசன்

ஒரு வருசத்திலயே சன் டிவி கனெக்சன் குடுத்திட்டோம்.அப்போ மூனே டிவி சன்,ராஜ்,விஜய்க்கு பதிலா ஈகிள் டிவினு இருந்தது.முதல் படம் சன் டிவியில் பாத்தது "கீதாஞ்சலி" அப்புறம் "முத்து என் சொத்து" பிரபு படம். அப்பெல்லாம் சன் டிவி லோகோ இது அல்ல.டிஸ் ஆன்டனா மாதிரி விளம்பரம்.அதுக்குப்பிறகுதான் கடலில் வருவது போல.ராஜ் டிவி அப்போதே மங்கல் தான்.மாலை 6மணிக்கு ராஜ் டிவியில் படம்.முதலில் அதில் பாத்தது தீர்த்த கரையினிலே மோகன் படம்.

*ராத்திரி படம் முடிஞ்சதும் சட்டரை சாத்தி பூட்டிடுவோம்
*இடி இடிச்சா பிளக் ஒயரை பிடுங்கி விட்டு,அதையே பார்த்திட்டு நிற்போம்.
*அடிக்கடி எலி போயிடும்.டிவி பெட்டிய விட்டு வராது.
*முதலில் பாத்த திரில் நாடகம் நிசாகந்தி
*திங்கள் டூ வெள்ளி மாலை 6மணியிலிருந்து ஒன்பது மணி வரை மட்டும் ஒளிபரப்பு.பகலில் டிவி போட்டா புள்ளி புள்ளியா வரும்
*மூவி க்ளப் னு ஒன்னு ஆரம்பிச்சு அது கேபிள் கனெக்சன் உள்ள வீட்டுக்கு மட்டும் வரும்னு சொல்லிட்டாங்க

*வீட்டுக்கூரை மேல யார் டிவி ஆன்டனா பெருசா இருக்குனு விவாதம் வரும்.

*தடங்கலுக்கு வருந்துகிறொம்,திரைப்படம் தொடர்கிறது போன்ற ஸ்லைடு அதிகம் வரும்

ராஜிவ் காந்தி கொலையின் போது பக்கத்து வீட்டு டிவியை விழுந்தடித்து பாத்தோம்.

#இன்று டிவியை பார்க்கிறோம்.ஆனால் அந்த பழைய ஈர்ப்பு இல்லை.அப்போதெல்லாம் பார்க்க பார்க்க நினைவு மலர்ந்துச்சி.இப்போ நினைவு மலுங்கிவிட்டது.பழையன கழிதழும் என்பதில் அந்த நினைவுகளும் கழிந்துவிட்டது..அப்போது கனவு பெரிதாய் இருந்தது.நம்பிக்கை பெரிதாய் இருந்தது.இப்போது டிவியை பார்க்கும்போது சலிப்பு மட்டும் பெரிதாய் இருக்கிறது.

அந்த 1990 கால கட்டம் செருப்புகளில் நடந்த காலம்.சிறகுகளை கட்டிக்கொள்ள ஆசைப்பட்டு வானத்தில் பறக்கிறோம்.அந்த செருப்பு அதே இடத்தில் கிடக்கிறது.இனி அதை அணிய முடியாது.மேலிருந்து பார்த்தாவது சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்..

"சர்க்கரை வியாதிக்காரன் ஜாங்கிரியை பார்ப்பது மாதிரி"!

தோழமையுடன் மணி

No comments:

Post a Comment