பதிமூன்று ஆண்டு காலம் காட்டில் வனவாசம் காலத்தில் எள்ளளவும் கவலையின்றி பொறுமையாக இருந்த தர்மரைப் பார்த்து பாஞ்சாலி கேட்டாள்.
''பதிமூன்று ஆண்டுகள் இப்படிக் காத்திருப்பதற்குப் பதிலாக... இடையில் நீங்கள் போய் ஏன் துரியோதனனைக் கொல்லக் கூடாது? சத்தியம், பொறுமை என்று தர்மத்தையே வாழ்வெனக் கொண்டு வாழ்ந்தும், நீங்கள் காப்பாற்றும் தர்மம் உங்களைக் காக்கவில்லையே? காட்டில் பிச்சை எடுத்து வாழ வைத்து விட்டதே?''
தர்மர் அமைதியாகச் சொன்னார்.
''பெண்ணே, தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை. அப்படிச் செய்தால் அது வியாபாரம். நான் தர்ம வியாபாரி அல்ல. தர்மத்தைக் காப்பது என் பிறவிக்கடன். தர்மங்கள் என்னைக் காத்தாலும், காக்காது போனாலும் அவற்றைக் காப்பது என் கடமை. அதிலிருந்து நான் நழுவவே முடியாது.!''
No comments:
Post a Comment