Wednesday, 12 April 2017

சாந்திநாராயணன்

யார் வீட்டு உலைக்கு நீ
உன் உயிர் தந்தாய்.?

யார் கொள்ளை மறைக்க
உன் ரத்தம் தந்தாய்.?

கட்டிய மனைவியும்
கைக் குழந்தையையும்
கடைசியாய் அணைக்க
பின் கட்டிய உன் கரங்கள் தேடினவா?

கூலியும் பேட்டா காசும்
தானடா உன் நோக்கம்.
துப்பாக்கிக்கும் தோட்டாவுக்கும்
உன் மேல் என்னடா நோட்டம்?

கர்ப்பிணி கருவை
எடுத்து அறுத்தவன்,
உருத் தெரியாமல்
உயிரைச் சிதைத்தவன்
உண்டே இங்கு ஆயிரம்

அவன் ரத்தம் கேட்காத தோட்டா
மரம் அறுத்த உன்னை மட்டும்
தேடி வந்ததேயடா

அறுத்தது மரம் தானடா
மரம் தானடா?
சுட்டவன் நீ மனுஷன் தான்
என்பதை மறந்தானடா. மறந்தானடா.

இனி தேசிய கீதம் பாடினால்
நானும் வெறும் மரம் தானடா!

No comments:

Post a Comment