*யூமா வாசுகி* அவர்களின் குங்குமம் இதழில் வந்த " கைகள்" என்ற கவிதை 👇🏻
💥அம்மாவுக்கு
என் கைகளின் மீது மிகவும் ப்ரியம்
அவள் காய்ச்சலாகக் கிடக்கையில்
" ஒங்கையால ஒரு வாய்
சுடுதண்ணி வச்சுக்கொடுய்யா" என்பாள்.
💥அச்சில் வந்த என் கவிதையை
" ஒங்கையால எழுதினதா இது?
என்று வியந்தாள்
" வாயக்கசக்குது
ஒங்கையால இரண்டு வெத்தில
வாங்கிவா தம்பி" என்பாள்.
💥தெருவில் போகிற ஜோதிடனை
வீட்டிற்குள் அழைத்து
" இவங்கையால தாலி கட்டிக்கிற பாக்யவதி
எப்போ வருவா,
இவங் கை பார்த்துச் சொல்லுமய்யா' என்பாள்.
படிப்பு முடிந்த கையோடு
சொந்தமென்றிருந்தவர்களிடம் அம்மா சொன்னாள்
" தகப்பனில்லாப் புள்ள ஐயா
கை தூக்கி விடணும்'
அழுகைக்கான ஒத்திகையோடு
வேலை வேண்டிப்போய்
ஆறுதல் சொன்னவனாய் திரும்பியபோது
வெறுங்கையிலிருந்தது
பாதிப்பிராயம்.
💥" ஒங்கையால ரெண்டு காசு சம்பாதிச்சி
கால் வவுத்துக்கஞ்சி எப்ப ஊத்தப்போறே'
என்று வரும் அம்மாவின் புலம்பல்..,
' இன்னமும்
கையூணிக் கரணம் போடத் தெரியலயே'
என்று வருந்துகிறதே தவிர,
நான் ஒத்துக்கொள்ளத் தயாராயிருந்தும்
கையாலாகாதவன் என்றென்னை
ஒரு போதும் இகழ்ந்த்தில்லை.
No comments:
Post a Comment