Saturday, 29 April 2017

பிழைதிருத்தியின் பதிவு

*எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி கால வரிகள்:*
*“ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த* *போது ஏரோப்ளேன் ஓட்டவும் கித்தார் வாசித்து உலகை வெல்லவும் நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்.*
*நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, எழுபது வயதில் காலை* *எழுந்தவுடன் சுகமாய் பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகின்றேன், வாழ்க்கை இவ்வகையில் ப்ரொக்ரஸீவ் காம்ப்ரமைஸ் ( படிப்படியான* *சமரசங்களால் ஆனது ) இன்றைய தினத்தில் என் டாப் டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால் ,, முதலிடத்தில் உடல்நலம் , மனநலம் , மற்றவருக்கு தொந்தரவு* *தராமல் இருப்பது , இன்சொல் அனுதாபம், நல்ல காபி , நகைச்சுவை உணர்வு , நான்கு* *பக்கமாவது படிப்பது எழுதுவது..இந்தப் பட்டியலில் பணம் இல்லை”,*
*-----* *கற்றதும் பெற்றதும் - சுஜாதா...*

No comments:

Post a Comment