*நிழலின் ஆழம்*
மலை முடியில்
மத்தியானத்தைக் கொளுத்தி
இசை விரல்களின் நுனி நகங்களை
மெது மெதுவாக கடித்து
இமைத் தாளங்களின் தெறிப்பை
வெளியெங்கும் துழாவும் விழிகளுக்கு
நிழல்கள், ஒலியின் காயங்கள்.
நிழலின் ஆழத்தை அளந்து அறுதியிட
தொடங்குகின்றன சுவர்கள்
நிலத்திலிருந்து வானத்தை நோக்கி.
இப்போதும் கற்பானை பாறையின்
ஒற்றை வட்ட உதட்டில்
கால் முளைத்த மச்சமாக
கலையாமல் அமர்ந்திருக்கும் பெயரற்ற குருவி
பூவின் எல்லையில் ஓர் புன்னகை.
-பிரான்சிஸ் கிருபா
No comments:
Post a Comment