திருமாவேலன் பதிவிலிருந்து:
அந்த கிராமத்து மக்களுக்கு குடிநீருக்காக இருந்தது அந்தக் கிணறு. தேனாய் இனித்தது தண்ணீர். அந்த தண்ணீரை தலித் மக்கள் குடிக்க அனுமதிக்கவில்லை ஊர் மக்கள். அவர்கள் வேறு எங்கோ தூரத்தில் இருந்து எடுத்து வந்தார்கள்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவசரத் தேவைக்காக இந்தக் கிணற்றில் இருந்து எடுத்துவிட்டார்.
ஊரே ரணகளமாகி ஒன்றுகூடிவிட்டது. கிணற்றில் உள்ள மொத்தத் தண்ணீரையும் இறைத்து வெளியேற்றிவிட வேண்டும் என்று அந்தக் குடும்பத்துக்கு தண்டனை தந்தார்கள்.நான்கு நாட்கள் இரவும் பகலுமாய் இறைத்து தண்ணீரை வெளியேற்றியது அந்தக் குடும்பம். ஊரை விட்டும் வெளியேறியது அந்தக் குடும்பம்.
கிணற்றுக்குள் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை. வெறும் சகதி.
புது ஊத்து பிறக்கட்டும் என்று ஊரே நின்று வேண்டிக்கொண்டது. வேண்டுதல் வீண் போகவில்லை. புது ஊத்து வெடித்து தண்ணீர் வெளியேறியது.
குடித்துப் பார்த்தார்கள் மக்கள். வாயில் வைக்க முடியவில்லை.அவ்வளவு கரிப்பு.. உப்பு...துப்பித் தீர்த்தார்கள்
-இந்தக் கதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்கிறார் பாண்டியன்.
கதை வந்த இதழ்: புதிய பார்வை
கிணறு வெட்ட உண்மையில்
பூதம் கிளம்பி இருக்கிறது.
No comments:
Post a Comment