Tuesday, 18 April 2017

வெள்ளியங்கிரி

🌹மணிகண்டபிரபு🌹

வெள்ளியங்கிரி பயண அனுபவம்

வெள்ளியங்கிரி மலை ஏற நண்பர்களுடன் ஒரு வாரத்திற்கு முன்பு முடிவு செய்யப்பட்டு 15ம்தேதி மாலை திருப்பூரிலிருந்து கிளம்பினோம்.அஞ்சு பேரும் ஆட்டத்துக்கு புதுசு.ஏதோ பழநி மலை,ஊதியூர் மலை ஏறுவது என நினைச்சோம்.கோவையிலிருந்து டாக்சி மூலம் இரவு பத்தரை மணிக்கு சென்றோம்.இருபது ரூபாய் கட்டி ஆளுக்கொரு கம்பு வாங்குனோம்.போட்டோ எடுத்து எட்டுப்பட்டி ராசா நெப்போலியன் மாதிரி போஸ் கொடுத்தோம்.பிளாஸ்டிக் பொருள் கொண்டு செல்ல சோதனை செய்யப்பட்டு இரவு 11.30மணிக்கு ஏற ஆரம்பித்தோம்.

இப்ப விடுறா பாக்கலாம்னு வடிவேல் சொல்ற மாதிரி படி ஏற ஏற காலில் கொஞ்சம் வலி ஆரம்பித்தது.வெசம் அப்பிடித்தான்னே இருக்கும் சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரசன் வருவது போல் வந்தது.பின்னால் வருபவருக்கு வழி விட்டு உக்காந்து உக்காந்து போனோம்.முதல் மலை பாத்ததும் ராமசாமி பணத்த எடுத்து வைடானு ஏறிட்டோம். ஏற மட்டும் 3மணி நேரம்.கீழ இறங்குறவங்க யார கேட்டாலும் அஞ்சு மணி,ஏழு மணி நேரம் ஆகும்னு சொல்லும்போதெல்லாம் வயித்துக்குள்ள வடை சுடுற மாதிரி இருந்தது.

இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான் இந்த கோட்டைசாமி னு நினைச்சிட்டு இரண்டாவது மலை ஏறினோம்.டிபன் எப்ப சார் போடுவீங்க மாதிரி எப்ப முடியும்னு ஆயிருச்சு.கொண்டு போன தண்ணீர் ஏழு பாட்டில் காலி.வாழ்க்கையில் இவ்வளவு வேர்வை வந்தது முதல்முறை பாத்தேன்.

மூனாவது மலையில் படி இல்லை.வெறும் பாறை அதுவும் ஒழுங்கற்று கிடந்தது.உன்னை எவன்டா ஜாங்கிரி குடுக்க சொன்னது ப்ளான் போட்டவனை கண்டபடி திட்டுனோம்.உடன் வந்த ஒருவருக்கு அன்று பிறந்தநாள்.நாங்க எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்னு புலம்பினாரு.எனக்கும் இன்னொருத்தருக்கும் சாட்சின் அடியில் கிழிந்துவிட்டதால் பனியன் இழுத்து கவர் பன்னியிருந்தோம்.இப்பிடியே அஞ்சாவது மலை போகும்போது விடிஞ்சிருச்சி.கோவையின் அழகு செம்ம.5,6 மலைகள் ஏற்ற இறக்கத்துடன் நடந்துசெல்லும் ஒத்தையடி பாதை.

ஏழாவது மழையை பாத்து திகைச்சிட்டோம்.செங்குத்தா உயரமா அட சாமி இதுல எப்பிடி ஏறுவது மலைச்சிட்டோம்.சரியா 2மணி நேரம் ஆச்சு.மேல கோயில் பாறைக்கு இடையில் சுயம்பு லிங்கம் இருக்கும்.லிங்கத்தின் பின்னால் கண்ணாடி இருக்கிறது.சூரிய ஒளி லிங்கத்தின் மேல் படும்.வெறுமனே மலையின் பிரம்மிப்பை பார்த்திருப்பவருக்கு அம்மலையை காலால் கடந்து வெண்முகிலை முத்தமிடுவது சூப்பர் பாஸ்.சிறுவாணியின் அணையின் எழில்மிகு தோற்றத்தை பார்த்தோம்.மேலே கோயில் எளிமையாய் இரு பாறைக்கு இடையில் இருக்குது.

அரை மணி நேர ஓய்வுக்கு பின் பார்கே பார்கேனு காலுக்குசொல்லிட்டு இறங்கினோம்.கொஞ்சம் வேகமா. போடுறா தம்பி பிரேக்கை கையிலிந்த தடியூன்றி நிற்போம்.உடலின் மொத்த எடையையும் காலின் இரு முட்டிகளும் தாங்கியது.செம பெயின்.ஆறாவது மலை சுனையில் ஒரு ஐஸ் பார் குளியல்.செம ஜில்.கொஞ்ச தெம்பு கிடைக்கும்.இப்ப மேல ஏறி வர்றவங்களை பாத்து உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்குனு சொன்னோம்.வயதானவர் முதல் நாலாவது,இரண்டாவது படிக்கும் குழந்தைகளும் ஏறினாங்க.உக்காந்து உக்காந்து சிவா எங்கடா இருக்கேனு விவேக் கேட்கிற மாதிரி அடிவாரம் எங்கிருக்குனு பார்க்க ஆசையா இருந்துச்சு.
நண்பர்களுடன் போனாலே செம ஜாலி.கரடி காட்டெருமைதான் அங்கு அதிகமாம்.

அப்பிடீயே படிப்படியா ஏழு மணி நேரத்தில் வந்துட்டோம்.

கடைசியா கீழ உட்காரும்பொது ப்ரன்ட்  என்னாச்சுனு கேட்டான்.உனக்கு ஒன்னுமே தெரியாதானு கேட்டேன்

டிப்ஸ்:
பேக்கில் அதிக பொருள் வேண்டாம்.அதுவே எமன்
#இதயநோய்,பிரசர்,சுகர் உள்ளவர் ஏற வேண்டாம்
#மேலே எந்த பொருளும் இருபது ரூபாய்
#தண்ணீரை சிப் சிப்பா குடிக்கனும்
#வெறும் காலில்தான் நடக்கனும்
#அதிகம் சாப்பிட்டு ஏறக்கூடாது
#குளுக்கோஸ் கொண்டு போகனும்
#படுத்து தூங்க கூடாது
#டார்ச் அவசியம்.இருபுறம் காடாய் இருப்பதால் அதினுள் டார்ச் அடித்தால் அந்த வெளிச்சத்தில் வந்துடனும்
#வருடத்தில் பங்குனி,சித்திரையில் மட்டும் அனுமதி
#24மணி நேர தரிசனம்
#சிறுவாணி அணையைப் பார்க்கலாம்
#இப்பதிவு செல்லாதவருக்கும்,முதல் முறை செல்வோருக்கும்
#கோவையிலிருந்து 36கி.மீ
(பூண்டி)

*இது ஆன்மிக பயணமோ,ஒரு மதக்கடவுளுக்கு உரியதோ அல்ல

ஒரு கஷ்டம் உணர்த்தும் பாடம் என்பது இன்பமான நேரங்களில் அந்த கஷ்டத்தை நினைத்து சந்தோசப்படுவது தான். இந்த உடல் வலி அனைத்தும் அந்த அனுபவம் எனும் வலிநிவாரணியை நினைத்துக் கொள்வது

த்ரில்+அனுபவம்
ஒருவாட்டி போயிட்டுவாங்க பாஸ்

No comments:

Post a Comment