Wednesday, 12 April 2017

உழைப்பு

உழைப்பு..

ஒரு துறவி தனது துறவுப் பயணத்தின் போது இடையில் ஒரு ஊருக்குள் நுழைய நேர்ந்தது.
ஊருக்கு முன்னேயான வெற்று வெளியில் நடந்து கொண்டிருந்தார் அவர்.
அது ஒரு மதிய வேளை.
வெயில் வேறு கொடூரமாய் அடித்துக் கொண்டிருந்தது.

துறவிக்கோ நல்ல தண்ணீர் தாகம்.
கண்ணுக்கெட்டியவரை வறண்ட காடு.
எங்கும் நீர் கிடைக்கவில்லை.
அப்போது ஒரு இளைஞன் தன் வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவனிடம் தண்ணீர் கேட்டார்.
அவனும் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்ததும் அந்த இளைஞனிடம் சொன்னார்.

''தம்பி, நீ கொடுத்து வைத்தவன். ஊரே வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது. உன் கிணற்றில் மட்டும் நீர் இருக்கிறது. கடவுளின் பூரண அருள் உனக்கு இருக்கிறது.''
இளைஞன் துடிப்புடன் சொன்னான்.
''துறவியே... வரும் வழியில் பார்த்திருப்பீர்கள். இந்த ஊர் முழுக்க பாறையாக இருக்கிறது. இந்த இடமும் அப்படித்தான் இருந்தது. இதை வாங்கியபின் ராப்பகலாய் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தை சீர் திருத்தி அதன் பலன் இப்போதுதான் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படி நான் உழைத்ததன் பலனை, சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே!''

துறவி சொன்னார்.
''தம்பி, உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?'' என்று கேட்டார்.
அதற்கு இளைஞன் சொன்னான்.
''துறவியே... நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது. கடவுளும் இருந்தார். கடவுளும் நிலமும் மட்டும் இங்கே இருந்தபோது... இந்த நிலத்தைப் பார்க்க சகிக்கவில்லையே

No comments:

Post a Comment