திருமாவேலன்
1. இது குறைபாடுகள் உள்ள சமூகம் தான்.ஆனால் குறைபாடுகளை பாதுகாக்கும் சமூகத்தில் வாழக்கூடாது
2 நீங்கள் பலமற்றவர்கள் என்பதாலேயே ஒடுக்கப்பட்டுள்ளீர்கள்.
3 மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு பாதுகாப்பை நம்பி அழிந்துபோவதைவிட, மிகவும் அய்யத்துக்குரிய அச்சங்களை எழுப்பி வசவுகளைப் பெறுவதையே நாங்கள் விரும்புகிறோம்
4 நாம் சமூக அளவிலும் மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை
5 ஒருவனின் சுயநலத்தோடு அறிவு முரண்படும்போது அறிவு தோற்றுவிடுகிறது.
6 நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உங்களுக்கு நல்லது எது என்பதைச் சொல்வது என் கடமை
7 சாதி உணர்வு கொண்ட நல்லவனால் என்ன பயன்? நல்லவன் செய்த குண்டு வெடிக்காமல் இருக்குமா?
8 தான் அடைந்துள்ள உரிமையைப்
பிறரும் அடைய அனுமதிக்காத எவரும்
மக்களாட்சியில் பங்கெடுக்கக் கூடாது
9 நான் விரும்பும் அமைதி என்பது நீதியை அடிப்படையாகக் கொண்டது
10 எனது செய்தி இதுதான்:
போராட்டம். மேலும் போராட்டம்.
தியாகம். மேலும் தியாகம்.
- மாமனிதர் அம்பேத்கர்
No comments:
Post a Comment