Wednesday, 12 April 2017

படித்ததில் பிடித்தது

குறைகுடம்.!

ஒரு வண்டி போய்க் கொண்டிருந்தது.
வண்டிச் சக்கரங்களில் ஒன்று பலமாய் கிரீச் கிரீச் என்று குரல் எழுப்பிக் கொண்டே வந்தது.
வண்டிக்காரன் கீழே இறங்கிப் பார்த்தான்.
அந்தச் சக்கரம் மற்ற சக்கரம் போல இல்லாமல் குறைபாடுகளுடன் இருந்தது.
வண்டிக்காரனுக்கு வந்தது கோபம்.
அவன்,''நீதான் ஏகப்பட்ட குறைகளுடன் இருக்கிறாயே... கொஞ்சம் அமைதியாக இருக்கலாமில்லையா.? எதற்கு இவ்வளவு சப்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறாய்?'' என்று கேட்டான்.
சக்கரம் சொன்னது.

''இந்த உலகம் தோன்றிய காலம் முதல், யாருக்குக்குறை இருக்கிறதோ... அவர்கள்தான் அதிக ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கமாய் இருக்கிறது. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா?'' என்றது.

No comments:

Post a Comment