Sunday, 30 April 2017

சுஜாதா

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான்.
பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.
கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.
”ஏன் கழுதாய்?”
கழுதை சொன்னது,
" நான் உன்னுடன் இருந்தாலும் பொதி சுமக்கத்தான் போகிறேன்... உன் எதிரிகளுடன் இருந்தாலும் பொதி சுமக்கத்தான் போகிறேன் ... எனக்கு எஜமான் யாராக இருந்தால் என்ன??"
நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!
#சுஜாதா.

No comments:

Post a Comment