பாகுபலி 2 விமர்சனம்
*மணி*
எல்லாரும் விமர்சனம் போடுறீங்க
இருங்கப்பா,எங்க கிட்டயும் சீப்பு இருக்கு
நாங்களும் விமர்சனம் எழுதுவோம்
கட்டப்பா ஒரு அடிமை.அதனால் ராணா கொல்ல சொல்லிருப்பாரு இது தெரியாதானு வாரமலர்ல குறுக்கெழுத்து போட்டி மாதிரி நினைச்ச மக்களை இல்ல இல்ல அது பாக்யா வில் வருகிற சொடோக்கு போட்டி மாதிரி செய்த இயக்குநருக்கு நன்றி.
டைட்டில்லயே முதல் பாகத்தை சொல்லிடுறாரு..அப்புறம் ஓபனிங் சீனே மரண மாஸ் மாதிரி தேரை இழுத்து தெருவில் விட்டு யானை அடக்குறாரு அப்பா பாகுபலி. போற பஸ்ல ஏறுவது,சாமி கும்பிட்டு ஹீரோ மணி அடிப்பது,திடீர்னு அத்துட்டு வரும் மாட்டை அடக்குவது,செருப்பிலிருந்து முகத்துக்கு முன்னேறும் சீன் வைத்த இயக்குநரெல்லாம் இத பார்த்து நோட் பன்னுங்கப்பா ஓபனிங் சீன் ஐ
ஊர் மக்கள் நிலை அறிய பாகுபலியும் கட்டப்பாவும் நகர் வலம் சென்றிருக்கும்போது அனுஷ்கா வை பார்க்கிறாங்க.அவுங்களுக்கும் நல்ல ஆக்சன் சீனுடன் ஓபனிங்.அவங்க சிம்பிளான பொன்னு இல்ல சீரியசான சிந்து மாதிரி டேலன்டான பெண்ணாய் காட்டியிருக்காங்க.
அவங்க அரண்மனையில் எடுபிடி வேலைக்கு ராசுகுட்டி பாக்யராஜ் மாதிரி போறாங்க.
அனுஷ்காவை ராணா வுக்கு பெண் கேட்டு சிவகாமி சீர்வரிசையுடன் பெண் கேட்க அவுங்க அப்ரோச் சரியில்லைனு ரிஜக்ட் செய்ய காண்ட் ஆகி காண்டாமிருகமான சிவகாமி பாகுபலியை போர் தொடுக்க செய்ய ஓலை வருது.கடமையை செய்ய
வாங்க முன் ஜாமினில் வெளிய வரலாம்னு கூட்டிட்டு போய்,அங்க அனுஷ்கா பாகுபலிதான் வேணும்,ராணா வேண்டாம்னு சொல்லும்போது பணம் இல்லாத ஏடிஎம் ஐ பார்த்த மாதிரி இன்னும் கோபமாகி, பாகுவுக்கு 2 ஆப்சன் தர்றாங்க.அரியணையா? அனுஷ்காவானு? இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்றை கிடச்ச மாதிரி
அனுஷ்காவை செலக்ட் செய்து சேனாதிபதி ஆகுறாரு.பதவி பிரமாணத்தில் ராஜாவைவிட பாகுவுக்கு அப்ளாஸ் அல்ல,இவன் செத்தாதான் நிம்மதி நினைக்கிறார் ராணா
இது தான் இடைவேளை.நாமே வாழ்க வாழ்க னு கத்திக்கிட்டு வெளிய வர்றோம்.
ராணா சூழ்ச்சிசெய்து அனுஷ்கா பாகுவை கோட்டையை விட்டு வெளியேற்றி கிராமத்தில் கூலி வேளை பார்க்கிறாங்க.அங்கேயும் இடைத்தேர்தல்ல சீட் வாங்குன மாதிரி உற்சாகமா இருக்காரு.கொல்லவேண்டிய அவசியம் மீண்டும் ராணாவுக்கு.ஒரு குழப்பம் செய்து கட்டாப்பாவை கொல்ல வைத்து, மீண்டும் மகன் ராணாவை வீழ்த்தி ராஜா ஆகுறாரு
*இது சிடியிலோ,செல்போனிலோ பார்ப்பது யானை பசிக்கு எக் பப்ஸ் கொடுத்த மாதிரி
*ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலுக்கு ஆஸ்கரே கொடுக்கலாம்.செட்டே ரியலா இருக்கு
*ஒளிப்பதிவு செந்தில்குமார்.ஒரு லாங் சாட் வைத்து ஜிம்மி ஜிப்பில் பயணித்து கோட்டையின் ஒரு ஜன்னல் வழியாய்,ஓட்டை வழியாய் நுழைந்து செல்வது,மலை, கோட்டை,என காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம்
*அனுஷ்-பாகு காதல் காட்சி செம ப்ரஷ்
*பனை மரத்திலிருந்து பத்து பத்து பேரா கோட்டையில் நுழைவது
*மாட்டு கொம்பில் தீம்பிழம்புடன் எதிரிகளை அழிப்பது,மடையை திறந்து விடுவது
*நான்கு வில் விடுவது.அனுஷ்காவுக்கும் சொல்லித்தருவது
*சாமி நகர்வலம் வர்றதே மக்கள் நிலை பார்க்கத்தான்,ஷத்திரியனுக்கு தரும் விளக்கம்,வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தருணம் வீரனா,கோழையா னு முடிவு செய்ய வாய்ப்பு வரும் என மதன் கார்க்கி ஆங்காங்கே ஐபிஎல் சிக்ஸ் மாதிரி அடிச்சிறுக்கார்
* தமன்னாவுக்கு வாய்ப்பு குறைவு
*ராணாவின் மனைவி யாருனு தெரியல
*க்ளைமேக்ஸ் சண்டை மலை மலையும் மோதுவது மாதிரி இருக்கு
*ஈட்டியும் ஈட்டியும் மோதி பாகு ஈட்டி முன்னேறுவது துல்லியம்
*கடைசியா வில்லன் முகம் அருவியில் விழும்போது அடுத்த பாகம் இருக்கும்னு நினைக்க வைத்து ஏமாத்திட்டாங்க
*ராணா சட்டைய கழட்டி ஆர்ம்ஸ் பார்க்கும்போது வாவ் உங்களுக்கு வயசே ஆகாதுனு சொல்ல்ச் தோணுது
*ராணாவின் கத்தி வச்ச வண்டி ஒடச்சிர்றாரு பாகு
ராஜமெளலி யின் உழைப்புக்கு சபாஷ்
No comments:
Post a Comment