பின்மதியக் கதவுகள்
வெறிச்சோடிக் கிடந்தது வீதி
அது விடுமுறை நாளொன்றின்
பின்மதியம்.
எதிரில் தெரிந்த வீட்டின் கதவை
தாகத்தில் தட்டினேன்.
பாதியில் பிரித்ததைப்போல்,
கதவுகள் சிணுக்கமாக மரவொலி எழுப்பின.
வெளிவந்த ரதியின் உடைகள் கசங்கியிருந்தன
நெற்றிக்குங்குமம் தீற்றலாக அழிந்திருந்தது
வியர்வைச் சுரப்பிகள் அவள் அழகை முணுமுணுப்பதைப் பார்க்க முடிந்தது.
சற்றுமுன் அவள் தோள்களில் அமர்ந்திருந்த
மூச்சுச் சூட்டின் பாடலை,
காதின் கொப்புகள் இசைத்தன.
எதுவும் கேட்கத் தோன்றாமல்
சாலையில் இறங்கி நடந்தேன்.
சிறுபிள்ளைபோல என்கூடவே
ஓடிவந்தது வெயில்.
இப்போதெல்லாம்
விடுமுறை நாளின் பின்மதியம்
தாகத்தின் கதவுகளாகவே தெரிகின்றன.
- கார்த்திக் திலகன்
No comments:
Post a Comment