Saturday, 17 September 2016

கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு-132

*இந்திய கம்யூனிச இயக்கத்தின் பெருமைமிகு வரலாறு :* 132

தோழர்களுக்கு காலை வணக்கம் !

23.7.1934 ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்ப்படுகிறது...

இது பற்றி அரசின் ஆவணங்கள் என்ன சொல்கிறது ?

�� கம்யூனிஸ்ட் கட்சி விரிந்த அளவில் சீரடைந்து வருகிறது..

�� பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை, தங்கள் ஆதரவு தளத்தின் கீழ் கொண்டுவருகிறார்கள்...

�� தொழிலாளர் தலைமையின் கீழ் தொழிலாளர்-விவசாயிகள் அடங்கிய புரட்சிகரமான இயக்கம் அமைக்கிறார்கள்...

இந்த காரணங்களை அரசே சொல்லும் அளவிற்கு கட்சி விரிவடைந்தது என்று கர்வம் கொள்வதா ?

வளர்ந்து வரும் சூழலில் கட்சிக்கு தடையா என்று வேதனை அடைவதா ?

தோழர்களே..

17.10.1920 கட்சி துவங்கப்பட்டதில் இருந்து கட்சி நடைமுறையில் தடைசெய்யப்பட்ட ஒரு கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது...

எத்தனை சதி வழக்குகள்..

பெஷாவர் சதிவழக்கு துவங்கி..

மீரட் சதிவழக்கு வரை..

இதன் விசாரணைகள் - தண்டணைகள் - சிறைவாசம்...

இத்தனை தாக்குதல்களுக்கு மத்தியில் தான் செயல்பட்டு வந்துள்ளது..

ஆனால் தற்போது சட்டபூர்வமான தடை...

கட்சி என்ன செய்யப்போகிறது ?

நாளை..

       ஸ்ரீதர்
��திண்டுக்கல் ��

No comments:

Post a Comment