மானைப் பார்க்கும்போதெல்லாம்
நான் சீதையாகிவிடுகிறேன்
சீதையை பார்க்கும்போதெல்லாம்
நான் ராவணனாகிவிடுகிறேன்
ராவணனைப் பார்க்கும்போதெல்லாம் நான் ராமனாகிவிடுகிறேன்
ராமனைப் பார்க்கும்போதெல்லாம்
நான் சீதையாகிவிடுகிறேன்
சீதையைப் பார்க்கும்போதெல்லாம்
நான் மானாகிவிடுகிறேன்
மானைப் பார்க்கும்போதெல்லாம்
என் வழியே நடந்து முடிந்த கதையில் புகுந்துவந்த நெருப்பு மட்டும் சுடவில்லை
அது யாராகவுமில்லை
-பிரேம் ரமேஷ் (உப்பு )
No comments:
Post a Comment