Thursday, 15 September 2016

இந்திய கம்யூனிச வரலாறு

*இந்திய கம்யூனிச இயக்கத்தின் பெருமைமிகு வரலாறு :* 129

விடுதலை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி கைவிட்ட நிலையில்,

கல்கத்தா மாநாடு மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வடிவம் பெற்ற நிலையில்
சுதந்திர போராட்டத்தையும், உழைப்பாளர்களை திரட்டும் பணியையும் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கியது !

வழக்கம்போல் வங்கமே முன்னுக்கு நின்றது...

வங்கத்தில் கட்சி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன..

சுதந்திர கோரிக்கைக்காக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன..

1934மேதின கொண்டாட்டம்  சிறப்பாக நடைபெற்றது ..

பொதுக்கூட்டங்களில் *அரசை தூக்கி எறி, பிரிட்டிஷ் ராஜ் ஒழிக* என்ற முழக்கங்கள் விண்ணை துளைத்தன..

இந்த முழக்கங்கள் இட்ட காரணத்திற்காக ஷெண்டாசிங் என்பவருக்கு ஓராண்டு கடுங்காவல், ரனேசென், சோம்நாத் லாகிரி ஆகியோருக்கு 3 மாத கடுங்காவலும் விதிக்கப்பட்டன..

இதெற்கெல்லாம் அச்சப்படாமல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டத்துவங்கிய கம்யூனிஸ்ட்கள் ரயில்வே தொழிற்சங்கம், நகர போக்குவரத்து தொழிலாளர் சங்கம், வங்காள சணல் ஆலை தொழிலாளர் சங்கம், தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் என உழைப்பாளர்கள் அணிதிரட்டப்பட..

ஆங்கிலேய அரசின் கண்கள் சிவந்தன..

நாளை..

        ஸ்ரீதர்
��திண்டுக்கல் ��

No comments:

Post a Comment