*இந்திய கம்யூனிச இயக்கத்தின் பெருமைமிகு வரலாறு :* 135
தோழர்களுக்கு காலை வணக்கம் !
இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்ததும் , தடைக்கு அஞ்சாமல் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்களை ஈவுஇரக்கமின்றி தண்டித்தது அரசு !
அடக்குமுறைக்கு அஞ்சினால் இயக்கம் என்னாவது ..?
பொதுச்செயலாளராக பணிபுரிந்த இக்பால்சிங் கைதானவுடன் அப்போதுதான் விடுதலையான பி.சி.ஜோசி பொதுச்செயலாளராக பணிப்பொறுப்பு ஏற்றார்..
இயக்கத்தின் மையம் பம்பாயில் இருந்து லக்னோவிற்கு மாற்றப்பட்டது !
வங்காளக்குழு சார்பாக *கம்யூனிஸ்ட் ரிவியூ* என்ற பத்திரிக்கையும் துவங்கப்பட்டது...
கல்கத்தாவில் பல்வேறு ஆலைப்பகுதிகளில் கட்சிக்குழுக்கள் உருவாகின..
பஞ்சாபில் தொழிற்சங்க அரங்கிலும், விவசாய அரங்கிலும் கட்சி கட்டப்பட்டது..
இந்த காலக்கட்டத்தில்தான் *தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்* ஒரு கம்யூனிஸ்டாக பரிணமித்தார்...
நாளை...
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment