Tuesday, 20 September 2016

புத்தக அறிமுகம்

*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*

*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*

இன்னும் 7⃣1⃣ நாட்களே உள்ளன ...

அறிமுக நூல் : 3⃣0⃣

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* இந்திய தேசிய இராணுவமும், மறைக்கப்பட்ட உண்மையும்

ஆசிரியர் : நேதாஜி

பிரிட்டிஷ் அரசின் சிறையிலிருந்து தப்பிய நேதாஜி இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைமை தாங்குகிறார்...

சிங்கப்பூரில் இருந்து செயல்பட்ட நேதாஜி பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி ஆற்றிய *சொற்பொழிவு உரைகளின்* தொகுப்புதான் இந்த நூல்...

மொத்தம் 24 உரைகள்...

வானொலி உரைகள் 9...

இந்திய தேசிய இராணுவத்தினரிடையே ஆற்றிய உரை 5...

அஞ்சலி உரை 2....

நேர்காணல் 1...

அறிக்கை வெளியிடல் மூலம் 8...

ஒவ்வொறு உரையும் வரலாற்று முக்கியத்துவமானவை...

6.7.1944 ல் *மகாத்மாஜி*க்கு என்ற தலைப்பில் காந்தியடிகளுக்கு ஆற்றிய வானொலி உரை..

29.1.1945 ல் இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த *ராஷ்பிகாரி போஸ்* மறைவிற்கு ஆற்றிய அஞ்சலி உரை..

முகலாய பேரரசின் கடைசி அரசர் *இரண்டாம் பகதூர்ஷா* கல்லறையில் ஆற்றிய எழுச்சி உரை..

10.2.1945 ல் *நான் போலி அரசியல்வாதியல்ல* என்ற தலைப்பில் ஆற்றிய வானொலி உரை ...

ஆகியன  உங்களுக்குள் சில விளைவுகளை ஏற்படுத்தும் !

வாசியுங்கள் !

வெளியீடு  : முன்னேற்ற பதிப்பகம்
விலை        : ரூபாய் 110
பக்கங்கள் : 160

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

*நம்பிக்கையுடன்*
         ஸ்ரீதர்
��திண்டுக்கல்

1 comment:

  1. ALL OF YOUR COLLECTIONS ARE VERY NICE TO READ.THANKS A LOT SIR....

    ReplyDelete