Tuesday, 27 September 2016

ஓஷோ

ஓஷோ

பாதையோ மிக நீண்டது
பாதையற்ற பாதை அது
தனி வழி பயணம் அது
வரைபடங்கள் இல்லை
வழிகாட்டியும் இல்லை
ஆனால்,,,, வேறு வழியும் கிடையாது அதிலிருந்து தப்பி செல்லவும் முடியாது
அதை தவிர்க்கவும் வழியில்லை
அடைய வேண்டிய குறிகோள் சாத்திய மற்றதாய் தோன்றுகிறது
ஆனால் போக.வேண்டுமென்ற ஆவல் தன்னியில்பானது
அந்த ஆசை ஆன்மாவின் அடியாழ ஆசை
உண்மையில் ஆசையும் நீயே தேவையும் நீயே பிரக்ஞையும் அப்படியே
இந்த அறைகூவல் இருப்பதால் இந்த சாகசங்கள் இருப்பதால் அது இப்படி இருக்கிறது
அதனால்
காலத்தை வீணடிக்காதே
,,,,,தொடங்கு
கணக்கு போட்டு பார்க்காதே,,,, தொடங்கு
தயக்கம் காட்டாதே,,,,,தொடங்கு

மூவாயிரம் மைல் பயணமும் ஓரே ஓரு காலடி வைப்பில் தான் ஆரம்பமாகிறது
,,,,,,நீ,,, எப்போது விழிப்புணர்வுக்குமுதல் காலடி வைக்கப்போகிறாய் என்பது தான் கேள்வி

No comments:

Post a Comment