Saturday, 17 September 2016

நூல் அறிமுகம்- ஸ்ரீதர்

*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*

*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*

இன்னும் 7⃣4⃣ நாட்களே உள்ளன ...

அறிமுக நூல் : 2⃣7⃣

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* இரட்டைமலை ஸ்ரீனிவாசனின் ஜீவசரிதை

ஆசிரியர் : இரட்டை மலை ஸ்ரீனிவாசன்

*இன்று இரட்டைமலை சீனிவாசன் நினைவுதினம்*

இந்த நூல் சீனிவாசனின் சுயசரிதை ஆகும்..,

சிறிய நூல் ஆனால் சீரிய நூல்.,

20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர் சீனிவாசன்..

வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல சலுகைகள் பெற்றுத்தர அம்பேத்கருக்கு உறுதுணையாக இருந்தவர்..

7.7.1860 ல் பிறந்த இவர் 18.9.1945 ல் மறைகிறார்..

தன் 22 வயது முதல் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு 67 ஆண்டுகள் அவர்களுக்காகவே வாழ்ந்தவர் ...

தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்..

சென்னை மாகாண சட்டமன்றத்தில் 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்...

1893 ல் *பறையன்* பத்திரிக்கை துவக்குகிறார்...

இவரின் சேவைகளுக்காக பிரிட்டிஷ் அரசு இவருக்கு *ராவ் சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர்* போன்ற பட்டங்கள் வழங்குகிறது..

இவரின் பிறப்பு சூழல், கல்வி, பத்திரிக்கை அனுபவம், சட்டமன்ற பணி அனுபவம், வட்டமேசை மாநாட்டு அனுபவம், காந்தியடிகளுடனான புனே ஒப்பந்தம் என தன் கதையை கூறுகிறால் சீனிவாசன் !

வாசியுங்கள் !
வரலாறு அறியாமல் வரலாற்றை மாற்ற முடியாது !

வெளியீடு  : தலித் சாகித்ய அகாடமி
விலை        : ரூபாய் 30
பக்கங்கள் : 68

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

*நம்பிக்கையுடன்*
         ஸ்ரீதர்
��திண்டுக்கல்

No comments:

Post a Comment