*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*
*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*
இன்னும் 7⃣6⃣ நாட்களே உள்ளன ...
அறிமுக நூல் : 2⃣5⃣
இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?
*நூலின் பெயர் :* திருமணமாகாதவள்
ஆசிரியர் : சரத் சந்திர சட்டோபாத்தியா
வங்க இலக்கிய உலகில் தாகூரின் சமகாலத்தில் வாழ்ந்து வங்க இலக்கியத்தின் போக்கை தீர்மானித்தவர் சரத் சந்திரர்...
சரத் சந்திரரின் இந்த நாவல் மிகவும் புகழ்பெற்றது !
அவரின் முதல் படைப்பு கூட...
சரத் சந்திரர் எந்த காரணத்திற்காக லட்சக்கணக்கான இந்திய வாசகர்களின் அன்பை பெற்று இருக்கிறாரோ அந்த காரணம் இந்த நாவல் முழுமையும் இருக்கும் !
கதாநாயகி ஞானதா மூலம் பெண்ணியல் பற்றி பேசும் ஆசிரியர் , ஞானதாவை தனியாளுடமை உடைய கதாபாத்திரமாக சித்தரிக்காமல் மாறாக அவள் மூலம் சமூக அவலத்தை சித்தரிக்கிறார்,.
அழகின்றி பிறந்த ஞானதா..
அதனால் குடும்பத்தின் கவலைக்கு காரணமான ஞானதா..
பல அவலங்களை சந்திக்கும் ஞானதா...
இந்த ஞானதா மூலம் சமூகத்தை குறிவைத்து அதன் அவலங்களை விளாசுகிறார் ஆசிரியர் ...
இதில் காணப்படும் பரிவு, கழிவிரக்கம், ஈரமற்ற குரூரம், நன்றி கெட்ட தன்மை இவையெல்லாம் இன்றும் இயல்பே என்று எண்ணும்போது இதயம் கனக்கிறது..
வாசியுங்கள்
இந்திய பெண்கள் தங்கள் வழியை தாங்களே தேர்வு செய்ய இந்த நூல் வழிகாட்டும் !
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : ரூபாய் 30
பக்கங்கள் : 77
வாசிப்பை சுவாசமாக்குவோம் !
*நம்பிக்கையுடன்*
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment