*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*
*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*
இன்னும் 6⃣8⃣ நாட்களே உள்ளன ...
அறிமுக நூல் : 3⃣3⃣
இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?
*நூலின் பெயர் :* பூமி தின்னிகள்
ஆசிரியர் : காஞ்சனா தாமோதரன்
உங்களுக்கு கட்டுரைகள் பிடிக்குமா ?
அறிவுசாளரம் திறக்கப்படவேண்டும் எனில் கட்டுரை வாசிப்பு அவசியம் தேவை ...
தமிழ் இலக்கியத்தில் *கட்டுரை இலக்கியம்* இன்னும் வளரவில்லை என்றாலும் அதற்கான முயற்சிகள் இல்லாமல் இல்லை...
இந்த நூல் அதற்கு நல்ல உதாரணம்..
இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு...
அமெரிக்க வாழ் இந்தியரான திருமதி காஞ்சனா பல தமிழ் இதழ்கள், இணையங்களில் அவ்வபோது எழுதியவைகளின் தொகுப்புதான் இந்த நூல்...
அரசியல், கலை, இலக்கியம், பயணம் , சமூகம்- வாழ்க்கை என 5 தலைப்புகளில் 22 கட்டுரைகள்..
வாசிக்கும்போது சலிப்போ அலுப்போ. தந்துவிடாமல் மனதில் பதியுமாறு சொல்லோவியமாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.,
பயணம் பற்றிய *இந்திய தண்டவாளங்கள்* என்ற கட்டுரை புது அனுபவம் கொடுக்கும்...
சிறார் பிரச்னை பற்றி 3 கட்டுரைகள் நம் சமூக அவலம் பற்றி கூறுகிறது..
வாசியுங்கள்
கட்டுரை வாசிப்பில் நேசம் பிறக்கும் !
வெளியீடு : உயிர்மை வெளியீடு
விலை : ரூபாய் 125
பக்கங்கள் : 222
வாசிப்பை சுவாசமாக்குவோம் !
*நம்பிக்கையுடன்*
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment