Tuesday, 27 September 2016

உமாமகேஸ்வரி

அவனில்லாத வீட்டில்
ஒரு நிசப்தக் குன்று வளர்கிறது
இப்போதெல்லாம் இல்லை
அலறும் தொலைக்காட்சி
இறைபட்ட புத்தகங்கள்
கொதிக்கும் செல்போன்
கலைந்து கிடக்கும் உடைகள்
பள்ளிப் பேருந்திற்கான பரபரப்பு
ஞாயிறுகளில் சிறுவர் குரல்கள்
இரையும் வாசல்
சுவரில் பந்துத் தடங்கள்
சனி இரவில் அவனோடு
ஹோட்டலுக்கான நடை.
என் சமையல் பற்றி அவன் கிண்டல்கள்.
அவனுக்கான சிறு முத்தங்கள்
இல்லை இவையேதும்.
எல்லாவற்றையும் அவன்
பிரயாணப் பைக்குள்
எடுத்துப் போயிருக்கிறான்.
இங்கிருக்கிறார்கள்
அவன் எங்கேயிருக்கிறான் என்று
கேட்பவர்கள் மட்டும்.
-உமா மகேஸ்வரி (காலச்சுவடு - செப்டம்பர்)

No comments:

Post a Comment