Friday, 16 September 2016

நா.மு நினைவுகள்-ஸ்ரீ தர்

இன்று நக்கீரன் வெளியீடான *இனிய உதயம்* இலக்கிய இதழ் வாசித்தேன் !

*கவிஞர் முத்துக்குமாருக்கு* நினைவஞ்சலி இதழ் !

முழுக்க முத்துக்குமார்தான் !

45 லட்சம் இருந்திருந்தாலோ

பிராணவாயு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் முத்துக்குமார் இல்ல முகவரி கண்டுபிடிக்க முடியாமல் தவித்த 15 நிமிடம் மிச்சம் பிடிக்கப்பட்டிருந்தாலோ

முத்துக்குமார் பிழைத்து இருப்பாரோ?

*எதிர்பாராமல்*
*வந்த நிற்க*
*வேண்டும்*
*பலநாள்*
*பழகிய நண்பன்*
*கடிதம் போடாமலே வந்து*
*கதவை தட்டுவதுபோல*

என்ற ரசூல் கம்சதேவ் கவிதை போல் வந்து நிற்க மாட்டாயா முத்துக்குமார் ?

No comments:

Post a Comment