Saturday, 10 September 2016

பழநிபாரதி

தவித்த வாயால்
கூப்பிட்டேன்

தூரத்தில்
உயிர்வற்றிக் கிடந்தாள்
காவேரி

தாய்ப்பால் உறைந்த
மணற்குன்று முலைகளில்
மூக்குரசி
புழுதியில்
நிறம் மாறிப் பறந்தன
கொக்குகள்

இடையில் அவளை
இறுக்கிப் பிடித்த
நகக் கீறல்களிலிருந்து
கசிந்தது குருதி

மீன்களால் நெய்யப்பட்ட
அவளாடை
தொடை தெரிய
கிழிக்கப்பட்டிருந்தது

காற்றைத் துழாவி
தெறித்துக் கிடந்தன
ஓசை கழன்ற
அவள் காற்சிலம்புகள்

வெப்பம் கொப்பளிக்கும்
அவள் உடலிலிருந்து
எழும் ஆவி
கனத்துக் கனத்துச்
சூல் கொண்டு அலைகிறது

அணைகளை உடைக்கும்
ஒரு பேய்மழை மேகமாய்

'புறாக்கள் மறைந்த இரவு' நூலிலிருந்து (2005)

- பழநிபாரதி

No comments:

Post a Comment