குடிநீரென்பது
ஓடையாயிருந்தது
நதியாயிருந்தது
பின்
ஏரியாயிருந்தது
குளமாயிருந்தது
பின் ஒவ்வொரு வீட்டிலும்
கிணறாயிருந்தது
பின் சுருங்கி
ஆழ்துளைக் கிணறானது
பின்
பன்னாட்டு நிறுவனத்தின்
வியாபாரப் பொருளாகி
ஒரு லிட்டரில் அடைபட்டது
பின் அதுவும் சுருங்கி
அரை லிட்டரானது
இப்போது அதுவும் சுருங்கி
200 மிலி 100 மிலி என்றானது
அடிப்படைக் குடிநீர்
இனி சொட்டு மருந்தெனச்
சொட்டப்படுமோ?
-சௌவி
குடிநீர் இப்படி இருக்க தொடர்கிறது தாகம்
ReplyDeleteஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.