Saturday, 10 September 2016

புத்தக அறிமுகம்

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* ஊர்சுற்றி புராணம்

ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்

ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புகழ்பெற்ற நூல் இது...

*ஊர் சுற்றுதல்* என்பது தற்போது தவறான பதத்தில் சொல்லப்படும் வார்த்தை...

ஆனால் அது எத்தகைய அற்புதமான அனுபவத்தை தரும் என்பது இந்த நூலை வாசிக்கும்போது புரியும்...

ராகுல் தன் வாழ்நாள் முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தவர்...

அந்த பயண அனுபவச் செறிவுகளே அவரை மாபெரும் படைப்பாளியாக்கியதோ என்று இந்த நூலை வாசிக்கும்போது எண்ணத்தோன்றுகிறது...

இந்த நூல் அவரின் பயண அனுபவங்களை நமக்கு சொல்கிறது...

16 தலைப்புகளில் ஊர் சுற்றி புராணத்தை கூறுகிறார் ...

ஜைன மதம் நிறுவிய மகாவீரர்
பௌத்த மதம் நிறுவிய புத்தர்
இஸ்லாம் மதம் நிறுவிய நபிகள்,
சீக்கிய மதம் நிறுவிய குருநானக்,

ஊல்சுற்றிகளாக  வரலாற்றில் இடம் பெற்ற மார்க்கோபோலோ, யுவான் சுவாங், பாகியான்

ஆகியோர்கள் எப்படி ஊர்சுற்றல் மூலம் தங்களின் அனுபவங்களை பெற்றார்கள் என விளக்குகிறார்..

ஊர் சுற்றிகளுக்கு தேவையான பண்புகள், தகுதிகள்...

அதில் உள்ள மரண அபாயங்கள்..

பெண் ஊர்சுற்றிகள்..

இந்தியாவில் உள்ள பழமையான ஊர்சுற்றி இனங்கள்...

ஊர் சுற்றிகள் - பழங்குடியினர் உறவுகள்..

என நூல் முழுக்க ஊர்சுற்றி புராணம் தான் !

வாசியுங்கள் ஊர் சுற்றல் என்பது இனிதானதாக உணர்வீர்கள் !

வெளியீடு  : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை        : ரூபாய் 75
பக்கங்கள் : 236

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

No comments:

Post a Comment