*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*
*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*
இன்னும் 6⃣4⃣நாட்களே உள்ளன ...
அறிமுக நூல் : 3⃣7⃣
இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?
*நூலின் பெயர் :* விடுதலைப்பாதையில் பகத்சிங்
தொகுப்பு ஆசிரியர் : சிவவர்மா
இன்று பகத்சிங் பிறந்தநாள் !
பகத்சிங்..
இன்றைய போர்குணமிக்க இளைஞர்களின் ஆதர்சன புருஷன்...
விடுதலை வேள்வியில் தன்னை எரித்துக்கொண்ட மாவீரன்..
இந்த நூல் பகத்சிங் பற்றிய விவரங்களை 4 பகுதிகளில் தருகிறது...
*முதல் பகுதி* பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறை பற்றியது...
*இரண்டாம் பகுதி* பகத்சிங் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் பற்றியது..
இந்த பகுதி இதுவரை நீங்கள் அறியாத பகத்சிங்கை உங்களுக்கு காட்டும் ..
குறிப்பாக காதலை பற்றி தன் சகா சுகதேவ் க்கு எழுதிய கடிதம்..
*இன்குலாப் ஜிந்தாபாத்* என்ற உயிர்மூச்சு முழக்கத்தை கேலிசெய்த மாடர்ன் ரெவ்யூ பத்திரிக்கை ஆசிரியர் ராமானந்த் சாட்டர்ஜிக்கு எழுதிய பதில் கட்டுரை..
கனவுலகம் என்ற கவிதை நூலுக்கு பகத்சிங் எழுதிய அணிந்துரை
என இரண்டாம் பாகம் முழுவதும் பகத்சிங் படைப்புகள்தான்..
*மூன்றாம் பாகம்* பகத்சிங்கின் சிறை குறிப்புகள்..
அதாவது பகத்சிங் தான்சிறையில் வாசித்த நூல்களில் இருந்து நேசித்த வரிகளை குறிப்பெடுத்த பகுதிகள்.,
*நான்காம் பகுதி* பிற்சேர்க்கை என்ற பகுதியில் அரிய புகைப்படங்கள்.
இவற்றை தொகுத்த சிவவர்மா பகத்சிங்குடன் விசாரணை காலங்களில் நெருக்கமாக இருந்தவர்..
ஒர் அதர்ச்சி சம்பவம் இந்த நூலி்ல் உண்டு..
*பகத்சிங் சிறையில் எழுதிய சோசலிச தத்துவம், சுயசரிதை, இந்திய புரட்சி இயக்க வரலாறு, மரணத்தின் நுழைவாயில் என்ற நான்கு கையெழுத்து பிரதி நூல்கள் சிறையில் இருந்து மறைத்து ஜலந்தரில் உள்ள லஜ்ஜாபதி என்பவரிடம் கொடுக்கப்பட , அவரிடமிருந்து அது விஜயகுமார் என்பவரிடம் செல்ல பிரிட்டிஷ் ஆட்சி தேடுதல் வேட்டையில் விஜயகுமார் சிக்க, அவர் பயந்து அந்த கையெழுத்துபிரதிகளை தீயிட்டு கொழுத்தி விடுகிறார்..*
அந்த பிரதி மட்டும் இருந்திருந்தால்...
வாசியுங்கள்
இன்னும் பல தகவல்கள் உண்டு.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூபாய் 200
பக்கங்கள் : 442
வாசிப்பை சுவாசமாக்குவோம் !
*நம்பிக்கையுடன்*
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment