Friday, 28 April 2023

பொன்னியின் செல்வன்-2*மணி




பாகுபலி போல் காட்சியின் ஃபேண்டசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காட்சியை விரைவாகவும் நிதானமாகவும் சொல்ல வேண்டும் என்பதில் உழைத்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் மையமாய் தன் நடிப்பின் மூலம் அசர வைக்கின்றனர் விக்ரமும் ஐஸ்வர்யாவும்

முதல் பாகத்தில் கதாப்பாத்திர அறிமுகத்துடனும்,இலங்கையில் ஏற்பட்ட புயலில் அருண்மொழி பிழைத்தாரா, ஊமை ராணி காப்பாற்றினாரா என்பதுடன்
கதை ஓரளவு துவக்கத்துடன் நிறைவடைந்திருந்தது. இரண்டாம் பாகத்தில் நந்தினி ஆதித்த கரிகாலன் இளமைப்பருவ காட்சிகளுடன் துவங்குகிறது.

உயிர் பிழைக்கும் அருண்மொழி நாகை புத்தமடாலத்திலிருந்து சிகிச்சை பெற்று தஞ்சை திரும்புகிறார்.கடம்பூருக்கு ஆதித்த கரிகாலனை வரவைக்கும் நந்தினியின் சதியை விக்ரம் பிரபு மூலம் நிறைவேற்றுகிறார்.கடம்பூரில் நடக்கும் ஆலோசனையில் தனது பட்டத்தை உத்தம சோழனுக்கு விட்டுத்தரும் விக்ரம் இரவு நந்தினியை தனிமையில் சந்திக்கிறார்.அப்போது வரும் உணர்ச்சிகரமான காட்சியில் என்ன ஆனது? வந்தியத்தேவனுக்கு நேர்ந்த கதி என்ன?நந்தினி என்ன ஆனார்? என்பதே திரையில் விரியும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்.

சோழர்களின் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகள், துரோகங்கள், சதிவலைகளை இவற்றையெல்லாம் தாண்டி படம் பார்ப்பவர்களை ரொம்பவே ஈர்ப்பது வந்தியதேவன்-குந்தவை மற்றும் ஆதித்த கரிகாலன்- நந்தினி இடையேயான காதல் காட்சிகள் தான்.

#ப்ளஸ்

ஜெயம் ரவிக்கும் விக்ரமிற்கும் இரண்டாம் பாகத்தில் நல்வாய்ப்பு.

*/மக்களை நம்பாதவன் மக்களை ஆளமுடியாது

/மறக்க முடியாமல் இருக்கலாம் மன்னிக்கவும் முடியாதா/

/அரசர் சொல்லும் பொய் அரசியல் எனப்படும்',

 '/பேராசைதானே அரசர்களுக்கு அழகு/

/தன்னையே வெறுப்பவனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லை/என கூர் வசனங்கள் நம் மனதை பதம் பார்க்கிறது

அகநக பாடல்களில் வழக்கம் போல ஏ.ஆர் ரகுமான் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.பல சாதாரண காட்சிகள் கூட இவரின் பின்னணி இசை காரணமாக அசாதாரண காட்சிகளாக மாறியுள்ளது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் கைவண்ணத்தில் படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் நம்மை கண் இமைக்காமல் ரசிக்க வைத்திருக்கிறது.

#மைனஸ்

*சில இடங்களில் கதை மெதுவாகப் போவது போல் ஒரு ஃபீல்

*சேந்தன் அமுதன்-பூங்குழலியும் என்ன ஆனார்களென தெரியவில்லை. அந்த ட்விஸ்ட்டை படித்தவர்களுக்கு மிஸ்ஸிங்

*நந்தினியின் கெத்துக்காகவே படித்தவர்கள் அதிகம். இறுதியில் நாவலில் வருவது போலவே குதிரையில் போக விட்டிருக்கலாம்.

*இறுதிக்கட்ட போர் திணித்தது போல் இருந்தது. சீக்கிரமாகவும் முடிஞ்சிருச்சு.

 குறைகள் இருப்பினும் திரையில் ஒளிரும் பிரம்மாண்டம் அனைத்தையும் மறக்கச் செய்கிறது. தமிழில் இதுபோல் திரைப்படங்கள் வர பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். வாழ்த்துகள்.

படம் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment