Friday, 7 April 2023

book-35


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-14
Book-35
Pages-908

அசோகமித்திரன் கட்டுரைகள்
-பாகம் 2

புனைவுகளைக் காட்டிலும் கட்டுரை வடிவங்களை விரும்புவதற்கான காரணம் அதில் இருக்கும் தகவல்களும் நாம் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களும் தான். பல்வேறு அறிஞர்களை நாம் ஒரே நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களும், எவ்வாறெல்லாம் இடர்பாடுகளை அவர்கள் புறந்தள்ளி மேலே வந்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள உதவி புரிகின்றன. மேலும் எழுத்தாளர் என்பவர் படைத்து கொண்டே இருப்பவர்கள் மட்டுமல்ல.. அவர்கள் மிகச் சிறந்த படிப்பாளிகள். அவர்கள் படித்ததை நமக்கு சொல்லும் போது இன்னும் நமக்கு கூடுதலான வாசிப்பு இன்பத்தை தருகிறது .டால்ஸ்டாய் எழுதிய தொடர்கதை பற்றி சொல்லும் போது அன்னா கரீனா எவ்வாறு உருவாகியது என்பதையும் இக்கட்டுரையில் சொல்லி இருக்கிறார். ஹொமிங்வேயும் ஃபாகனரும் ஏறத்தாழ ஒரே  காலகட்டத்தில் தான் எழுத முற்பட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் ஆரம்பத்தில் அவர்கள் நாட்டில் புகழ் கிடைக்கவில்லை .பல ஆண்டுகள் கழித்து தான் பெயர் கிடைத்திருக்கிறது ..படைப்புக்கான பாராட்டு கிடைத்திருக்கிறது என்பதை படிக்கும் போது ஒரு எழுத்தாளனின் வலி நமக்கு தெரிகிறது.

இந்த புத்தகம் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை எழுத்தாளர்கள் பற்றி புத்தகங்களை பற்றி நுண் கலைகள் பற்றி. எழுத்தாளர்களை பற்றி சொல்லும்போது அயல்நாட்டு எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். அசோகமித்திரன் பெரும்பாலும் அயல்நாட்டு எழுத்தாளர்களை படித்தது நமக்குத் தெரிகிறது. அவ்வாறு படித்த விதத்தில் ஜார்ஜ் ஆர்வல் விலங்குகளின் பண்ணை பற்றிய நாவலை சொல்கிறார் .மிருகங்கள் எல்லாம் கூடி கலந்து ஒரு சமதர்ம பொதுவுடமை பிரகடனம் செய்தனர் .அதன்படி ஏழு வாக்கியங்கள் அமைக்கப்பட்டு இந்த நாவல் புகழடைந்தது .ஆனால் இதனை பல்வேறு பதிப்பகங்கள் பதிப்பிக்க மறுத்துவிட்டனர்.ஆனால் லட்ச கணக்கில் விற்றது என்பதனையும் இதில் சொல்லி இருக்கிறார்.

ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பிளமிங்குக்கு அலுத்து போயிருக்க வேண்டும் .உண்மையில் உலக மக்களிடையே பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்திய அன் நாவல் எழுதி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர் எழுதியதாக சொல்லப்படுகிறது. ஆர் கே நாராயணனுடைய முதல் நாவலாகிய சுவாமியும் சினேகிதர்களும் இங்கிலாந்தில் பதிப்பு பெறுவதற்கு கிரகம் கிரீன் பெரிதும் உதவி இருக்கிறார் .பிரிட்டனின் பிரதான இலக்கிய ஏற்றுமதி என்று அவர் அறியப்படுகிறார். தமிழகத்தில் சிறுகதை இயக்கம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவதற்கு க.நாசுப்ரமணியம் ஒரு காரணமாவார். இவரைப் பற்றி சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வருவது பொய் தேர்வு ஆனால் பித்தபூ, தாமஸ் வந்தார் ஆகிய நாவல்களும் சிறந்த நாவல்களே.

மேலும் ஜீ நாகராஜன் தி ஜானகிராமன் சி‌.சு செல்லப்பா, புதுமைப்பித்தன் கல்கி ஆத்மாநாம் மௌனி ஆதவன் லாச ரா உள்ளிட்டோரின் நூல்களை திறமையாக திறனாய்வு செய்ததுடன் ஒவ்வொரு இடத்திலும் அவர்களை வெகுவாக படைப்புத்திறனை பாராட்டியுள்ளார்.

#புத்தகங்கள்

அக்கரை சீமையிலிருந்து பணம் சம்பாதித்து வந்தவன் கிராமத்தில் காடாக மண்டி இருந்த தோட்டத்தை வாங்கி கரும்பாலை நிறுவுகிறான் அதன் பிறகு நடைபெறும் விஷயங்களை புதிய நடையில் தமிழில் முயற்சித்திருக்கிறார் சா கந்தசாமி சாயாவனம் நாவலில்..
எந்த பத்திரிக்கையில் வெளிவந்தாலும் எப்படிப்பட்ட கெட்டிக்காரத்தனம் வழியும் விளம்பரத்துடன் வந்தாலும் சுஜாதாவும் எடுத்து ஓர் அசலான ஆற்றல் கொண்டவரின் எழுத்து. தவிர்க்க முடியாத கதாநாயகிகள் ரசாயன கலவையாய் வெளிப்படுத்துவார் .வயது 28 வடிவம் 24 அல்லது 25 இவள் உடம்பில் வளைவுகளை சொல்ல முடியாது.

கீழ்வெண்மணி நிகழ்ச்சி நடந்து 10 ஆண்டுகள் ஆவதை குருதிப்புனல் நாவல் அப்படியே படைக்கப்பட்டது இந்திரா பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் பூமணியின் இரண்டாவது தொகுப்பாக ரீதி படித்த போது பொதுவாக புனைக்கதை இலக்கியம் பற்றிய சிந்திக்க தோன்றியது. தத்துவ தரிசனம் கொண்ட கலைஞனுக்கு சிறுகதை ஒரு தற்காலிக வடிவமே காரணம் அவன் படைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை பிரபஞ்சனின் கதைகளை தான் இப்படி சொல்கிறார்.
மேலும் அரங்கநாதன் ஜெயந்தன் சுப்பிரமணிய ராஜு போன்றோரின் கதைகளையும் அவர்கள் பயன்படுத்தும் மொழி நடையையும் மிகவும் புகழ்ந்திருப்பார்

கலைகளுக்கும் மன நோய்க்கும் தவிர்க்க முடியாத உறவு இருப்பது போன்ற தோற்றத்தை சில வரலாற்று ஆசிரியர்கள் மக்களுடைய காலம் காலமாக வளர்த்து விட்டு இருக்கிறார்கள். நேர்த்தியாக செய்து முடிக்கப்படும் பணி எல்லாமே கலைதான். இத்தகைய மனோபாவம் கொண்டவர்கள் யாருடைய சலுகைகள் காத்திருப்பதில்லை. அதுபோல டாக்டர் ருத்ரன் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட மேக்பத் நாடகம் ஈடிபஸ் நாடகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜெமினி வாசன் அவர்கள் 36 புத்தகங்கள் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. சதிலீலாவதி என்ற படத்தின் கதை ஆசிரியர் வாசன் தான். பல்வேறு கோணங்களில் அவர் கதை எழுதியுள்ளார். சிறுவயதில் எவ்வளவு பெரும் உழைப்பு இளம் வயதுக்கு மீறிய பொருட்களையும் எடுத்து திறம்பட எழுதியது எழுத முற்பட்டது. தன்னம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் சாதனை தான். இந்த சிறப்பு புத்தகங்களை ரயிலடியில் அவரே விற்பனை செய்வாராம்.
ராஜாஜி பார்த்த ஒரே திரைப்படம் அவ்வையார் தான். வெலிங்டன் தியேட்டரில் ஜெமினியின் அவ்வையாரை பார்த்தார் 15 ஆண்டுகள் கழித்து. பார்த்துவிட்டு விமர்சனங்கள் பல எழுதினார். ஆனால் அதற்கு முன்பு வாசன் இறந்து விட்டதால் அதனை அவர் படிக்கவில்லை என்று அசோகமித்திரன் சொல்லி இருக்கிறார்

திரைப்பட விழாக்களில் ஆர்வம் கொண்ட அசோகமித்திரன் பல்வேறு திரைப்பட விழாக்கள் குறித்தும் அப்போது வந்த முக்கியமான படங்களான ரத்தக்கண்ணீர், அவ்வையார் நான் அறிந்த சினிமா உலகம், நடிகைகளுடன் சந்திப்பு, பெங்களூரு திரைப்பட விழா, குருதத்தின் நினைவுகள் போன்ற பல்வேறு சம்பவங்களை நுண் கலைகளில் விமர்சித்துள்ளார் அழகாகவும் பாராட்டியுள்ளார் இயல்பான தன் மொழி நடையின் மூலம் அதனை நமக்கு சுவாரசியமாகவும் கொடுத்துள்ளார்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment