Monday, 10 April 2023

book-49



#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-18
Book-49
Pages-384

மயிலை சீனி.வேங்கடசாமி தொகுப்பு நூல்கள்
இரண்டு

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சிறந்த ஆய்வாளர். தமிழோடு வரலாற்றையும் ஆய்வியல் முறையில் நமக்கு கொடுத்தவர்.இந் நூலில் சேரன் செங்குட்டுவன் துளுநாட்டு வரலாறு கொங்கு நாட்டு வரலாறு என்று சங்க இலக்கியங்கள் வரலாற்றினை நமக்கு கொடுத்துள்ளார். சேரன் செங்குட்டுவன் எனும் இந்த புத்தகம் நீண்ட கட்டுரையாக எழுத பெற்று சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சேரன் செங்குட்டுவனுடைய காலம் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்திருந்ததாக  ஆசிரியர் சொல்கிறார். சங்க நூல்களில் இருந்து சேரனின் ஆட்சித்திறன் கொடைதிறன் போன்றவற்றை அறிய முடிகிறது. சேரன் செங்குட்டுவனுடைய தகப்பனான இமயவரம்பன் கொங்கு நாட்டின் சில பகுதிகளை தன்னுடைய ராஜ்ஜியத்தில் இணைத்துக் கொண்டான். செங்குட்டுவனின் தமையனான கலங்காய் கண்ணிநார் முடிச் சேரலின் காலத்தில் துளுநாடு சேரர் ஆட்சியின் கீழ் வந்தது. கொங்கு நாட்டை சிறிது சிறிதாக சேரர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தபோது சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இது பிடிக்காமல் அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்து வந்தன.

கடைச்சங்க காலத்து சேர அரசர்களின் பேரும் புகழும் பெற்றவர் சேரன் செங்குட்டுவன் ஆவார். தமிழ்நாட்டில் பத்தினி தெய்வ வணக்கத்தை இவர் ஏற்படுத்தினார். சங்க கால சரித்திர ஆண்டுகளை கணக்கிடுவதற்கு இவருடைய வரலாறும் துணை நின்றது.பதிற்றுப்பத்து நூலில் எட்டு சேரர்கள் அரசர்களை பற்றிய வரலாறு இருக்கின்றன அதனைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். செங்குட்டுவனின் தந்தை ஏவலுக்கு இணங்க செங்குட்டுவன் தான் முதன் முதல் கடல் போர் செய்தான் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பாடலில் குமட்டூர் கண்ணனார் கூறுகிறார். எகிப்து ரோமாபுரி நாடுகளில் இருந்து வணிகத்தின் பொருட்டு கடல் வழியாக வந்த மரக்கலங்களை சேர நாட்டில் துறைமுக பட்டினங்களில் வராதபடி இடைமறித்து தடுத்து கொள்ளையடித்த குறும்பர்களை அடக்குவதற்காக இப்போர் நடந்தது என்று பாடல் வழியே அறிய முடிகிறது.

செங்குட்டுவன் செய்த போர்களில் மற்றொரு போர் மோகூர் போர் .பாண்டிய நாட்டில் மதுரைக்கு வடகிழக்கு 7மைல் தூரத்தில் இருந்த இந்த ஊரில் மோகூர் பழையன் எனும் சிற்றரசரை தோற்கடித்து அந்த ஊரில் காவல் மரமாக இருந்த வேப்ப மரத்தை வெட்டி அதனால் முரசு செய்தான் என்று ஐந்தாம் பத்தில் பரணர் பாடுகிறார். செங்குட்டுவனுக்கு ஆட்சி துணையாக ஐம்பெரும் குழு இருந்தது அவைகள் அமைச்சர் புரோகிதர் சேனாதிபதிய தூதுவர் சாரணர் என்பர். செங்குட்டுவனுடைய சேனைத்தலைவன் அழும்பில் வேள். அரசனுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தவுடன் கண்ணகிக்கு விழா தொடங்கிய போது சிறைப்பட்டிருந்த அரசர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி ஏவினான் என்று கூறுகிறது பாடல்.

செங்குட்டுவன் வெண்மாள் எனும் அரசியை திருமணம் செய்து அவளுக்கு வேண்டுமாள் என்று பெயரும் உண்டு. செங்குட்டுவன் வாழ்ந்த அரண்மனை இலவந்தி வெள்ளி மாடம் வஞ்சி மாநகரத்துக்கு வெளியே கடற்கரை அருகில் வேளாவிக்கோ மாளிகை எனும் அரண்மனை இருந்தது. வேனிற்காலத்தில் அரண்மனையில் அவர் வசிப்பதில்லை . ஆற்றங்கரையில் மரச் சோலையில் கூடாரம் அமைத்து சுற்றத்தோடு தங்கி இருப்பது வழக்கம் என பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது. அப்போதுதான் கண்ணகியின் செய்தியை குன்றத்தில் வாழும் மக்கள் சொல்ல கேட்டு அறிந்தான். பத்தினி கூட்டம் அமைக்கும் எண்ணம் வந்ததாகவும் கூறுகிறது.

சிலப்பதிகாரம் மணிமேகலை எனும் இரு நூல்கள் காவிய கற்பனையுடன் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோவலனை அநியாயமாகக் கொன்ற காரணத்துக்காக மதுரை மக்கள் சீற்றம் கொண்டு அரசனுடைய அரண்மனையை கொளுத்தினார்கள் என்பதே உண்மை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உள்ளது உள்ளபடியே கூறாமல் கற்பனைகளை புனைந்து வியப்புச்சுவை புலப்படும்படி எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள்.

துளுநாடு என்பது கொங்கண நாடு என்றும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரளா நாடாகிய பழைய சேர நாட்டுக்கு வடக்கு தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. சங்கத் பாடல்களில் ஆங்காங்கே சிதறி கிடந்த துளுநாட்டு வரலாற்றினை வகைப்படுத்தி எழுதப்பட்டது தான் இந்த ஆய்வு கட்டுரை. அசோகர் காலத்தில் கூறப்பட்ட சத்தியபுத்திர நாடு என்பது தொழில்நாடு என்று இரு வேறு கருத்துகளும் நிலவுகின்றன

துளு என்றால் போரிடுதல் எதிர்த்தல் என்பது பொருள். பழம் கன்னட மொழியில் துளு என்னும் சொல்லுக்கு இந்த பொருள் உண்டு. எனவே துளுநாடு என்றால் வீரர்கள் உள்ள நாடு என்று பொருள் கொள்ளலாம். குடமலை நாடு என்று கூறுகின்றன. குடகு நாடு என்னும் பகுதியில் இருந்து தான் தலைக்காவிரி உண்டாகிறது.

துளு நாட்டில் புகழ்பெற்ற அரசனாக முதலாம் நன்னன் திகழ்ந்தார். சிற்றரசனாக இருந்தாலும் போர்களில் பல சிற்றரசர்களை தோற்கடித்து அவர்களின் மனைவியின் கூந்தலை மழித்தான் என்றும்,இவனுக்குரிய தோப்பு ஒன்றில் மாமரம் பறித்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை அக்னிக்கு இறையாக்கினான் என்றும் பாடலில் சொல்லப்படுகிறது. முதலாம் நன்னனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் நன்னன் என்று அழைக்கப்பட்ட அரசாண்டான். இவன் ராஜ்யத்தை விரிவு செய்வதற்காக போரில் ஈடுபட்டான்.

இரண்டாம் நன்னனும் அவனுடைய தளபதி ஆகிய மிஞிலி என்பவனும் சிறந்த வீரர்கள். பசும்பூன் பாண்டியனுடைய படையை தோற்கடித்ததால் இரண்டாவது நன்னன் வெற்றி பெற்றான். கடற்படை காரர்களான குறும்பருடன் இணைந்து சேர அரசரை எதிர்த்தான். முதல் போரில் களங்காய் கண்ணிநார் முடி சேரல் உடன் போர் புரிந்து சேரர்களை வென்றான். சேரர்கள் தோல்வி அடைந்தனர். ஆனாலும் இரண்டாவது போரில் களங்காய் கண்ணி நார் முடி சேரர் துளுநாட்டின் மீது போர் தொடுத்து இரண்டாவது போரில் சேரர்கள் வெற்றி அடைந்தனர்.

தொடர்ந்து மன்னர்களின் காலமானது கிபி நான்காம் நூற்றாண்டுக்கு பிறகு கிடைக்கின்றன என்றும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட மன்னர்களை பற்றியும் நன்னனை பற்றிய செயற்பாடுகள் இடம்பெற்ற சங்க பாடல்கள் பற்றியும், துளுமொழி என்பதும் திராவிட நாட்டைச் சார்ந்தது. துளுநாட்டு அரசர்கள் தமிழ் புலவர்களை ஆதரித்ததும் பிற்காலத்திலேயே துளுநாட்டு தமிழ் தனித்து நின்றது. சேர நாடு மொழி மாறுபட்டு கேரள நாடாகவும் மலையாள நாடாகவும் மாறிப்போன பிறகு துளுநாட்டு தமிழுக்கும் தமிழ்நாட்டு தமிழுக்கும் இந்த தொடர்பு அற்றுப் போய்விட்டது. இவை இலக்கியம் படைக்காத வெறும் பேச்சு மொழியாகவும் கொச்சை மொழியாகவும் இருந்து வந்தது.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் துளு மக்களை மதமாற்றம் செய்ய முற்பட்டு அவர்கள் துளு மொழியிலேயே கிறிஸ்தவ மத நூல்களை எழுதத் தொடங்கினார்கள். துளு மொழிக்கு தனி எழுத்து இல்லாததால் அவர்கள் அருகாமையில் உள்ள நாடாகிய கன்னட நாட்டில் வழங்கிய கன்னட எழுத்தையே துளு மொழிக்கும் வழங்கினார்கள். இது பற்றிய விரிவான ஆய்வுகள் இந்த புத்தகத்தில் உள்ளன

ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பிறகு அந்த அத்தியாயத்தில் இடம் பெற்ற பாடல்களையும் அதற்குண்டான விளக்கங்களையும் மொழி காலம் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் பின் இணைப்பாக கொடுத்துள்ளார் ஆய்வாளர் அதேபோல் கொங்கு நாட்டு வரலாற்றுக்கும் இதே போன்ற நடைமுறை பின்பற்றியுள்ளார் முக்காலத்திய சேர நாடு துளு நாட்டு வரலாறுகளை இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment