#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-19
Book-53
Pages-446
நகுலன் 100 அருவம் உருவம்
-ஷங்கர ராமசுப்ரமணியன்
இந்தப் புத்தகத்தில் நகுலனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் ஒரே புத்தகத்தில் அழகாக வடிவமைத்துள்ளனர் .முதலில் இந்த புத்தக நேர்த்தி தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. அழகாக அட்டையை ஒரு பர்ஸ் போல் அழகாக மூடி வைக்க முடிகிறது ஒவ்வொரு முறை திறக்கும் போதும் ஏதோ ஒரு பரிசு பொருளை திறப்பது போல எண்ணம் வருகிறது.
இருப்பதன் மீதான சார்பும் இருப்பதன் மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பது தொடர்பிலான பிரம்மாண்ட அகந்தையும் பெருகியிருக்கும் காலகட்டம் இது. இங்கே இல்லாமல் போகும் வரும் இடத்தை ஒரு கருவறையாக கண்டு, இன்மையை தனித்த ஒரு வசீகரமான இருப்பாக தமது மொழி வழியாக சுட்டிக் காட்டியவர் நகுலன் என்று முன்னுரையில் புகழாரம் சூட்டுகின்றனர. நகுல சரித்திரம் எனும் பகுதியில் நகுலனின் இயற்பெயர் டி கே துரைசாமி. நாயர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். நகுலனின் பாட்டனரான கிருஷ்ண ஐயர் நீதிபதி என்பதால் திருவனந்தபுரம் அருகே அவரின் இருப்பிடம் அமைந்தது. நகுலன் பிறப்பிலேயே மிகவும் பூஞ்சையான உடல்வாகக் கொண்டவர். அடக்கத்தையும் நேர்மையையும் இவரிடம் இளமையிலேயே கற்றவர். குடும்ப வறுமை காரணமாக பிஏ படிப்பை மட்டும் நேரடியாக கல்லூரிகள் பயின்றவர் மற்றவை அனைத்தும் தொலைநிலை கல்விதான். இதுவரை 10 நாவல்கள் 35க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 5 கவிதை தொகுப்புகள் 62க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியில் ஒரு நாவல் ஐந்து கவிதை தொகுப்பு என இவரின் படைப்புலகம் இருக்கிறது.
இவரின் ஆங்கில கவிதைகளைப் பற்றி சொல்லும் போது யுவன் சந்திரசேகர் பகிரும் சில கவிதைகள்
/மழை இலைகளை சிதறடிக்கிறது இலைகள் என்ன செய்யும்/
/வார்த்தைகளை போகவிடு அவை விட்டுச் சென்றதை தக்கவை இந்த விதத்தில் வார்த்தைகளை தோற்கடிப்பாய்/
/பக்கங்களை திருப்பு புத்தகம் தானே வாசித்துக் கொள்ளும்/
/அரங்கம் காலி ஆட்டம் முடிந்தது அப்படித்தான் படுகிறது/
அடுத்த பகுதியாக நகுலனின் வாக்குமூலம் குறுநாவலை தழுவி வரதராஜன் ராஜ உருவாக்கிய கிராபிக் நாவல் என்று படங்களின் உதவியுடன் ஒரு நாவல் விரிகிறது. நகுலனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் இருந்து விருந்து ஒரு கதை இதில் கொடுக்கப்பட்டுள்ளது அதில் ஒரு நொடி கதையும் ஒரு நீண்ட கதையும் சுருக்கமாக நறுக்கு தெரிந்தால் போல் இருக்கிறது
/நீலகண்டனும் ராமநாதனும் நண்பர்கள் எழுத்தாளர்கள். ராமநாதன் நீலகண்டனிடம் என்னுடைய அப்பா செத்து விட்டார். நல்லவர். நீ என்ன சொன்னாய் .என்னுடைய என்பதை நான் கேட்கவில்லை. இருவரும் பேசாமல் நடந்து சென்றார்கள்/கதைகளை ஓரிரு வாக்கியங்களில் உணர்வுகளின் மூலமாக இதை வெளிப்படுத்தி உள்ளார்
Non being தொகுப்பிலிருந்து
நகுலன் பகிர்ந்த அனுபவத் தொகுப்பில் அரசியல் களத்தில் முன்னேறி வந்த போது லாலு பிரசாத்துக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் ஒரு ஆங்கில ஆசிரியர் அமர்த்திக் கொண்டதாகவும் ,ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் லாலு கூறிய இந்தி பதங்களை கேட்டு அந்த ஆசிரியர் தனது பணியாகிய ஆங்கிலம் கற்பதை மறந்து இந்தி புலமையை வளர்த்துக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.
/இருப்பதாக வருகிறோம் இல்லாமல் போகிறோம்/ இந்த கவிதை வெளிப்படையாக தெரியாத ஆழ் தளங்களைப் பற்றி பேசுகிறது. இல்லாமல் என்ற பதம் பல ஆழங்களில் பொருள் கொள்கிறது. நாம் உயிருடன் வாழும் போதே உண்மையில் இருப்பதில்லை என்னும் ஆழமான உண்மையை சுட்டிக்காட்டுகிறது. இருப்பது என்பது உடலளவில் ஜீவித்திருப்பதா அது மட்டும் தானா? அல்லது எதையெதையோ தேடி பணம் செல்வாக்கு இவற்றையெல்லாம் தேடி அலைவது தானா? இருப்பது என்பது நான் இருக்கிறேன் என்பது எவ்வளவு பேருக்கு தெரிகிறது. நான் இருக்கிறேன் என்பது தன்னுணர்வு. உயிரின் சுய உணர்வு என மேலும் மேலும் இதை குறித்த விரிவான கட்டுரை இடம் பெற்றுள்ளது.
திரை உலகமேதை இங்மெர் பெர்க்மன் ரஷ்யத் திரை கலைஞரான ஆந்ராய் தர்கோவ்ஸ்கி. "நான் மனித மன உலகில் பிரவேசிப்பதற்காக அதன் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கிறேன். அந்தத் தட்டல் சத்தங்கள் தான் என்னுடைய திரைப்படங்கள். ஆனால் தார்கோவ்ஸ்கிக்கு மனித மதம் கதவுகள் தாமாகத் திறந்து வழி விடுகின்றன. அவர் அனாசியமாக உள்ளே புகுந்து சஞ்சரிக்கிறார். நகுலனோ தன்னை அறியும் பிரயாசைகளுக்காக தன் மனக்கதவுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார். அவருடைய மனக்கதவுகளும் திறப்பது மூடுவதுமாய் அவருக்கு வேடிக்கை காட்டுகின்றன. என்ற ஒப்பிட்டு ஒரு கட்டுரையில் சொல்லி இருப்பார்கள்
மகாபாரதத்தில் வரும் நகுலன் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரியின் புதல்வர் ஆயுர்வேதம் வாள்வீச்சு குதிரை வளர்ப்பு குதிரைகளின் மொழி அறிதல் ஆகியவற்றில் திறமைசாலியாக இருந்தவர். குறிப்பாக மழை பெய்து கொண்டிருக்கும்போது இரு மழைத்துளிகளுக்கு இடையில் தேரை நனையாமல் செலுத்துவதிலும் விரைவாக தேரையும் குதிரைகளையும் இயக்குவதிலும் வல்லவர் என்கிறது பாரதம். நகுலனிடம் இதே சாயல்கள் காணப்படுகின்றன. கவிதை எழுதுவதும் இரு மழைத்துளிகளுக்குள் நனையாமல் செல்லும் செயல் தான் இவர் தன்னை இரட்டையராகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார் எஸ்ரா
*/லட்சியம் நலியும் போது உருவம் தோன்றுகிறது- சார்லஸ் புகோவ்ஸ்கி/
*பேராசிரியர் என்னை புன்முருவலுடன் வரவேற்றார் நீங்கள்?
தமிழில் படித்திருப்பது எம் ஏ வரை
ஆங்கிலத்தில் அல்லது தமிழிலா?
தமிழை ஆங்கிலத்தில் எவ்வாறு கற்க முடியும்?!?
*புகழ் மீதுள்ள ஆசைதான் ஒரு எழுத்தாளனை எழுத தூண்டுகிறது
*/முகம் பார்க்கும் கண்ணாடி மூன்றுண்டு என் வீட்டில் மூன்றில் பார்த்தாலும் முகம் தான் தெரியவில்லை அகம் தான் தெரிகிறது- சுப்பையா/
*வார்த்தை அர்த்தத்தில் இருந்து விலகியே இருக்கிறது
வாழ்க்கையில் இருந்து சித்தன் விலகி இருப்பது போல
வாழ்க்கைக்குள்ளே தான் இருக்கிறான் சித்தன் அர்த்தங்களுக்குள்ளே தான் இருக்கிறது வார்த்தை
*எளிய வார்த்தைகளின் திகைப்பூட்டும் சேர்மானங்களில் கவித்துவம் கொள்ளும் கவிதைகள் இவருடையவை
*நகுலனின் கடுங்கதைகள் முழுக்க நூலக ஆடியில் அசையும் ஏதோ சொற்கள்; சிதறிய அங்கங்களின் முடிகிறது.
**/ஒவ்வொன்றாக கழித்துக் கொண்டு வந்து கடைசி நிற்கும் பூஜ்ஜியம் தான் பூரணம் என்கிறீர்கள்/
புத்தகத்தின் இறுதியில் நான் வசித்த இந்த சிறுகதை சபரிநாதன் தன் கட்டுரையில் பயன்படுத்தியது. புத்தர் சீடர்களுடன் காட்டு வழியை பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கே ஓடிக் கடக்கும் ஒரு காட்டு நாயை பார்க்கிறார். அது முதலில் புதர்களுக்கு அடியில் நிற்கிறது. பிறகு மரப் பொந்துக்குள், பிறகு குகைக்குள், அங்கும் நிலை கொள்ள முடியாமல் பாறை நடுவுக்குள் ஓடுகிறது. புத்தர தன் சீடர்களிடம் சொல்கிறார் பார்த்தீர்களா பிக்குகளே இந்த நாய் இங்கும் அங்கும் ஓடி அல்லலுறுவதை .ஏனெனில் ,அதன் உடல் சொறி பிடித்து புண்ணாகி உள்ளது .எனவே அது எல்லா இடங்களிலும் துயருறுகிறது. பிரச்சினை மரப்பொந்திலோ குகையிலோ இல்லை. அந்த நாயிடம் தான் உள்ளது. மனிதனை ஏன் நாய் என்று கூறக்கூடாது என்கிறார். கட்டாயம் கூறலாம். சொல்லப்போனால் புத்தரின் கதையில் வரும் அந்த நாய் மனிதனே என்று அந்த கதை முடிகிறது. மிகவும் தத்துவார்த்த ரீதியாக உள்ள கதை மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment