Friday, 14 April 2023

book-57


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-21
Book-57
Pages-431

மகாத்மா காந்தி
-வின்செண்ட் ஷீன்

இலட்சியத்துக்காக உழைப்பவனை யாராலும் வெல்ல முடியாது-காந்தி

யாருடைய வாழ்வு குறித்தும் இத்தனை முறை அலசி இருக்க மாட்டார்கள் அல்லது பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். அவர் உண்மையாக இருந்ததால் அவர் மீது போற்றுதலும் தூற்றுதலும் விமர்சனப் பார்வையும் அதிகம் .அவர் பேசியது எழுதியது என அனைத்தும் வியப்பையும் ஆச்சரியத்தையும் தந்திருந்தாலும் ஒரு மனிதன் எப்படி இவ்வாறு நடந்து இருக்க முடியும் என்ற ஒரு கேள்வியை அனைவரின் மனதிலும் எழுகிறது‌. இந்த கேள்விக்கான பதிலை அவரவர்கள் கேட்டுக் கொண்டாலும் அறிஞர்கள் பலர் அவர் உடன் இருந்து அதனை ஆராய்ந்து கூறியதாலும் ஒவ்வொரு புத்தகமும் இன்னும் காந்தி குறித்து வந்து கொண்டே இருக்கிறது .நாம் ஒவ்வொரு புத்தகத்தையும் காந்தியை பற்றி தெரிந்து கொள்ளும்போதெல்லாம் கண்பார்வையற்றவர்கள் யானையை தடவி பார்த்து உண்மையை அறிந்தவர்கள் போலத்தான். கடல் ஆழத்தையும் காந்தி குறித்த புத்தகங்களையும் இன்னும் யாராலும் அறிவது என்று சொல்ல முடியாது. இன்னும் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் வின்சென்ட ஷுன் எழுதிய மகாத்மா காந்தி குறித்த வரலாற்று புத்தகம் இது

முதல் அத்தியாயத்தில் காந்தியம் பற்றி கூறும்போது காந்தியத்துக்கு அறவழி என்பதை திறவுகோலாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு அடிப்படையாக அமைந்த பல்வேறு நிகழ்வுகளையும் கூறியதோடு அறவழி என்பது காந்தியடிகளுக்கு இருந்த மகத்தான சக்தியை விளக்கி விட முடியாது‌ தம்முடைய தோற்றம் குறித்து கவலை இல்லாமல் இருந்தாலும் அவருடைய அந்த தோற்றமே அவருக்கு ஒரு ஈர்ப்பு சக்தியை அளித்தது.

இந்த புத்தகத்தில் நான் அறிந்து கொண்டே ஒரு செய்தி மாரிட்ஸ்பெர்க் ரயில் நிலையத்தில் காந்தியை கீழ இறங்க வைத்ததும் இரவு முழுவதும் கடும் குளிரில் அங்கேயே தங்கினார். மறுநாள் காலையில் ரயில்வே அதிகாரிகளுக்கும் டர்பனில் இருந்த அப்துல்லா சேட்டுக்கும் இது பற்றி தந்தி கொடுத்தார். உடனே அவர் மற்ற இந்திய வியாபாரிகளுக்கு தந்தி மூலம் தகவல் கொடுத்து காந்தியை சந்திக்கும்படி செய்தார் .அவர்களும் இது போன்ற தொல்லைகளை வெள்ளையர்கள் கொடுத்ததாக கூறி அன்று மாலை வந்த அடுத்த ரயிலில் அவருக்கென்று தூங்குவதற்கு தனியிடம் உரிய கட்டணம் கொடுத்து ஒதுக்கப்பட்டது. முதலிலேயே காந்தி இக்கட்டணத்தை கட்டியிருந்தால் இந்த அசம்பாவிதமான சம்பவம் நிகழ்ந்திருக்காது. ஆனால் கம்பெனிக்கு தம்மால் அனாவசிய செலவு ஏற்படுவதை தடுக்க விரும்பினார் .

காந்தியடிகளின் இன்னொரு தனித்திறமை சொல்லுவது என்றால் தன் கம்பெனி அதிபர் அப்துல்லாவுக்காக வாதாடி தையூப்பிடபம் இருந்து அவருக்கு வரவேண்டிய பணத்தை மொத்தமாக வசூலிக்காமல் தவணை முறையில் கட்ட நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி இருவருக்கும் நன்மை செய்ததால் நாளடைவில் இருவரும் நண்பர்களாகினர் . சட்டத் தொழிலுக்கு இந்த முறை பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் அவருடைய தனித்திறமைக்கு இது ஒரு சான்றாகும்.

1901 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கெடுக்க விரும்பினார். அதில் மாநாட்டில் தென்னாப்பிரிக்க இந்தியர்களை ஆதரித்து ஒரு தீர்மானம் கொண்டு வருவது தான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்து நிறைவேறியது. காங்கிரஸ் மாநாடு முடிந்ததும் கல்கத்தாவில் விருந்தினராக ஒரு மாதம் தங்கி கோகலேவின் மூலமாக பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .அதன்பின் கல்கத்தாவில் இருந்து ரங்கூன் சென்று சில நாட்கள் தங்கி விட்டு கோகலேயுடன் விடை பெற்றுக்கொண்டு பம்பாய்க்கு புறப்பட்டார். முதன் முறையாக ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் தான் பயணம் செய்தார். அன்று அவர் கண்ட காட்சிகள் நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்தன. 1918- 19 ஆம் ஆண்டில் அவர் கவலைக்கிடமாக நோய் வாய்ப்பட்டிருந்தப் பட்டிருந்த ஒரு சமயம் தவிர மூன்றாம் வகுப்புகளில் தான் அவருடைய பயணம் இருந்தது.

என்னுடைய உள்ளத்தில் இருந்த பல முடிவுகள் ரஸ்கினுடைய பெரிய நூலில் பிரதிபலிப்பதை கண்டார் .அவரின் கடையனும் கடைத்தேற்றம் நூலிலிருந்து தான் கொண்ட உபதேசங்களாக கூறியவை 

1.எல்லோருடைய பொது நலனிலும் தான் தனி மனிதனுடைய சுயநலனும் அடங்கியிருக்கிறது

2. எல்லோருக்கும் தத்தமது தொழிலை செய்து வாழ்வதற்கு உரிமை இருப்பதால் ஒரு வழக்கறிஞரின் தொழிலும், ஒரு நாவிதரின் தொழிலும் ஒரே மதிப்புடையவையே

3.உழைப்பின் பாற்பட்ட வாழ்க்கை தான், அதாவது வேளாண்மை செய்யும் உழவனின் ,கைத்தொழில் செய்யும் உழைப்பாளியின் வாழ்க்கை தான் வாழ்வதற்கு ஏற்றது 

முதல் உபதேசத்தை நான் அறிவேன். இரண்டாவது லேசாக உணர்ந்திருக்கிறேன். மூன்றாவது இதுவரை என் சிந்தனையில் தோன்றியதே கிடையாது என்று காந்தி சொல்லி இருக்கிறார்.

சத்யா கிரக ஆசிரமம் என பெயரிடப்பட்ட காந்தியடிகளின் ஆசிரமம் 1915 ஆம் ஆண்டு மே 25ஆம் நாள் நிறுவப்பட்டது.அது கட்டப்பட்ட இடமான சபர்மதி என்னும் இடத்தில் பெயரால் சபர்மதி ஆசிரமம் என்றே வழங்கி வரலாயிற்று. ஆமதாபாத்துடன் தொடர்பு கொள்ளமளவு அதற்கு அருகிலும் அன்றாட வாழ்க்கையை பொறுத்தவரையில் அதன் சந்தடிகளிலிருந்து போதிய தூரம் விலகியும் இருந்தது. பின்னாளில் தனக்கான போதிமரம் போல அனைத்து ஞானங்களையும் அங்கிருந்தே அவருக்கு கிடைத்தது.

1942 இல் கிரிப்ஸ் குழு இந்தியாவுக்கு விடுதலை அளித்திருந்தால், பயங்கர விளைவுகளை தடுத்திருக்கலாம் என்று பேசப்படுவது.. நடந்திருந்தால் கொடுத்திருந்தால் என்று பேசப்படும் பல விஷயங்களை போல விவாதத்துக்குரிய ஒரு பிரச்சனையே. அப்போது இந்தியாவில் தங்கி இருந்த பிரிட்டிஷ் நாடுகளின் ஆணையால் 1942-ல் அதிகார மாற்றம் செய்திருந்தால் பலத்தை அரசாங்கம் வைத்துக்கொண்டு அரசியல் அதிகாரத்தை மட்டும் நாம் வைத்துக் கொள்வது போல் இருந்திருக்கும் .அதற்கு காந்தியே ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். அப்போது ஜின்னா அவர்களின் பிரிவினை அப்போதும் பிரச்சினை தான் இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்

மகாத்மாக்களின் மனத் துயரின் ஆழம் மகாத்மாக்களுக்கு மட்டுமே தெரியும்

*இந்தியாவுக்கு கப்பலில் செல்லும் வழியில் தமிழ் உருது ஆகிய இரு இந்திய மொழிகளை அவர் கற்றார்

300 பக்கங்கள் வரையும் இந்த வரலாற்று புத்தகம் காந்தியை பற்றிய மிக எளிமையாக அதே வேளையில் யாரும் அறிந்திராத பல தகவல்களை இந்த புத்தகம் கொண்டுள்ளது. மீதி இருக்கும் பக்கங்கள் அனைத்திலும் அவருடைய பொன்மொழிகள் அமுத மொழிகள் இடம் பெற்றுள்ளன. காந்தி குறித்து அறிய விரும்புபவர்கள் இந்த புத்தகத்தையும் கருத்தில் கொண்டு வாசித்தால் காந்தி குறித்து நாம் அறியாத பல தகவல்களையும் பல வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment