Saturday, 22 April 2023

book-86


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-30
Book-86
Pages-507

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்
-வி.அமலன் ஸ்டேன்லி

சஞ்சலமிகு மனிதகுலம் கேட்பதெல்லாம் துயரறுக்கும் ஒரு வழி தானே? அன்றாட வலிகளிலிருந்து விடுபட ஏங்கும் மார்க்கம் தானே?

ஒவ்வொரு புத்தக கண்காட்சியின் போதும் தமிழினி அரங்கில் உள்ள வசந்தகுமார் அவர்களை சந்தித்து உரையாற்றுவது வழக்கம். அவகையில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் இருக்கும் போது ஒரு நல்ல நாவல் சொல்லுங்களேன் என்று கேட்ட போது தான் இந்த நாவலை பரிந்துரைத்தார் நாவலை படிக்கும் போது அதன் இயல்பான சொற்களில் ஆழ்ந்த தத்துவ ஞானம் நிரம்பியிருந்தது தெரிகிறது.

 உதாரணத்திற்கு முன்னுரையில் அனைத்து வார்த்தைகளுமே மனதை தொடுபவியாக இருந்தன. "இருப்பதிலிருந்து மாறி முன்னேறி அல்லது கடந்து எதையாவது அடைவதே மனித வாழ்க்கையாக இருக்கிறது. அன்றாடம் ஏன் ஒவ்வொரு கணமும் இன்னொன்றை நோக்கி நகர்வாகவே இருக்கிறது. எத்தனை விரைவில் நாம் அடைவது அதை அடைவதற்குள் அதற்கடுத்ததை குறிக்க வேண்டும் என்பதாக நீள்கிறது. வாழ்நாள் என்று தத்துவ தரிசனத்தை முன்னுரையிலேயே அவர் நமக்கு கொடுத்து விடுகிறார். இருத்தலியல் குறித்த பார்வையையும் நமக்கு வந்து விடுகிறது.

ஜெரி மற்றும் சேவியர்  இரு நண்பர் நண்பர்களின் வழியே கதை துவங்குகிறது முதலில் சாரதா அக்கா அவர்களின் மரணம் அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .சிலுவைராஜ் சரித்திரம் போல இருவரின் நினைவுகளும்  நம்மை பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் விதத்தில் இருக்கின்றன. 

உதாரணத்துக்கு நாகையில் சத்தியநாதன் அண்ணன் ஈ மந்திரம் சொல்லித் தந்ததை வைத்து மேட்டு தெருவில் செத்த ஈயை உயிர் ஆக்கும் தந்திரத்தை காட்டுவேன் என்று ஜெரி கூறுகிறான். கையை வீசி உள்ளங்கைக்குள் மட்டும் கை மூடிய படியே வைத்து உரை முக்குவது சில வினாடிகளுக்கு பிறகு ஈயை தரையில் போட்டால் செத்தது போல் மயங்கி கிடக்கும் .நாகையிலிருந்து எடுத்து வந்த திருநீறை துளி எடுத்து அந்த ஈ யின் மேல் சூ மந்திர காளி போட உடல் ஈரம் காய்ந்து மெல்ல எழுந்து பின் கிளம்பி போகும் இது போன்ற நிகழ்வுகள் நம்மை இளமைப் பருவத்திற்கு கூட்டி செல்கின்றன.

 ஐ.சி.எஃப்  எனப்படும் சென்னை  பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலையின் அலுவலர் குடியிருப்புதான் அவர்கள் வளர்ந்த இடம். அதைச் சுற்றி நண்பர்கள், பள்ளி, காதல் என செல்கிறது 
ஜெரி தன்னுடைய படிப்பை முடித்து வேலையில் சேரும் வரை இந்த கதை இளமைப் பருவ நினைவுகளை தொடர்கிறது பின்பு ஒரு மெய்ஞான தரிசனத்தை நோக்கி திரும்புகிறது.

அதன் பின் தன்னுடைய தேடல்களின் மூலம் தன்னை கண்டு கொள்வது குறித்த தத்துவார்த்தை நோக்கி செல்லும் பாதையை ஜெரி கண்டடைகிறான். தான் பணியாற்றும் ஆய்வக சாலையில் எலிகளுக்கு புற்று நோய்க்கான மருந்து செலுத்தும் போது ஜெரிக்கு ஒரு அகச்சிகள் ஏற்படுகிறது அதில் தன்னுடைய அக்கா எவ்வாறெல்லாம் நோயுடன் போராடி வருகிறார் என்பது குறித்து உணர்ந்து கொள்கிறான்.

 இது போல் தானே மற்றவர்கள் அனைவரும் நோயுடன் போராடுவார்கள் என்ற ஒரு கேள்வியும் அவனை வாட்டுகிறது. இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை உள்ள கழிவுகள் அதை சுற்றியுள்ள மனிதர்களிடம் பறவைகளிடம் விலங்குகளிடம் எவ்வகையான மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அவன் மன வேதனை அடைகிறான் விழிப்புணர்வும் செய்து வருகிறான். இன்னும் ஒரு சிறப்பு சக்தியாக எங்கோ நடக்கும் ஒரு சம்பவம் அவன் நினைவில் வந்து அடிக்கடி அவன் திகைப்படைகிறான்

பின்னர் அவன் அதற்கான கேள்வியை கொண்டு தியானத்தில் ஈடுபடுகிறான் தன்னுடைய அகத் தேடலை தொடர்கிறான் .அதற்காக பல்வேறு தத்துவார்த்தவாதிகளை அவன் பயில்கிறான் பின்பற்றுகிறான். புத்தம் ,ஜேகே மற்றும் ரமணாஸ்ரமம் செல்கிறான் ஜெரி. தன்னுடைய இருப்பை புரிந்து கொள்வதில் உள்ள தெளிவும் ஆனந்தத்தையும் ஜெர்ரி அடைகிறானா இல்லையா என்பதே கதை

*எதுக்கு இந்த ஓட்டம் யாருக்கென்று இந்த ஓட்டம் இறுதியில் கிடைத்தது என்ன கிடைத்தது தான் ஓடியத நோக்கமா? அது வழியில் மாறி போயிற்றா தடம் தப்பிச்சா பிரிதுற்றதா எதுவும் அறிவதற்குள் முடிந்து கிடக்கிறது .உடல் அயர்வற்று நிரந்தர சயனத்துக்குள்ளாக்கி மறுக்கிறது .இவ்வளவுதானா இதற்குத்தானா ஓட்டம் அருளிய இட கூடுவதில்லை

*நல்லது என்று கூறுகையிலேயே தீயது உறுக் கொள்கிறது 

*உடலும் மனமும் களமாகி போக எல்லாவித எண்ணங்களும் வந்து நின்று கடந்து போகின்றன பெருஞ்சாலையில் வந்து போகும் வாகனங்களை போல சாலை அங்கேயே எப்போதும் போல் நிலைத்திருக்கிறது

*மன ஒருமிப்பே வாழ்வின் கலை

*உள்ளே ஊடுருவி நோக்கு. உட்பார்வை கிட்டும் சரியான எண்ணம் சரியான முயற்சி சரியான செயல் சரியான மாற்றத்தை உண்டு பண்ணும்.

*கையில் இருக்கும் பறிக்கப்பட்ட இலைகள் மிக மிக குறைவு. கானகத்தில் இருக்கும் இலைகளோ எண்ணில் அடங்காதவை

*நெருங்கிய உறவுகளின் நட்பின் அருமை சிதைவுறாதிக்க சில சமயம் வெட்டி பிரிவது நல்லது தான்

*எல்லாமே திரவமாய் ரூபமற்று திகழ்ந்து இருக்கிறது .வடிவங்கள் உருவங்கள் மனதின் வார்ப்புகள் மனம் எதைப் பற்றுகிறதோ அது திடப்பட்டு வடிவம் கொள்கிறது.

நூலை படிக்கும் போது நமக்குள் எனும் கேள்விகளுக்கு பதிலாக பிற்பகுதியில் ஒரு அழுத்தமான ஒரு தேடல் இருதலியல் குறித்து நமக்கு சொல்கிறது. இந்த நாவலை படிக்கும் போதே இதன் வசீகரிக்கும் நடை நம்மை கதாபாத்திரங்களின் ஒன்ற வைக்கிறது அவ்வப்போது வரும் தத்துவ வார்த்தைகளும் இந்த நாவலை மேலும் ஊக்கப்படுத்துகிறது. இறுதியாக நாவல்கள் இவ்வாறு முடிகிறது . இப்போது பிரபஞ்சத்துடன் ஒருபோதும் பிரிவென்பதென்று என்றைக்குமாக உறவு வைத்திருக்கும் இருப்பு மனித வாழ்விதமாகிறது. எல்லா திரைகளும் விலகிட தரித்திருப்பது பிரபஞ்சத்தின் சாரம். அந்த தரிசனத்தை பகிர சொற்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது இருப்பு.

எழுஞ்சுடர் உச்சியின் மேல் மனம் வைக்கத் தொழிலொன்றிலாத சுடர். பின்னர் புலனுக்கு இல்லை வேலை. எப்பாலுமாய் வெளியெல்லாங் கடந்து மேல் அப்பாலுமாகிய அருட்பெருஞ்ஜோதியாகி நிற்கும் தற்பரம்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment