#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-24
Book-66
Pages-354
தமிழக தொல்குடிகள்
எட்கர் தர்ஸ்டன் காதம்பி ரங்காச்சாரி
இந்த நூலை எழுதிய எட்கர் தர்ஸ்டன் ஒரு மருத்துவர். இங்கிலாந்து நாட்டவர். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து தென்னிந்திய இனவரைவியல் குறிப்புகளும் ,சாதிகளும் பழங்குடிகளும் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார் .அதேபோல் மற்றொரு ஆசிரியரான காதம்பி ரங்காச்சாரி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி தர்ஸ்டனுடன் உடன் இணை ஆசிரியராக பணியாற்றி மேற்கூறிய 9 தொகுதி நூல்களிலும் துணையாக நின்றவர். இந்நூல் தமிழ்நாடு தொல்குடிகளான பழங்குடியினரின் 24 வகையினரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த நூல் ஆந்திரா ஒடிசா எல்லை தொடங்கிய கன்னியாகுமரி வரை பரவி வாழும் இந்த இனத்தவர்களை பற்றியே 135 ஆண்டுகளுக்கு முன்னால் தொகுக்கப்பட்ட விவரங்கள் இவற்றில் உள்ளதாகவும் இது ஒரு அறிய சமூக ஆவணமாக கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியான தமிழக தொல்குடிகள் பற்றி நீண்ட நெடிய அறுபடாத மரபை கொண்ட தமிழ் சமூகத்தின் எண்ணற்ற ஆதி கூறுகளை இந்த தொல் குடிகள் பிரதிபலிக்கிறார்கள் என்றும் இது ஒரு பெரிய ஆய்வு களஞ்சியமாக திகழ்கிறது என்றும் நூலின் முன்னுரையிலேயே பண்பாட்டாளர் பக்தவச்சல பாரதி தெரிவிக்கிறார்.
பழங்குடியினர்களான கோத்தர் வடகர் கன்னட இருளர் குரும்பர் கொடநாடு மந்தையிலிருந்து தோடன் ஆகியோராக சேர திரண்டு இருக்கலாம். நீலகிரி சேர்ந்த பழங்குடியினர் படகர்கள் நல்ல நிறம் வாய்க்க பெற்றவர்கள். இதற்கு மாறானவர்களாக இருளர்கள் இருந்தனர் .கருப்பு நிறத்தில் இருளன் என்ற பெயர் இருட்டு அல்லது கருப்பு என்ற பொருளை தருவது. மலை தோட்டங்களில் கூலிகளாக பணிபுரிந்து இப்பெயர் அமைந்ததா அல்லது இவர்களின் தோலின் நிறத்தை குறித்து பெயர் அமைந்ததா என்பதை தெளிவாக புரியவில்லை. மழைக்காக வேண்டியும் மக்களும் கால்நடைகளும் நலமாக வாழ வேண்டியும் இருளர்களின் காட்டு நடனம் பால் பொங்கலும் நிகழும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் காடுகளில் 1800 அடி உயரத்தில் வாழ்பவர்கள் ஊராளி எனப்படுபவர்கள். இவர்கள் ஏழு குலத்தவர்கள் என கூறிக் கொள்கின்றனர். கன்னடமும் தமிழும் கலந்த கொச்சை மொழியே இவர்கள் பேசுகின்றனர். இறந்தவர்களை புதைக்கின்றனர் சாவு சடங்குகள் ஓரளவு படகர் சாவு சடங்குகளை ஒத்துள்ளன .மேலும் இவர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .மேலும் எர்நாடன்,எரவாளர் உள்ளிட்டோர் குறித்த குறிப்புகளும் உள்ளன
காடர் அல்லது காடன்கள் என அழைக்கப்படும் இவர்கள் ஆனைமலை பகுதிகளில் வாழ்பவர்கள். தொன்மையான பழங்குடிகள் என அழைக்கப்படும் இவர்கள் தமிழும் மலையாளமும் கலந்த மொழிகளை பேசுகின்றனர். நாகரீக தொடர்பு இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முடியும் என்று எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள். இயற்கையே வாழ்க்கை தேவைகளை அனைத்தும் நிறைவு செய்யும் .காடுகளில் கிடைக்கும் மெழுகு தேன் ஏலம் கடுக்காய் இஞ்சி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர்.
குருவிக்காரன் எனப்படுவோர் மராத்தி பேசுபவராக பறவைகளைப் பிடிப்பவராக இருக்கின்றனர். தமிழகத்தில் நரிக்குறவர் என வழங்கப்படுபவரே குருவிக்காரர் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளனர். இவர்களை குறித்த பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் நரிக்கொம்பு தயாரித்து வைக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளனர். முதலில் தலையிலிருந்து மூளையை அகற்றுவார் பின்னர் மண்டையோட்டின் ஒரு பகுதியில் இருந்து தோலை உரிப்பர் .மண்டையின் இரு பக்க எலும்புகளும் இணையும் எலும்பும் பின் மண்டையில் உள்ள துளைக்கு மேல் இடத்தில் இணையும் பகுதியில் நீட்டிக் கொண்டிருப்பது போல தோன்றும்படி உள்ள எலும்பு பகுதியை மட்டும் விட்டுவிட்டு எஞ்சிய பகுதி ராவி நீக்கிவிட்டு உரித்த தோல் பகுதி இழுத்து நீட்டி கொண்டிருக்கும் அந்த எலும்பின் மேல் வைத்து அழுத்தி மீண்டும் பொருத்துவர்.
தோடர்கள் நீலகிரியில் தங்களுக்கான நில உரிமையை பெறும் முன் கோத்தர்களும் தோடர்களும் மிக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இரு சாராரும் பேசும் மொழிகள் மிகுந்த ஒற்றுமை உடையவனாக உள்ளன. கோ ஹாட்டியா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததுதான் கோத்தர் என்ற பெயர். கோத்தர்கள் காண்டியன் திராவிட பிரிவை சேர்ந்தவர் .நீலகிரியில் உள்ள கோத்தகிரி கீழ்கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கோத்தர்கள் வாழ்கின்றனர். கோத்தர்களும் தோடர்களும் கூடி வாழ்ந்து எருமைகளை வளர்த்து வந்தனர். ஆனால் கோத்தர்கள் இறந்து போன எருமையின் இறைச்சியை தின்றதால் தோடர்கள் இவர்களை விரட்டி விட்டனர் என கூறப்படுகிறது.
மலையாளிகள் பற்றிய குறிப்புகளை படித்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் அல்ல. மலையாளி என்ற சொல் மலைகளில் வாழ்பவன் என பொருள்படும். நீலகிரி மலையில் வாழும் தோடரை போல மலையாளிகள் தங்களை இந்த மலைப் பகுதிக்கு உரிமையுடைய பழங்குடிகள் என கூறிக் கொள்வதில்லை. காஞ்சிபுரத்திலிருந்து தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி மேலோங்கிய போது பத்து தலைமுறைகளுக்கு முன் மலைப் பகுதிக்கு குடியேறியவர்கள் இவர்கள் .சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைகளை காஞ்சி மண்டலம் என்று கூறிக் கொள்கின்றனர் .சேர்வராயன் மலையில் உச்சியில் இருக்கும் சேர்வராயனுக்கு ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுகின்றனர்.
இவர்களைப் போல் இன்னும் பல இனத்தவர்களை பற்றிய குறிப்புகள் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் கோவை ஈரோடு சேர்வராயன் மலை கேரளாவில் வயநாடு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தான் அதிகம் வசிக்கின்றனர. இவ்வாறு தமிழக தொல் குடிகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல புத்தகமாக அமையும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment