#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-17
Book-46
Pages-258
மூளைக்குள் வாங்க
-நா.மணி
மூளைதான் உடம்பிலேயே முக்கியமான ஒரு உறுப்பு
என்று நான் நினைத்ததுண்டு.யோசித்துப் பார்த்தேன் ஒரு நிமிஷம்...இதைச் சொல்வது யார்?
-எமோ ஃபிலிப்ஸ்
மூளையைப் பற்றிய புத்தகம் என்றவுடன் நினைவுக்கு வருவது சுஜாதா எழுதிய தலைமைச் செயலகம் இறையன்பு எழுதிய மூலைக்குள் சுற்றுலா அதேபோல் இந்த புத்தகம் வாசித்த போது மூளை குறித்த முழு விவரங்களுடன் மிக எளிமையான நிலையில் பேராசிரியர் எல்லாம் மணி அவர்கள் எழுதியிருந்தார். இந்த புத்தகத்தில் மூளையை நம்பலாமா சாம்பல் படலம் சினிமாவும் அறிவுடைய மாமிசம் அதிசய லயம் உழைப்பும் உடல் பலம் என ஐந்து தலைப்புகளில் புத்தகங்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மூளை பல விஷயங்களில் அப்படியே நினைவு வைத்துக் கொள்வதில்லை. தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறது எடிட் செய்து கொள்கிறது. இதனாலே பல நேரத்தில் நமக்கு மறதி ஏற்படுகிறது. டேனியல் காப்மன் என்பவர் மூளையை வைத்து மூளையின் குறுக்கு விதிகளை ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றிருக்கிறார். அவகாசம் கொடுத்தால் நல்ல முடிவு செய்யும். அவசரப்படுத்தினால் குறுக்கு வழியை நாடும் அதுதான் மூளை. கண் முன் நடப்பதில் மிகச் சில பகுதிகளை தான் புலன் உறுப்புகள் கவனிக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து கோல் போடப்பட்டு வருகிறது .இடையில் ஒரு கரடி வந்ததால் அனைவரின் கவனம் கரடி மீது சென்று விட்டது. இப்போது எத்தனை கோல் என்று கேட்டதில் பெரும்பான்மையோர் தவறான பதிலை அளித்தனர். ஆகவே மூளை எதில் கவனம் செலுத்துகிறதோ அதை மட்டுமே கவனிக்கிறது.
தமிழ் சினிமாவில் தலையில் அடிபட்டால் நினைவு போய்விடும் மீண்டும் தலையில் அடிபட்டால் நினைவு வந்துவிடும். பழைய ரேடியோ அல்லது ரிமோட்டை தட்டுவது போல இப்படி செய்கின்றனர் .ஆனால் அது அப்படி அல்ல நினைவை இழந்து விட்டால் மீண்டும எனவே மீட்டுக் கொண்டு வர முடியும். அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் அது கடினம் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு நரம்பு செல்லும் நூறாயிரத்துக்கும் மேலான கெமிக்கல் சிக்னல்களை பல நரம்பு செல்களில் இருந்து பெறுகின்றன. கெமிக்கல் தொடர்பு நடக்கும் சந்திப்புகளுக்கு ஸ்னாப்ஸெஸ் என்று பெயர். மூளையில் நடைபெறும் சிந்தனை சுகம் துக்கம் கவலை போன்ற அனைத்துக்கும் இந்த ஸ்னாப்சஸ் தான் காரணம்.
சுவாசத் துடிப்பு இதய லயம் போன்றவை. நிமிட நேரத்தில் நடப்பவை. இன்சுலின் சுரப்பதை அமிலம் சுரப்பது போன்றவை மணி நேர கணக்கில் எடுத்துக் கொள்பவை தூக்கம் 24 மணி நேரமும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களிலும் ஆகும். தண்டுவடத்தில் இயங்கும் நரம்புகள் தானியங்கி மூலம் தானே செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன அதனால் தான் கோழியின் தலையை வெட்டியுடன் முண்டமாக அது ஓடும் கரப்பான்பூச்சியின் தலையை கொய்த உடன் உயிருடன் இருக்கும்.
தலையில் கண்கள் இரு வேறு இடங்களில் இருப்பதால் ஒவ்வொரு கண்ணும் உலகை ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறது. இரு வேறு கோணங்களில் இருந்து வரும் காட்சிகளை ஒரு காட்சியாக மாற்ற மூளை கற்றுக் கொள்கிறது. கற்பது நடந்து கொண்டே இருக்கிறது. தலை வளர வளர கண்களின் இடைவெளியும் வாழ்கிறது. எல்லா மனிதருக்கும் கண்கள் ஒரே தூர வடிவில் இல்லை சிலருக்கு சற்று ஏறி இறங்கி இருக்கக்கூடும்.
நியூசிலாந்து அறிஞர் ஃபிளின் பத்து வருடங்களுக்கு மூணு பாயிண்ட் என்கிற வேகத்தில் ஐக்யூ மதிப்பெண்கள் அதிகரிக்கிறது. வாழ்நாள் அறிவை கண்டுபிடிப்பதில்லை. வயதுக்கேற்ப அறிவு எப்படி பெறுகுகிறது என்கிற வளர்ச்சி மட்டுமே அது அளிக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சி சுற்றுப்புற சம்பவங்கள் அறிவு மூன்றும் இடையிலான சம்பந்தத்தை அளிக்கிறது என்று விளைவு பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்.
நாம் சொல்வது போல் கற்பூர புத்தி கரித்துண்டு புத்தி வாழை மட்டை போன்றவை பல ஆண்டுகளாக சொல்லப்படுகிறது. ஆனால் மூளையே ஸ்கேன் செய்து பார்த்தபோது ப்ரீ ஃபிரண்டால் கார்டெக்ஸ் உடன் லேடிர கார்டெக்ஸ் என்கிற இடத்திலும் அதி விரைவான இயக்கம் தென்பட்டது.
முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக முடிவெடுப்பது சாதாரண காரியம் அல்ல அதனை ரஷ் அவர் என்று சொல்வார்கள். போதிய உளவுத்துறை தகவல்கள் கிடைக்காத தர்மசங்கடமான நேரங்களில் துணிந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முடிவெடுக்கும் செயல் மூளையில் சரியா தவறா என்பதைவிட வேகம் முக்கியம் இது முடிவு எடுக்கும் திறனை சோதிப்பது அதற்கான உதாரணங்களையும் ஆய்வு முடிவுகளையும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்கள்.
*மூளையில் புதிய நரம்பு செல்கள் தோன்றுவதில்லை என பல ஆண்டுகளாக நினைத்து வந்தனர் .ஆனால் மூளையில் ஆல் ஃபேக்டரி பல்பு, ஹிப்போ கேம்பஸ் போன்ற இடங்களின் வாழ்நாள் முழுவதும் புதிய நரம்பு செல்கள் ஸ்டெம் செல்களின் துணையால் பிறந்து கொண்டே இருக்கின்றன
*வளர்ப்பு இருந்து ஜெனிடிக் மோசமாக இருந்தாலும் அறிவு வளர்ச்சி இல்லை. ஜெனட்டிக் இருந்து வளர்ப்பு சரியில்லை என்றாலும் அது வேஸ்ட். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை
*மூளை மடிப்புக்கும் அறிவு திறமைக்கும் சம்பந்தம் அதிகம் இல்லை தலை அளவுக்கு மூளை அளவுக்கு உள்ள வேறுபாடு தான் மடிப்புக்கு காரணம் சிறிய தலையில் பெரிய மூளையை வைக்கும் போது மடிப்புகள் அதிகமாகின்றன டால்பின் திமிங்கலம் போன்ற கடல் ராணிகளிடம் அதிகம் அடிப்படையே மூளை காணப்படுகிறது நரம்பு செல்களுக்கு இடையே தொலைதூரத் தொடர்பு அதிகரிக்க மூளை மடிப்புகள் தேவைப்படுகிறது என்பதன் விளக்கம்
*மூளையில் 80 சதவீதம் செரிப்ரல் கார்டெக்ஸ் இருந்தால் அவன் மனிதன் அடுத்தது சிம்பன்சி அடுத்தது கொரில்லா
*நாட்டு விலங்குகள் வீட்டு விலங்காக மாறும்போது அவற்றின் மூளை அளவு 10 சதவீதம் குறைவதை அறிஞர்கள் காண்கின்றனர்
*முடிவெடுப்பதில் இரு வகை மனிதர்கள் உள்ளனர் பேராசைக்காரர்கள் ஒருவகை .திருப்தியாளர்கள் இன்னொரு வகை
*புக்தி கூர்மையின் பெரும்பகுதி இமிடெட் செய்வதுதான். பார்த்து பழகுவது கண் பார்த்து கை செய்வது, குருவை பார்த்துவிட்டு செய்தால் தான் கற்க முடியும்
மூளை குறித்த விஷயங்களை அபூர்வமான தகவல்களை எளிய மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இந்த புத்தகம் இருக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment