#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-11
Book-25
Pages-528
பார்த்தது..படித்தது...ரசித்தது
-சுதாங்கன்
பொதுவாக இது போன்ற புத்தகம் எழுத வேண்டும் என்றால் ஆழ்ந்த வாசிப்பனுவம் மட்டும் இருந்தால் போதாது. ரசனை வேண்டும். ரசனை அனுபவத்துடன் தான் கண்ட காட்சிகளை சுவையாக விவரிக்கும் அழகுணர்ச்சி வேண்டும். அவ்வாறு பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் இருக்கும் சுதாங்கன் அவர்கள் தான் பார்த்த படித்த ரசித்த விவரங்களை நமக்கு மிகவும் சுவையாக சொல்லி இருக்கிறார். அனுபவமே அருமையான ஆசான் என்பது போல இவருடைய அனுபவம் நமக்கும் ஆசானாக விளங்குகிறது. ஜெயா டிவியில் வரும் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் வரும் பழைய பாடல்கள் பலவும் இவர் தொகுத்தது அந்நாளில். ஜெயலலிதா அதற்கெனவே இவரை பாராட்டுவாராம்.
இவரின் பயணம் குமுதம் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் தினமணி தமிழன் எக்ஸ்பிரஸ் தினமலர் நெல்லை பதிப்பு போன்றவற்றில் பணியாற்றி இருக்கிறார். கண்ணதாசன் தன் சுயசரிதையில் தான் என்று சொல்லாமல் அவன் என்றே குறிப்பிட்டதை போல ரா.கி ரங்கராஜன் ஏறக்குறைய அவன் எனும் புத்தகத்தில் அவருடைய சுயசரிதியை போல் எழுதி இருப்பார்.ரா.கி ரங்கராஜனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆங்கில மொழிக்கு பயந்து கல்லூரி விட்டே ஓடி வந்தவர். பின்னால் விற்பனையில் சாதனை புரிந்த பட்டாம்பூச்சியை மொழிபெயர்த்தவர் பல்வேறு நூல்களை மொழி பெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
*இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு இ எம் எஸ் நம்பூதிரி பார்ட
*ஜெயகாந்தனின் குறு நாவல் விழுதுகள் கருணையினால் அல்ல இவை இரண்டும் வாசித்தேன்
*எத்தனையோ படிக்கிறோம் சில புத்தகங்கள் புத்தியை சீவும் சில புத்தகங்கள் அனுபவத்தை அள்ளித் தரும் சில நம் மேதாவி தனத்துக்கு கொம்பு சீவி விடும்
*மாட்டுக்கார வேலன் படத்தில் சத்தியம் நீயே தர்ம தாயே படத்தில் பின்னணி இசை வரும் போது மட்டும் டைட்டில் கார்டு வரும். இது இயக்குனரின் சாமர்த்தியம்
*நரகம் என்பது ஒரு நகரம் கிட்டத்தட்ட லண்டன் மாதிரி இருக்கும் கவிஞர் சொல்லி 170 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியது
*உமா சந்திரன் பிரபல எழுத்தாளர் .மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் படமானது .அது ரஜினிகாந்தின் வாழ்க்கையில் திருப்புமுனை படமானது .இந்த உமா சந்திரனின் பிள்ளை தான் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஆர் நட்ராஜ்.
"வள்ளலார் தம் சமகாலத் தலைவர்களான ராஜாராம் மோகன் ராய் தயானந்த சரஸ்வதியை விடவும் சீர்திருத்தவாதியாக இருந்தவர். புதையுண்டு கிடந்த வரலாற்றை முழுமையாக வெளிக்கொணர்ந்தவர் சிலம்பு செல்வர் ம.பொ.சி தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் முதலில் சொன்னவர் இவரே.
*1939 ஆம் ஆண்டு விக்டர் க்யூகோ எழுதிய நாவலை தழுவி சார்லஸ் லாப்டன் நடித்த படத்தை தான் தமிழில் மணியோசை எனும் திரைப்படத்தை கல்யாணம் குமார் நடிக்க பி. மாதவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் . வழக்கமான குழந்தைகள் பாடலில் எம்எஸ் ராஜேஸ்வரி தான் பாட வைப்பார்கள் ஆனால் இந்த படத்தில் எல் ஆர் ஈஸ்வரி பாடியிருப்பார்.
*வாசிப்பவர்கள் அனைவரும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய வரி இது சுதாகருக்கு ஆனந்த விகடன் ஆசிரியர் சொன்னது "யார் எழுதினார் என்பதை பார்க்காதே எப்படி எழுதப்பட்டது என்பதை பார்!"
*விகடன் வர தாமதமானால் அன்று
வெள்ளிக்கிழமை தானா என்கிற சந்தேகம் வரும்
(இன்று வியாழக்கிழமை தானா என்ற சந்தேகம் எனக்கு வரும்)
*ஜேசுதாஸின் குரல் வளத்தை பற்றி சிலாகித்துக் கூறும் போது ராகங்களுக்கு சில அடிப்படை வரையறைகள் உண்டு. ஏற்ற இறக்கங்களில் குறைந்தது ஐந்து ஸ்வரங்கள் இருக்க வேண்டும் என்பது அதில் ஒரு விதி. அதில் விதிவிலக்கான ராகம் மஹதி. இதில் ஆரோகன அபரோகத்தில் நான்கு ஸ்வரங்கள் தான் உண்டு இந்த ராகத்தை தான் அபூர்வ ராகத்தில் தேர்ந்தெடுத்து அதில் உருவான பாடல் தான் அதிசய ராகம் ஆனந்த ராகம்
*வால்மீகி ராமாயணத்தில் தொகுத்து தெலுங்கில் எழுதிய புத்தகம் ஸ்ரீ ஜானகி ராமாயணம் அதை தமிழில் மொழி பெயர்த்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. ராமாயணம் என்றால் அது ராமனின் கதை என்று தான் பலரும் சொல்வார்கள். ஆனால் அப்படி அல்ல. அயணம் என்றால் பயணம்.
அது ராமனின் பயணம் தான் அதாவது சீதை ராமனோடு வாழ்க்கை பயணம் செய்த கதை
*தமிழருவி மணியனிடம் நேர்காணலில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சுயமரியாதை என்றால் என்ன? தம் உடம்பில் இருந்து வழியும் வியர்வையில் குடும்பத்துக்கான உணவை தேடுவதற்கு பெயர்தான் சுயமரியாதை.
இதேபோல் மற்றும் ஒரு கேள்வி அரசியல் தெளிவு பெற படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்
"பிளேட்டோவின் குடியரசு-ராமானுஜாச்சாரி
அரிஸ்டாட்டலின் அரசியல்-சி எஸ் சுப்பிரமணியம் மார்க்சின் மூலதனம் -க.ரா.ஜமதகனி
லூயிபிஷரின் காந்தி வாழ்க்கை
காந்தியின் இறுதி 200 நாட்கள்
இந்திய அரசமைப்பு
பண்டைய இந்தியா-கோசாம்பி
ரஜினி பாமீதத் எழுதிய இன்றைய இந்தியா பெரியார் ஆகஸ்ட் 15
இன்றைய காந்தி
நான் பார்த்த விஷயங்களில் பெரும்பாலும் அன்றைகள் நடந்த அரசியல் சூழ்நிலைகள் திரைப்படங்கள் குறும்படங்கள் போன்ற எண்ணற்ற திரைப்பட நிகழ்வுகள் என பலவற்றை இதில் சுவைபட பகிர்ந்துள்ளார் படித்தது என்பவற்றில் பெரும்பாலும் தமிழ் இலக்கிய நூல்கள் அயல்நாட்டு நூல்கள் இலக்கியங்கள் அதில் இடம்பெற்றுள்ள செய்திகள் என சொல்லி உள்ளார் ரசித்தவற்றில் பெரும்பாலும் தமிழின் பழைய பாடல்களும் தமிழ் நடிகர்கள் நடிகைகள் பற்றியும் ரசனையுடன் பதிவு செய்துள்ளார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment