மனித உளவியலை பற்றிய வினோதமான விஷயங்கள்
உங்களுக்கு வரும் எதிர்மறை எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதி, அதை சுருட்டி குப்பையில் போடுவது உங்களின் மனநிலையை (Mood) மேம்படுத்தும்.
ஒரு விடயத்தின் நடுப்பகுதியை விட அதன் ஆரம்பமும், இறுதியும் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு இலகுவாக இருக்கும்.
பொதுவாகவே மனிதர்கள் எப்போதும் நமக்கு செய்யப்பட்ட உதவிக்கு கைம்மாறு செய்யவே முயற்சிப்பார்கள்.
ஓர் அழைப்பை பேச முன்னர் புன்னகையுங்கள். ஏனெனில், இந்த முறை உங்களை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் உரையாட வழிவகுக்கும்.
நீங்கள் நேரடியாக ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவர் முழுமையாக பதிலளிக்கவில்லை எனில், அமைதியாக அவரையே உற்று நோக்குங்கள். பிறகு பதில் தானாகவே வரும்.
ஒருவர் உங்களிடம் 'நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்' என்று சொல்லும் போது நீங்கள் சமீபத்தில் செய்த தவறுகளை எல்லாம் நினைத்து பார்ப்பீர்கள்.
நாம் பகல் நேரங்களை விட இரவு நேரங்களிலேயே அதிக படைப்புத் திறன் (Creativity) கொண்டவர்களாக இருப்போம்.
90 சதவீதமானோர் தாம் எதற்காக சிரிக்கிறோம் என்று கூற முற்படும் போது தான் முன்பை விட அதிகமாகவே சிரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
நீங்கள் ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவர் சிரிக்கும் நகைச்சுவைகளை அவதானியுங்கள்.
ஒரு குழுவிலுள்ள அனைவரும் சிரிக்கும் போது ஒவ்வொருவரும் முதலில் தனக்கு பிடித்தமான நபரையே பார்ப்பார்கள்.
உங்களை உத்வேகப்படுத்த விரும்பினால் குளியுங்கள். ஏனெனில், சுத்தமாக இருக்கும்போது உற்பத்தி திறன் (Productivity) அதிகரிக்கின்றது.
நீங்கள் உங்களுக்காக பணம் செலவழிப்பதை விட இன்னொருவருக்காக பணம் செலவழிக்கும் போது அதிகமாக மகிழ்ச்சியடைவீர்கள்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"
நீங்கள் தினமும் உங்களிடம் 'நான் எப்பெயும் உண்ம தான் பேசுவன்' என்று அடிக்கடி கூறுவீர்களானால் நீங்கள் பொய்யே பேசாமல் இருப்பீர்கள்.
கண்களை மூடுவது ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துவதை இலகுபடுத்துகிறது.
பாடுவதன் மூலம் கவலை மற்றும் மன அழுத்த உணர்வுகளை குறைத்துக் கொள்ளலாம்.
ஒருவர் மற்றவர்களை பற்றி உங்களிடம் எப்படி பேசுகிறார் என்று கவனியுங்கள். ஏனென்றால், இப்படித்தான் இன்னொருவரிடமும் அவர் உங்களை பற்றி பேசுவார்.
இனிய காலை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment