Sunday, 9 April 2023

book-42


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-16
Book-42
Pages-243

தி ஜானகிராமன் கட்டுரைகள்

நீ ஜானகிராமன் புனைவுகளைப் போல தாராள மயம் காட்டாமல் மிகவும் சிக்கனமாக கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுவும் மையக் கருத்தினை பீடிகை எதுவும் போடாமல் சொற்களை சிக்கனமாக சொல்ல வேண்டிய கருத்துக்களை சுருக்கமாக சொல்லி இருக்கிறார். இசை கட்டுரைகள் யாவும் வெறுமனே ரசிப்புத்தன்மை மட்டும் இல்லாமல் இசை அறிந்தவர் என்பதால் நுணுக்கத்தன்மையுடனும் அவருடைய பார்வை வெளிப்படுகிறது .எம்.வி வெங்கட்ராமன் தேன் சிட்டு இதழில் தவறாமல் திஜாவின் படைப்பு இருக்க வேண்டும் என கருதி கேட்டுக் கொண்டதால் கவிதை நாவல் கட்டுரை என தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்துள்ளார்.

நல்ல இலக்கியங்கள் வாசகனுக்கு போய் சேரவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம் நிறைய படித்தவர்கள் என்று யாரும் இல்லை அதே போல் நல்ல வாசகன் இலக்கியத்தை அவனே தேடி அடைவான் இலக்கியத்தை பொறுத்தவரை வெங்கட்ராமன் கிருத்திகா பரங்குசம் போன்றோரின் படைப்புகளை பாராட்டியுள்ளார். நான் சென்னையில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு அவரைப்போல் எழுதிவிட வேண்டும் என்று நான் நினைத்திருப்பேன். அதேபோலத்தான் கு.ப.ராஜ கோபால் சிறிது வெளிச்சம் போன்ற கதைகளில் ஆழமும் அடர்த்தியும் அவரை போல ஒருநாளும் எழுத முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது எனது தன் கருத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

கதை எழுதுவது எப்படி என்ற கேள்விக்கு தன்னுடைய வாழ்வில் இருந்து சிறுகதையாய் மாற்றிய இரு சம்பவங்களை நினைவு கூறுகிறார். ஒருமுறை ரயில் பயணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கோர்த்து சிலிர்ப்பு எனும் அற்புதக் கதை எழுதுகிறார். மற்றொறு நாள்  
உணவு விடுதியில் உணவு அருந்தும் 
போது நிகழ்ந்த சம்பவங்களை கொண்டு கண்டாமணி கதைகளை எழுதுகிறார். நான் கண்டு கேட்டு அனுபவித்த விஷயங்களை மனதில் ஊற போட்டு அதைப் பற்றி சிந்தித்து கொண்டு வந்தது. அந்த அனுபவம் ஒன்றிப்போய் பக்குவமாக மாறுகிறது .அந்தப் பக்குவத்தை முழுவதுமாக படர விட்டு பிறகு கதை எழுதுவது தான் உத்தமம். இதைத்தான் ஜெ கிருஷ்ணமூர்த்தி choiceless awareness என்கிறார். அதாவது ஒரு நிகழ்ச்சியை சித்தம் சுத்தி வட்டமிட வட்டமிட ஒரு உண்மை நம் அகத்தில் மலரும்.
சுதந்திரமாக செயல்படும் போது இது நமக்கு கைவந்த கலையாகிறது.

எல்லோராலும் நாட்டியம் ஆட முடியாது எல்லோராலும் ஓவியராக முடியாது ஆனால் ஒரு சிலர் நடனம் ஆடும் போது ஓவியம் வரையும் போது அதில் ஒரு தெய்வீக தன்மை வந்து விடுகிறது. அது அவர்களின் இயல்பான கற்பனை திறனாக இருக்கலாம் .மேற்கொண்டு அதனை வளர்க்கும் அனுபவத்திறனாகவும் இருக்கலாம்..

விரிவான ஆத்ம சேர்க்கை உள் மனங்களின் இடுக்குகளை அடையாளம் காணும் வேட்கை, கணம் கணம் ஆக காலத்தை கண்டு செல்லும் அல்லது நிற்கும் நிதானம் அதாவது ஒரு கணமும் பயனற்றதல்ல என்ற ஒரு பரிவு, அநீதி போன்ற அவலங்கள் புறவாழ்வில் நுழைந்ததன் மூலம் அகமதிப்புகள் கவிழ்ந்து போய் இருப்பதை அலசும் நோக்கு, இந்த அவலங்களுக்கு பழைய நெறிமுறை கோட்பாட்டின்படி மருந்து சொல்லலாம் இதற்கு தேய்ந்த அர்த்தங்களை சொல்லாமல் புதிய வழிமுறைகளான அர்த்தங்களை கட்டமைக்கும் சொல் அமைப்பு, ஜீவநோக்கம் என ஒரு எழுத்தாளரை எவ்வாறெல்லாம் உண்மையாக நேசித்து அவரின் எழுத்துக்களை வர்ணிக்கலாம் என்பதற்கு ஆதவனை இப்படியெல்லாம் வர்ணிக்கும் தி ஜானகிராமனின் மொழி நடையை என்னவென்று சொல்வது.

சிருஷ்டியின் ரகசியமே ஒன்றிணைந்து மற்றொன்று மாறுபட்டு இருக்கிறதா ஒரே போன்ற முகம் இருக்காது ஒரு இலையில் இருந்து இன்னொரு இலை சிறிதாவது வேறுபட்டு இருக்கும் வேறுபட்டிருக்கும் தன்மை தான் அதன் உரிமை சிறப்பு விமர்சன கட்டுரை எழுதிக் கொடுக்க சொன்னதற்கு தனக்குள்ள தயக்கத்தை இவ்வாறு நாம் வெளிப்படுத்தி இருக்கிறாய் ஆழ்ந்த அரசும் அளவிற்கு தனக்கு அறிவு கூர்மை இல்லை என்பதையும் ஒரு இடத்தில் தெரிவிக்கிறார்.

எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று சொல்லும் போது ஒரு சிறு கதையை நினைவு கூறுகிறார். பல்வேறு உருவங்களை செதுக்கும் சிற்பி ஓர் இயந்திரத்தை கண்டுபிடித்து அந்த இயந்திரத்தின் தரத்தின் மூலம் சிற்பத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். அதாவது ஒரு பட்டனை அழுத்தினால் சிற்பங்கள் வந்து கொட்டும். ஒரு முறை அந்த மெஷின் கோளாறு ஏற்பட்டுவிட்டது. ஆகவே அந்த மெஷினை சரி செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து விடுகிறார். அப்போது அவருடன் சேர்த்து உத்தியோக சீட்டு ஒன்றிணையும் வைத்து புதைத்து விடுகிறார்கள். தற்போது மனைவி வாழ்வாதாரமான ஓய்வூதியத்துக்கும் விண்ணப்பம் செய்யும் போது இறந்த நபரின் உத்தியோகச் சீட்டுகளை கேட்கிறார்கள். உத்தியோகச் சீட்டினை வைத்து புதைத்து விட்டதால் மீண்டும் தோண்டி எடுக்க விண்ணப்பிக்கும் போது ஆணை வருவதற்கு இரண்டு வருடம் ஆகிறது. இப்படியாக செல்லும் அந்த கதையில் ஒரு வழியாக அந்த உத்தியோக சீட்டை எடுத்தனரா இல்லையா என்பதை விதிப்படி நடக்கும் அதிகாரிகள் விதி விதி என்று சொல்லும் ஊழியர்கள் என்று கட்டுரையில் எழுதி இருப்பார்.

வினோபாவே ஒரு முறை சொல்லியிருந்தார் குழந்தைகளுக்கு சிறிது காலத்துக்கு பள்ளிக்கூடங்களில் வரலாற்றினை கற்பிக்காமல் இருந்தாலே போதும் .ஏனெனில் நாம் வரலாறு கற்பிப்பது என்பது போர் சண்டை கலவரம் இவைகளை தான் நாம் கற்பிக்கிறோம். உண்மையில் வரலாறு என்பதை இவைகள் மட்டும் தானா இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறுகள் ஏராளமாக உள்ளன அவைகளை தெரிந்து கொள்ளும் வரை இதுபோன்ற சண்டை சச்சரவுகளை கற்பித்து கொடுக்காமல் இருக்கும் வரை நல்லது.

பயண கட்டுரை எழுதும்போது காலா பாணி அந்தமான் தீவை பற்றி எழுதுகிறார். அந்தா....மான் என்று ஒருவர் கப்பலிலிருந்து காட்டி சொல்ல அதுவே பிறகு அந்தமான் ஆகியது என்கிறார்கள். ஒருவேளை அது சோழர்களின் கப்பலில் இருந்து கத்திய தமிழனின் குரலாக இருக்கலாம் .ஆனால் சோழர்கள் வைத்த பெயர் நக்கவரம். ஆனால் கோவிந்தராஜன் என்பவர் செவிவழி செய்தியாக சொல்லும் கதை அனுமார் சஞ்சீவி மலையிலிருந்து தூக்கிக்கொண்டு வரும்போது ஒரு மலை விழுந்து விட்டது. அந்த மலை இங்கேயே போட்டுவிட்டு வேறு மலை எடுத்து சென்று விட்டாராம் அதனால் அனுமார் தீவு என்பது அந்தமான் தீவு என்று ஆனது என்கிறார்.

கட்டுரைகளின் பின்னிணைப்பில் ஜானகிராமனின் கல்லூரி நாட்கள் அவரின் பதில்கள் ஜானகிராமன் குறித்த பிறரின் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் அனுபவங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்த கட்டுரைகளின் வழியே அறிய முடிகிறது கடந்த கால இலக்கியத்தைப் பற்றியும் வாழ்வியலை பற்றியும் உணர முடிகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment