#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-20
Book-56
Pages-560
சமூக நீதிக்கான அறப்போர்
-பி.எஸ்.கிருஷ்ணன்
நீங்கள் விரும்புகிற எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் திரும்புங்கள்.அந்தப் பாதையில் பிசாசைப் போல சாதி குறுக்கே நிற்கும்
-அம்பேத்கர்
பி.எஸ் கிருஷ்ணன் ஐஏஎஸ் கேரளாவில் பிறந்து ஆந்திராவில் அதிகாரியாக இருந்து.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதுடன் இறுதிவரை தொடர்ந்து அவர் பட்டியல் சாதியினர் பழங்குடியினர் சிறுபான்மை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தவர். தனது 87 வயது வரையிலும் இடைவிடாமல் மக்களுக்காக போராடிய அறிஞர் அவரைப் பற்றி வசந்தி தேவி அவர்கள் உரையாடலிருந்து இப்புத்தகம் துவங்குகிறது. முதல் வரியிலேயே "இந்த மனித மனம் தான் எவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது! தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன் என்று எவ்வளவு விடாப்பிடியாக அடம்பிடிக்கிறது ?என அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு ஆதரவாய் போராடிய ஏஞ்சலினா கிரீம்கே வார்த்தைகளில் இருந்து புத்தகம் துவங்குகிறது
இளம் அதிகாரியாக ஆந்திரத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் பட்டியல் இனத்தார் பிரச்சினைகள் தீர்ப்பதற்காக முக்கிய பங்கு வைத்திருக்கிறார் . நாடாளுமன்றத்தில் அதிகாரியாக பணியாற்றிய காலத்திலும் இவருடைய பங்கு அளப்பரியது.1978 ஆம் ஆண்டு மாநிலங்களின் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான மத்திய அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீடு பல திட்டங்கள் இவரின் கனவில் உதித்து கரங்களில் வடிவம் பெற்றவை. இந்த திட்டத்தின் படி மாநில பொருளாதாரம் வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த உதவுவது, மனிதக் கழிவுகளை அகற்றுவோர் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கான திட்டங்களை தொடங்குவது, பிசிஆர் சட்டம் என்று அழைக்கப்படும் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தற்போது உள்ள நிர்வாக கட்டமைப்பின் பகுதி என்ற வகையில் மனிதக் கழிவு அகற்றுவோரின் விடுதலைக்கான மறுவாழ்வுக்கான திட்டங்களை தொடங்குதல் போன்ற முக்கிய பல அம்சங்கள் வசந்தி தேவி மற்றும் கிருஷ்ணனின் உரையாடல்கள் மூலம் நமக்கு கிடைக்கிறது.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் ஆணையம் 1977 மொரார்ஜி தேசாய் அரசின் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் உறுப்பினர்கள் என அரசியல் சாசன சட்ட கூறு ஒரு 338 ல் குறிப்பிடப்பட்டுள்ள படி ஏற்படுத்தப்பட்டது .ஆனால் மசோதா தோல்வி அடைந்தது. 1990 வரை இது பிரச்சினையாகவே இருந்து வந்து மீண்டும் இந்த பட்ஜெட் தொடரில் 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. இதில் கிருஷ்ணனின் பங்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிவுச் சட்டத்தில் ஒடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த இழிவு பெருமளவில் இன்றும் தொடர்கிறது. அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் ரயில்வேயில் தான் சட்டத்தை பெருமளவு மீறுகிறார்கள். மனித தன்மையற்ற கேவலமான இந்த குற்றங்களில் இருந்து எப்படி தலித்துகளை விடுதலை செய்வது எனும் கேள்விக்கு மனிதக் கழிவை அகற்றுவதில் பரம்பரையாக பிணைக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியினர் மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 சதவீதம் இருப்பார்கள். அத்தகைய நிலையில் உள்ள சாதிகளின் மக்கள் தொகை தலித் மக்கள் எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கு இருக்காது. இதனை நிவர்த்தி செய்யும் பொறுட்டு சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கழிவுநீர் சாக்கடைகளை பராமரித்தல், வேதியியல் கண்டுபிடிப்பான்கள் மூலம் பணி செய்யும் இடத்தை மதிப்பிடுவது, மக்காத திடக்கழிவுகள் உள்ளே போகாமல் சல்லடைகளை பயன்படுத்துவது என பல யோசனைகளை அவர் கூறியிருந்தார்.
பழைய சட்டத்தில் 1989 வன்கொடுமை சட்டத்தில் 22 குற்றங்கள் தான் வன்கொடுமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன புதிய சட்டத்தில் 37 குற்றங்களாக விரிவு படுத்தப்பட்டுள்ளன அவ்வாறு சேர்த்தவைகளின் பட்டியலை கொடுத்துள்ளார். தலித் ஒற்றுமையின் தேவையும் தலித் சாதிகளின் ஏற்றத்தாழ்வை சரி செய்வதையும் குறித்த உரையாடல் ஒரு நல்ல முன் முயற்சி ஆக இருக்கிறது.
பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் தொடுத்தது ஆதிக்க சாதிகள் அல்ல. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற வனத்துறை காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் தான் .பழங்குடியில் நலிவடைய வைத்து ஆங்கிலேயர்கள் ஆட்சி மட்டுமல்ல அவர்களின் ஆட்சிக்கு முந்தைய காலகட்டங்களிலேயே அப்படியான நிலை தொடங்கி விட்டது. இன்னும் வேகம் எடுத்தது. வனங்களில் இருந்த இந்திய வளங்கள் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகு இவை தொடர்வது தான் துரதிருஷ்டம்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் எவ்வாறு அறிமுகமாகியது நடைமுறைப்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் ஒவ்வொன்றாக சிறப்பான முறையில் பதில் அளித்துள்ளார். இவைகளின் மூலம் அதன் வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த இட ஒதுக்கீட்டுக்கான தேவை என்ன என்பதையும் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் இதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு ஆய்வு போல சொல்லியுள்ளனர்
*சமூக ஜனநாயகத்தின் மீது மிகச் சிறிய அளவில் கவனம் செலுத்திவிட்டு அரசியல் ஜனநாயகம் மீது மட்டுமே கவனம் செலுத்துகிற போக்கை சாணி குவியலின் மீது அரண்மனை கட்டுகிற போக்கு என்கிறார் அம்பேத்கர்.
*புதிய சட்டங்களை உருவாக்கு என்று கோரிக்கைகள் வைப்பது விட ஏற்கனவே சட்டங்களை முறையாக அமலாக்க சட்டங்களை நிறுத்தி போகச் செய்யாதே
*உழைக்கும் மக்களை பிரித்து வைப்பது தான் சாதி
*சாதி என்பது உழைப்பின் பிரிவினை அல்ல உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருப்பது தான் சாதி
*இந்திய சமூகத்தில் வர்க்கங்கள் செங்குத்தாகவும் சாதிகள் குறுக்காகவும் செயல்படுகின்றன
இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான புத்தகம் 2017 டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனை தமிழாக்கி விட வேண்டும் என முயன்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அன்றைய கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு ஆனந்தன் அவர்கள் மொழிபெயர்ப்பு என்பது தெரியாமல் நேரடி மூலநூல் போல அருமையாக இந்த புத்தகத்தை கொண்டு வந்துள்ளார் அவருக்கு தான் மிகுந்த பாராட்டுக்கள். ஆங்கிலத்தில் வந்தவை இரண்டு புத்தகங்களாக இருந்தாலும் இவைகளை சுருக்கி ஒரே புத்தகமாகவும் அதே சமயத்தில் கருத்தில் எளிதாக குறைபாடுகளும் இல்லாமல் கொண்டு வந்துள்ளனர். திரையாடல் ஓடியாவது இது போன்ற நல்ல நூல்களை தமிழ் படுத்திட வேண்டும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment