Sunday, 16 April 2023

Book-61



#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-23
Book-61
Pages-512

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
-ஓஷோ

இப்ப புத்தகத்தில் ஓஷோ உலக நோக்கினை ஒரு புதிய மற்றும் விரிவான வழியில் தெளிவுபடுத்தியுள்ளார் .தன்னை ஒரு நாகரீகமான மனித இனம் என்பது தொடர்ந்து சொல்லிக் கொள்வதற்கு நாம் அந்த அளவுக்கு இன்னமும் வரவில்லை என்பது ஒரு தீர்வு காணப்படாத நினைவூட்டலாகவே இருக்கிறது. இந்த உலகில் நடந்த எல்லா குற்றங்களையும் எண்ணிப் பார்த்தால் அதன் பின்னர் அந்த குற்றங்களுக்கான அடிப்படை காரணம் எல்லா மதங்களும் தான். அவை அன்பை போதிக்கின்றன, ஆனால் வெறுப்பை நடைமுறைப்படுத்துகின்றன. அவை ஒற்றுமையை போதிக்கின்றன, ஆனால் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துகின்றன என்பதை அடுக்கடுக்காக சொல்லிய ஓஷோ எதிர்காலத்தில் இல்லாமல் போகிற அளவுக்கு சமுதாயத்தை வடிவமைக்கின்றனர் என்று விமர்சனப் பார்வையுடன் அணுகியுள்ளது இப் புத்தகம்.

கீழைநாட்டு புனித நூல்கள் எல்லாம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஆரம்பித்த பின்னர் அதே வார்த்தைகளில் முடிக்கின்றன. சத்தியத்தை கீழை நாடுகள் மேலை நாடுகளுக்கு நேர் எதிரான பார்வையில் அணுகுகின்றன. இது ஒரு பிரபஞ்ச இதயத்துடிப்பின் குறியீடாக உள்ளது. வார்த்தைகள் அல்ல .இதற்கு அர்த்தம் அமைதி என்றும் மூன்று முறை சொல்லி முடித்த பின் நான்காவது முறை சொல்லப்போகும் அந்த நேரத்தில் நீங்கள் அங்கு இருப்பதில்லை. வெறுமனே அமைதி அங்கு மிஞ்சி இருக்கும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.

இறந்த காலத்துக்குள் நாம் செல்ல முடியாது .ஒரு வாலிபன் மீண்டும் குழந்தை ஆக முடியாது. இங்கே ஒரு திறந்த எதிர்காலம் தான் இருக்கிறது. இதனை பற்றி ஒரு கதை சொல்லும்போது "ஹென்றி போர்டு இறந்தவுடன் கடவுளை சந்தித்தார் கடவுள் எனது படைப்பு குறித்து நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? என்று கேட்டார் 

உடனே போர்ட் கிடையாது. நான் உயிர்களைப் படைத்திருந்தால் அநேக தவறுகளை திருத்தி இருப்பேன். உதாரணமாக நான் முதலில் காரை படைத்தபோது அந்த காரில் பின்னோக்கிச் செல்லும் வசதி கிடையாது. பல பகுதிகளை சுற்றிக்கொண்டு தான் வர வேண்டும் .பின்னோக்கிச் செல்லும் வசதியை கண்டுபிடித்தது நான் தான். படைப்பிலும் கூட நீங்கள் அதில் விஷயங்களை தவற விட்டு விட்டீர்கள் என்று சுட்டிக் காட்டுகிறார்.

நம் எல்லோருக்கும் உள்ளம் உள்ளது. பொருள்களை பற்றிய விசாரணையை பொருத்தமட்டில் மனம் என்பதற்கு அதற்கு உரிய பலம் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு மருத்துவரிடம் இதயம் என்பது எங்கு இருக்கிறது என்று கேட்டால் இதயம் என்பது ரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு உறுப்பு அவ்வளவுதான் என்பார். மனம் என்பதெல்லாம் பார்த்ததில்லை என்பார். 

இதற்கு உதாரணமாக எடிசன் ஒரு முறை கடற்கரை பள்ளிக்கு அறிவியல் கண்காட்சிக்கு சென்ற போது அங்கு இருக்கும் ரயில் வடிவத்தை பார்த்து இது எதன் மூலம் இயங்குகிறது மின்சக்தியை பார்த்திருக்கிறாயா? என கேட்கிறார். அவர்கள் இல்லை என்கிறார்கள் அதன் பிறகு ஆசிரியர்கள் முதல்வர்கள் அனைவரையும் கூப்பிட்டு கேட்கிறார். மின்சக்தியை பார்த்திருக்கிறீர்களா மின் விளைவுகளை தான் பார்க்க முடியும் மின்சாரத்தை பார்க்க முடியாது என்கிறார்கள். உடனே எடிசன் சிரித்தார். நானும் மின்சாரத்தை பார்த்ததில்லை என்கிறார் .அன்பு என்பது உன் உடல் அமைப்பின் பகுதி அல்ல .அது உடலில் மறைந்துள்ள தூய்மையான சக்தி என்கிறார் ஓஷோ.

ஓஷோவின் நகைச்சுவை கதைகள் அவ்வப்போது படித்தவுடன் வாய்விட்டு சிரித்து விட முடியும் .அது கற்பனையாக இருந்தாலும் சரி நிஜமாக இருந்தாலும் சரி இது .கற்பனையா உண்மையா என்று தெரியவில்லை.ரொனால்ட் ரீகன் இந்தியா வருகை புரிந்தார் .அப்போது அவரும் ராஜீவ் காந்தியும் ஒரே காரில் பயணம் செய்கின்றர். சாலை ஓரங்களில் அநேக மக்கள் மலஜலம் கழித்துக் கொண்டிருப்பதை ரீகன் கவனிக்கிறார். இதனால் வேதனை அடைந்த ரீகன் ராஜிவிடம் இந்தியாவில் இதுதான் பழக்கமா என்று கேட்கிறார். இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான ராஜிவ்..தான் மக்களிடம் காகித கழிவறையை பயன்படுத்தம்படி விழிப்புணர்வு செய்து வருகிறேன். கொஞ்ச காலம் பிடிக்கும் என்கிறார் ‌அதன் பின்னர் மறு பயணமாக ராஜீவ் அமெரிக்கா சென்ற போது அந்த வழியில் ஒருவர் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கிறார். கோபம் கொண்ட ஜனாதிபதி ரகசிய காவலர்களிடம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடுகிறார். ஆனால் அவர்களால் அவரை கைது செய்ய முடியவில்லை. ஏன் முடியவில்லை? என்று கத்தினார் ரீகன் அந்த ஆள் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்கிறார்கள் இது கற்பனையாக இருந்தாலும் படித்தவுடன் சிரித்து விட முடிகிறது.

உனக்குள் நகர்ந்து செல் ஆனால் பயம் உன்னை நகர்த்தி செல்கின்ற வழியில் நகர்ந்து செல்லாதே-ரூமி

இந்த வரிகளை வைத்து அற்புதமான ஒரு கட்டுரையை இதில் சொல்லி இருப்பார். பயம் என்பது உனக்குள் செல்ல முடியாது ஏனெனில் பயம் தனியாக இருக்க முடியாது. உனக்குள் நீ செல்லும் போது அங்கே நீ தனிமையில் இருந்தாக வேண்டும். பயத்துக்கு ஒரு கூட்டம் தேவைப்படும். பயம் பணத்தை நோக்கி நகர்ந்து செல்லும் ,அதிகாரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் ,கடவுளை நோக்கி நகர்ந்து செல்லும் ,பயமின்மை தான் உள்நோக்கி செல்வதற்கான முதல் தேவை என்கிறார் .பயம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். கன்பூசியசின் சீடர் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று கேட்கிறார். அதற்கு கன்பூசியஸ் "இப்போது அதற்காக காலத்தை வீணாக்காதே நீ கல்லறையில் இருக்கும்போது படுத்துக்கொண்டு இதைப் பற்றி சிந்தி ..இப்போதுஅதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய் என்று கூறுகிறார்.

இருப்பு நிலையில் புதிர்கள் எனும் உரையில் கௌதம புத்தர் இறந்த ஆண்டு அவரது சீடர்களிடம் அவர் வலியுறுத்தி சொன்னது "எனது சிலைகளை உருவாக்காதீர்கள் "எனக்கு கோவில்கள் கட்டாதீர்கள் ஏனெனில் அவை உங்களை ஏமாற்றி விடுபவை. உங்களது நினைவு மட்டுமே போதும். அதுதான் உண்மையான ஆலயம் இவற்றைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றார். ஆனால் மக்கள் எப்போதும் மக்கள்தான். கௌதம புத்தர் இறந்த போது அவர்கள்.. அவர் ஞானம் பெற்ற போதி மரத்தை வழிபட ஆரம்பித்து விட்டனர். மரத்தின் அடியில் புத்தர் ஞானோதயம் ஆனதால் அதற்கு போதிமரம் என்று ஆகிவிட்டது. முதன் முதலில் கட்டப்பட்ட கோவில் பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட ஒரு மரம் மட்டுமே .புத்தர் சிலை இல்லை .விரைவில் அந்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. உலகம் விசித்திரமானது. சிலைகள் வைக்கக்கூடாது என்று சொன்ன மனிதருக்கு இந்த உலகத்தில் அதிக சிலைகள் இருக்கின்றன.

*மேலைநாட்டின் செயின்ட்(saint) என்பதற்கு கிறிஸ்தவ திருச்சபையால் சான்று அளிக்கப்பட்ட ஒருவர் என்று அர்த்தம் ஆகும்.sactus என்னும் வார்த்தையிலிருந்து என்பது வந்துள்ளது

*ஒரு மனிதனிடம் சரணடையாதே அன்பிடம் சரணடை

*அன்பின் அடையாளமாக மூன்று ரிங்குகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் எங்கேஜ்மென்ட் (engagement ring) வெட்டிங் ரிங்(wedding ring) சபரி ங்(suffering)

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment