#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-12
Book-29
Pages-390
சிந்தனை பெரிது சாதனை பெரிது
-டேவிட் ஜே.ஷ்வார்டஸ்
ஒரு நினைவுக்கிடங்காக உங்கள் மூளையை மாற்றாமல் சிந்திப்பதற்கு மட்டுமே அதை உபயோகப்படுத்துவது தான் விவேகம்
-ஐன்ஸ்டீன்
நல்லது இதுதான் கெட்டது இது தான் என்ற பாகுபாடு இல்லவே இல்லை .எல்லாம் நம்முடைய சிந்தனையில் தான் இருக்கிறது
-ஷேக்ஸ்பியர்
சுய முன்னேற்ற நூல்கள் பெரும்பாலும் நம்முடைய உள்ளத்தில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும். பல்வேறு வெச்சியாளர்களின் கதையை கேட்கும் போது நமக்கும் சில உத்வேகம் பிறக்கும். இதை செய்ய வேண்டும் என்ற திட்டமும் அதற்கு ஒரு நல்ல ஒரு வழிமுறையும் அவை வெல்லக்கூடிய வழிமுறையாக இருக்க வேண்டும் என்பதை நாம் திட்டமிட்டு கொள்ள வேண்டும். எந்த எண்ணப் போக்கு உங்களுடைய அறிவை வழிநடத்திச் செல்கிறதோ அதை மிகவும் முக்கியம் என்கிறார் ஆசிரியர்.
நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது நம்மை சுற்றி இருப்பவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டும். புதுப்புது யோசனைகளை சொல்ல வேண்டும். அவர்களுடைய அணுகுமுறைகளில் புதுமை பளிச்சிட்டு கொண்டிருக்க வேண்டும். புதிய கனவுகள் காண வேண்டும். அந்த கனவுகளை மெய்யாக்க பாடுபட தெரிய வேண்டும். ஒரு நடைமுறை சாத்திய கூற்றை அந்த கனவுகளுக்கு அளிக்க வேண்டும். அந்த மனிதர் என்னுடன் சேர்ந்து யோசனைகளை சொல்ல தெரிய வேண்டும் .வெறும் தகவல்களால் இவற்றை செய்ய முடியாது என்கிறார். ஆனால் இவையெல்லாம் செய்யக்கூடிய மனிதர்களைத் தேடிக் கொண்டிருந்தால் வாழ்நாள் போதாது இவையெல்லாம் நாமே முயன்று கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
பயத்தை வெல்லுதல் ஒன்றுதான் வெற்றிக்கு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது இறந்தகால அனுபவங்களின் பின்னணியிலேயே எல்லா நிகழ்கால சம்பவங்களும் பார்க்கப்படுவது தான் எல்லாமே பயன்கள் ஆகும் தெரிகிறது ஆகவே இதிலிருந்து நாம் வெளிவர வேண்டும் பிறரை கண்டு பயப்படுவது ஒருவகையான மோசமான அனுபவம் பயத்தை வெல்வதில் சிரத்தை காட்டுங்கள். நல்லனவற்றை செய்து வருவது உங்கள் மனசாட்சியை திருப்திப்படுத்தும் .இது சுய நம்பிக்கையை பலப்படுத்தும்
*உங்களுடைய அறிவை குறைவாக மதிப்பீட்டுக் கொள்ளாதீர்கள் பிறருடைய ஆற்றல்களையும் தேவைக்கு அதிகமாக எடை போட வேண்டாம்
*அதிர்ஷ்டம் வெற்றியை காண்பிக்காது வெற்றியை கொண்டு வரும் வழிமுறைகளை பின்பற்றினால் தான் வெற்றி வரும்
*செயலில் இறங்குவது ஒன்றுதான் பயத்தை போக்கும்
*பெரிதான நம்பிக்கை விதைப்பதற்கு நாம் பெரும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உபயோகிக்க பழகிக்கொள்ள வேண்டும்
*புதிய பொறுப்பு ஒன்றை எடுத்துக் கொள்ளச் சொல்லப்படுவது உங்கள் தனித்தன்மைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். நீங்கள் அத் தருணத்திலிருந்து தனித்து நிற்பீர்கள் நீங்கள் மதிப்பு வாய்ந்தவர் என்பது நிரூபணம் ஆகிறது.
*பிறகு என்ன சொல்கிறார் என்பதை கவனம் வையுங்கள். சொல்லப்படும் கருத்துக்களை எடை போடுங்கள். இப்படித்தான் மனம் தனக்கு மூலப் பொருட்களை தேடிக் கொள்கிறது.
மேலாண்மைக்கு தேவையான விஷயங்கள் சிலவற்றை கூறினாலும் இதன் மூலம் நாம் எடுத்துக் கொள்வது இதிலிருந்து நாம் நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு நாம் வாழ்க்கைக்கு தேவையான வேலைகளில் இதனை பயன்படுத்திக் கொள்வது தான். நேர்மறை எண்ணங்கள்தான் அவர் நல்ல தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் .ஆளுமை பண்பையும் வளர்க்கும். இது போன்ற புத்தகங்கள் நேர்மறை எண்ணங்களையும் அச்சத்தையும் விடுவித்து வெற்றியாளர்கள் உருவாக்கும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment