#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-30
Book-87
Pages-496
இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்-1919-1947
-சுனில் குமார் கோஷ்
தமிழில் சிங்கராயர்
சூழலியலாளர் நக்கீரன் அவர்கள் ஒருமுறை இந்த புத்தகத்தை இத்தனை காலம் படிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கத்துடன் இந்த புத்தகம் குறித்த அறிமுகம் ஒன்றை தந்திருந்தார் .உடனே நானும் இந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து இன்று படித்தேன் அவர் கூறியது போல நிச்சயம் இது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். வரலாறு குறித்து அறிய விரும்புபவர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சுதந்திரப் போராட்ட காலம் என்பது நமக்குத் தெரிந்து 1920 இல் தான் போராட்டம் நடைபெற்றதாக தெரிகிறது .ஆனால் உண்மையில் காலணி ஆட்சியின் போது இரண்டு வகையான சக்திகள் தோன்றின என்று ஆசிரியர் கூறுகிறார் .ஒன்று பழங்குடிகள் விவசாயிகள் கைத்தொழில்கள் சிறு முதலாளிகள் ஆகியோர் ஒரு அணியாகவும், உயர் அலுவலர்கள் அறிவு ஜீவிகள் மருத்துவர்கள் மேல் தட்டினர் ஆகியோரின் அணியாகவும் இருந்து வந்தனர் .
இவர்களில் அடித்தட்டு மக்களான விவசாயிகள் நில உடமை சார்ந்த பிரிட்டிஷ் காலனியத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே வந்தனர் சொந்த நிலம் வைத்திருந்த விவசாயிகளிடமிருந்தும் அல்லது குத்தகை விவசாயிகளிடமிருந்தும் நிலவரி அல்லது வாடகை காலணியவாதிகள் கையகப்படுத்துவதை ஒப்பீட்டு அளவில் எளிதாக்கின. கந்து வட்டிக்காரர்கள் இவ்வாறு விவசாயிகளுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரித்து வந்தனர். இந்தியாவில் பழைய வணிகர்கள் வர்க்கம் ஏறக்குறைய ஒலித்துக் கட்டப்பட்டு தரகு வணிகர்கள் என்ற ஒரு புதிய வர்க்கம் முளைத்தது
1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் கொடியின் கீழ் வந்த அக்கணமே மக்கள் சுதந்திரப் குடிகளாகவும் பிரிட்டனுக்கு இணையான குடிமக்களாகவும் நாம் இருந்து வருகிறோம் என்றார். கோகலே அவர்கள் பிரிட்டனின் ஆதிக்கத்தை மாற்ற முடியாத இறை கட்டளையாக கருதினார். இவ்வாறு முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரிட்டிஷார்களுக்கு ஆதரவான குரல்களையே ஆரம்பத்தில் கொடுத்து வந்துள்ளனர். காந்தியும் வல்லபாய் பட்டேலும் பிரிட்டனுக்கு ஆதரவான மனநிலையும் ஆரம்பத்தில் இருந்தனர். இதனால்தான் திலகர் தலைமையில் இவர்களை மிதவாதிகள் என்று சொல்லிவிட்டு கொள்கையளவில் பிரிந்தனர்.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் கீழ் மட்ட மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் போராடி வந்த போது.. இன்னொரு புறம் முதல் உலகப்போர் ஊக வணிகத்துக்கு நேர்த்தியான வாய்ப்புகளை முன்வைத்தது. திம்பெர்கு கூறுவது போல போரின் போது சணல் சணல் தயாரிப்புகள் சணல் ஆலை பங்குகள் பருத்தி நாணயம் ஆகிய இந்த அனைத்து சந்ததிகளிலும் மார்வாடிகள் ஊக வணிகத்தின் வெகுமதிகளை அள்ளிக் கொண்டனர்.
தொடர்ந்து ஊக வணிகத்தில் மாபெரும் ஆதாயங்கள் கிடைத்ததின் காரணமாக பிர்லா, பம்பாயை சேர்ந்த ஆனந்திலால் பொடர், ஜம்னா லால் பஜாஜ், சுராஜ் முதல், ஆகியவர் தொழில் துறைகள் நுழைய முடிந்தது .முதல் எழுச்சியில் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு தரவர்களாக இருந்தார்கள் அல்லது உள்நாட்டில் பறந்துபட்ட வலை பின்னலை கொண்டிருந்த பாரம்பரியம் உள்ள நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.
1914 முன்பும் பின்பும் ஏகாதிபத்திய மூலதனத்திற்கும் இந்திய பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்ந்து உருவான அமைப்பு ரீதியான பிணைப்புகளை இந்திய பெரும் முதலாளி வர்க்கம் விளக்குகிறது.
1931 இல் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரதிநிதி காந்தியைப் போல எஃப் ஐ சி சி ஐ இன் பிரதிநிதிகளான புருஷோத்தம் தாஸ் தாக்கூர் தாஸ் ஜிடி பிர்லா ஜமால் முகமது ஆகியோர் இந்தியாவில் பிரிட்டிஷ் மூலதனத்தில் நலன்களை பாதுகாப்பதற்கான காப்புக் கூறுகளை ஏற்றுக் கொள்வதற்கு சித்தமாக இருந்தார்கள்.
1931 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பொது பெரு முதலாளி வர்க்கம் காங்கிரசை எப்படி எல்லாம் தன்னுடைய தொழில்துறைக்கு பயன்படுத்தலாம் எவ்வாறு பிரிட்டனுக்கு இடையில் இருந்து தங்களுடைய தொழில் வளத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதில் உறுதியாக இருந்தனர்
விவசாயிகள் போராட்டம் வெடிப்பது போன்ற நிலை வரும் போதெல்லாம் அவர்களை கட்டுப்படுத்தவும் அணுகுமுறை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுதல் அரசாங்கத்துடன் அதிகாரப்பூர் முறையில் ஒத்துழைப்பதாகவே இருந்தது இந்த இயக்கத்தின் தலைமை தனியார் வசமே இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிக கவனமாக இருந்தது என்கிறார்கள். 1931இல் பொருளாதார பின்னடைவானது விவசாயிகளை மிக கடுமையாக பாதித்தது அப்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து ஜமீன்தார்களை இழிவாக நடத்தக்கூடாது ஒரு உடன்படிக்கைக்கு வர முயல்வார்கள் என்று நம்புகிறேன் என்று கேட்டுக் கொள்கிறார்கள்
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா கலந்து கொள்வதா வேண்டாமா என்ற கேள்வி வந்த போது பெரு முதலாளிகளின் நலனுக்காகவும் ஆங்கிலேயர் நலனுக்காகவும் கலந்து கொள்ள இசைந்தது. ஆனால் அந்நிய நாடுகள் யாரும் நம்மை எதிர்க்க கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தனர். அந்தோனியோகிராம்சி கூறியது போல ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியாவின் அரசியல் போராட்டமானது நிலை பெயரும் போர் நிலை, எடுப்பு போர் ,தலை மறைவு போர் ஆகிய மூன்று வடிவங்களை கண்டுள்ளது
காந்தியார் அழைப்பு விடுத்த அன்னிய துணி புறக்கணிப்பு முழக்கமானது லங்காசர் ஆடைகளில் வணிகம் செய்து கொண்டிருந்த தரகு வணிகர்கள் மற்றும் இந்திய பருத்தி ஆலை முதலாளிகள் ஆகியவரின் நலன்களுக்கு ஒத்து போனது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது .அந்நிய துணி புறக்கணிப்பால் பலன் அடைந்தவர்கள் பெரிய தலைமை வணிகர்களும் உள்நாட்டு பருத்தி அதிபர்களும் தான் என்பதில் ஐயமில்லை.
பி ஹார்டி குறிப்பிட்டது போல இந்துக்களும் முஸ்லிம்களும் நேர்மையாக தொடுத்தது ஒரு பொது போராட்டம் அல்ல அது ஒரு கூட்டு போராட்டம் தான். அவர்கள் சேர்ந்து வேலை செய்தார்கள். ஆனால் ஒன்றாக வேலை செய்யவில்லை. இக்குறிப்பில் பாதி சரியும் பாதி தவறும் ஆகும் தலைவர்களை பொருத்தவரை அது பொது போராட்டமாக இல்லாமல் கூட்டுப் போராட்டமாக இருந்தது. விளைவாக காங்கிரஸ் கிலாபத் என்று தனித்தனியே அமைப்புகளாகவே இருந்தார்கள். இரண்டாவதாக முதன்மையான இலக்குகளும் வெவ்வேறாணையாகவே தோன்றியது .கிலாபத்தில் முதன்மை இலக்கு, கிலாபத் தவறுகளுக்கு பரிகாரம் காண்பது என்பதாக இருந்தது. ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை சுயராஜ்யம் அடைவது என்பதாக இருந்தது.
இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் காலத்தில் இது போன்ற சில நிகழ்வுகள் சாதாரண மக்களுக்கு அறியாமலேயே பெரு முதலாளிகள் கொள்கை வேறுபாடுகள் மற்றும் அங்கு நிலவும் சூழல்கள் ஆகியவை முரண்பட்டவையாகவே இருந்தன இது போன்ற பல்வேறு வரலாற்று தகவல்கள் இந்த நூலில் பொதிந்துள்ளன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment