#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-27
Book-74
Pages-432
பெரிதினும் பெரிது கேள்
-முனைவர் த.செந்தில்குமார்
காவல் கண்காணிப்பாளர்
உயர் பதவிகளில் இருப்போர் வாசிப்பது என்பது மிகவும் சவாலானது.ஏனெனில் பணிப்பளு, அதிக பொறுப்புத் தன்மை, பல்வேறு கூட்டங்கள் வழிகாட்டுதல்கள் போன்றவற்றின் காரணமாக வாசிப்பதில் அவர்களுக்கு நேர பற்றாக்குறை இருக்கும். அதனையும் மீறி அவர்கள் வாசிக்கும் போது, அதனை அவர்கள் புத்தகமாய் வெளியிடும் போது அவர்கள் மீது மட்டற்ற மதிப்பு ஏற்படுகிறது. அந்த விதத்தில் தற்போது படித்து முடித்த காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் அவர்கள் எழுதிய பெரிதினும் பெரிது கேள் புத்தகம் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. முன்னுரையிலேயே தந்தை பெரியார் 1944 இல் புது இயக்கம் தொடங்கிய போது என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தார். சைவ சித்தாந்த கழகத்திற்கு அடிக்கடி பெரியார் சென்று வந்த தாக்கத்தால் அறிவார்ந்த அவர்கள் கூடும் அவை என்று பொருள்படக்கூடிய 'கழகம்' என்ற வார்த்தையை சைவ சித்தாந்த கழகத்திலிருந்து எடுத்து திராவிடர் கழகம் என பெயர் சூட்டினார் என்பது போன்ற செய்திகள் நிச்சயம் நல்லதொரு விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.
வாசிப்பின் மீது தீராத காதலை கொண்ட நமது கண்காணிப்பாளர் அவர்கள் இந்த புத்தகத்தில் 16 கட்டுரைகளை சீரிய நோக்கில் நிறைய செய்திகள் உடன் நல்லதொரு தமிழில் ஆய்வு நூல் போல கொடுத்துள்ளார். முதல் கட்டுரையான பெரிதினும் பெரிதுகள் என்பது சுய முன்னேற்ற சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரையாகவும் அதே நேரத்தில் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டியவர்கள் முதலில் என்னென்ன செய்து கொள்ள வேண்டும் ஐயம் திரிபுரா கற்க வேண்டும் ஆள கற்க வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி சமகால அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் உதாரணத்திற்கு காஷ்மீர் விவகாரம் என்றால் மற்றவர்கள் போல் வெறுமனே சொல்லாமல் சட்டப்பிரிவுகளை முழுமையாக படித்து புரிந்து கொண்டு கடந்த கால வரலாற்றினையும் ஒப்பிட்டு பார்த்து அதனை உண்மையாக தெரிந்து கொள்ளும்போதுதான் அது குறித்த கேள்விகளை நாம் எதிர் கொள்ள முடியும் என்கிறார்.
வாசிப்பே வாழ்க்கையாய் கட்டுரையில் தன் இளமை நாள் முதல் தான் வாசித்த நூல்களின் அனுபவங்களை தொகுத்து சொல்லி இருக்கிறார். முதன் முதலில் ஆவினங்குடி கிளை நூலகத்தில் உறுப்பினராய் ஆனது முதல் அங்கு கிடைத்த புத்தகங்கள்.. சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ் புத்தகம் அவரின் எழுத்து நடைக்கவே நான் விரும்பி படித்தேன். பாலகுமாரனின் புத்தகங்களுக்கு மாற்றம் அடைந்தபோது வரலாற்றுப் பிழியலை படித்தவருக்கு எல்லாம் இவரின் வாழ்வியல் எதார்த்தத்தை விளக்கும் நடைமுறை காட்சிகள் மேலும் வாசிப்பை கூர் படுத்தியது. ஜெயகாந்தன் நூல்களையும், சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களில் தனக்கு கிடைத்த அனுபவத்தையும் கூறிக் கொள்கிறார். ஒருமுறை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் வலம்புரி ஜானின் உரையை கேட்டு அண்ணாவிற்கு பிறகு இவ்வளவு ஆற்றலா தமிழிலும் ஆங்கிலத்திலும் என மெய்சிலிர்த்து போனாராம். அதன் பிறகு புஷ்பா தங்கதுரை திரு வி க,மறைமலை அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நூலகங்களில் உள்ள நூல்களைப் பற்றி எல்லாம் எதுவாக குறிப்பிடுகிறார்
சங்க இலக்கியத்தில் தான் படித்து வியந்த பாடல்களையும் அது குறித்த அறிமுகத்தையும் பத்தி எழுத்துக்கள் மூலமாக அதனை நமக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் அதேபோல் நூலாசிரியர்களாக சமகால படைப்பாளிகளையும் பற்றி கூறி அவர்களையும் கௌரவப்படுத்தியுள்ளார். பயணங்களில் மிகவும் ரசிப்புத்தன்மை கொண்ட எழுத்தாளர்கள் குறித்து தனியே விவரித்துள்ளார்.
திருக்குறளை தனக்கு மிகவும் பிடித்த புத்தகமாக கூறி திருக்குறள் போற்றுதும் கட்டுரையில் திருக்குறள் குறித்த எண்ணற்ற விவரங்களை கூறியதுடன் அதற்கான மொழிபெயர்ப்பு நூல்களையும் பட்டியலிட்டுள்ளார்
தமிழிசையின் வரலாற்றினையும் தமிழிசை கருவிகளில் பாரம்பரியத்தையும் விளக்கும் விதமாக இந்த கட்டுரையை அமைந்துள்ளது. சங்க பாடங்களில் இசை நயம் உள்ள பாடல்களையும், இசைக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் கூறுவது. எல்லா நாளும் ஆனந்தமாய் விளங்கிட மகிழ்ச்சியாய் இருந்திட மனதை இலகுவாக வைத்துக் கொள்ள உங்கள் செயல் திறன் மேம்பட செய்யும் எதிலும் உற்சாகத்தையும் உன்னதத்தையும் வெளிப்படுத்த இந்த வாழ்க்கையை இசையோடு கொண்டாடுங்கள் என்கிறார்.
பாரதி குறித்த சில புத்தகங்கள் படித்திருந்தாலும் கல்லூரி காலத்தில் பாரதியாரை தேடி எனது பயணங்கள் அமைந்திருந்தது. அந்த வகையில் சீனி விஸ்வநாதன் எழுதிய மகா கவி பாரதியார் வரலாறு புத்தகத்தை நான் மிகவும் விரும்பி படித்தேன். ஏனெனில் அவர் ஒரு ஆய்வாளரோ முனைவரோ பேராசிரியரோ அல்ல. தான் தேடி தேடி கண்டறிந்து பிழைகளை நீக்கி இடைச் செருகல்களை களைந்து பாரதியின் மொத்த பணியையும் முழுமையான படைப்பாக கொண்டுவர வேண்டும் என்பதை வாழ்நாள் சாதனையாக எடுத்துக் கொண்டு அதனை மெச்சக்கமாக ஏன் செய்து முடித்திருக்கிறார். கீழடி குறித்து நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு தகவல்களையும் இதில் நமக்கு கொடுத்துள்ளார்
வைட்டமின் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரசியமான கதையை நமக்குச் சொல்கிறார். ஜப்பான் கடற்படை தலைவர் என்பவர் நீண்ட நாட்கள் பயணம் செய்து நாடு திரும்புகிறார். அப்போது சில வீரர்கள் சுறுசுறுப்பாகவும் சோர்வாகவும் இருப்பதைக் கண்டு மருத்துவக் குழுவின் தலைவர்களிடம் காரணத்தை கண்டறிமாறு உத்தரவிடுகிறார் .ஒருநாள் டாக்டர் கிறிஸ்டியன் ஜக்குமான் ஜாவா தீவில் பயணம் மேற்கொண்டு இருந்தபோது, சாலையில் நிறுத்தி தேநீர் அருந்திக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில கோழிகள் சுறுசுறுப்பாகவும் சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தன. காரணத்தை கண்டறிய முற்பட்ட போது உமி நீக்கப்படாத தவிட்டு அரிசியை உண்பதால் சுறுசுறுப்பாக உள்ளதாகவும் மற்றது அப்படியே சாப்பிடுவதால் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதை கண்டுபிடித்து இதற்கு காரணம் பி சத்துக் குறைபாடு தான் என்பதை கண்டறிகிறார். 1911 இல் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் எனும் ஊட்டச்சத்து மாத்திரை உருவாக்கினார். இந்த ஊட்டச்சத்து பொருளுக்கு அமீன் என்று பெயர் வைத்தார் இதுபோல பல்வேறு தகவல்களை மெல்வின் என்பவர் எழுதியுள்ளதாக தான் படித்து வியந்த விஷயங்களை நமக்குச் சொல்கிறார்.
தான் பணியாற்றும் காவல்துறை குறித்தும் அதில் உள்ள பல்வேறு பிரிவுகள் குறித்தும் விரிவாக 15 வது கட்டுரையில் விளக்கியுள்ளார். குற்றத்தை பதிவு செய்தல் ஆராய்தல் போன்ற பல்வேறு வகையான நுணுக்கமான செய்திகளையும் ஆங்காங்கே சொல்லியுள்ளார். மேலும் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நல்ல பல புத்தகங்களையும் நமக்குச் சொல்லி உள்ளார். பட்டாம்பூச்சி,தி ரெவல்னிஸ்ட் மாக்கியவல்லி என்ட்ரி டேவிட் தோரா டாம் மாமனின் குடில் ராகுல்ஜியின் சுயசரிதை உப பாண்டவம் என பல்வேறு நூல்களையும் நமக்கு ஆங்காங்கே சொல்லி இருக்கிறார்.
மகாத்மா காந்தியை மாற்றிய புத்தகம் என்பதால் ஹென்றி டேவிட் தோராவின் சட்ட மறுப்பு (civil disobedience) எனப்படும் நூலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடித் தேடி அதனை நான் கண்டறிந்து படித்தேன்
*வாசிப்பு என்பது ஒரு தவம். அதுவும் அந்த பதின் வயதில் உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி ஓர் இடத்தில் அமர்ந்து நூல்கள் வாசிப்பது என்பதே ஒரு தவம் போலத்தான்.
*வெற்றிக்கான விதை எந்த நேரத்திலும் விழலாம். விழித்துக் கொண்டே இருங்கள் -கலில் ஜிப்ரான்
*உங்களுடைய ஆட்டத்தை நீங்களே ஆடுங்கள்! உங்கள் இயல்பில் இருந்து மாறாதீர்கள்! வெற்றிக்கு தேவையான உத்திகளில் உங்களுக்கு முடிந்த அளவில், தேவையான அளவு மட்டும் மாற்றத்தை செய்து கொள்ளுங்கள்.
*ரோஜா முத்தையா செட்டியார் என்பவர் தான் படித்து சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நூலகத்திற்கு அன்பாக வழங்கி உள்ளார்
*வரலாறு படைப்பதிலும் அந்த வரலாற்றை வசதியாக மறந்து விடுவதிலும் தமிழருக்கு நிகர் தமிழர்களே
பல்வேறு பணிகளுக்கு இடையேயும் தமிழ் மொழி மீதும் வரலாற்றின் மீதும் தீராத தாகம் கொண்டு ஆய்வு நூல் போல் என் நூலை எழுதிய கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment