#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-21
Book-59
Pages-400
புதிய நோக்கில் மகாகவி பாரதி
-முனைவர் தே ஞானசேகரன்
முனைவர் சி சித்ரா
ஒவ்வொரு ஆண்டும் கோவை புத்தகத் திருவிழாவில் பாரதியார் குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் ஏதேனும் புத்தகம் வெளியிட்டுள்ளதா என்பதை பார்ப்பதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு வாங்கிய புத்தகம் தான் புதிய நோக்கில் மகாகவி பாரதி. பாரதி வாழ்ந்த மொத்த நாட்கள் 14,155 தான் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள் பால் நினைந்தூட்டும் தாய் போல மானிடத்தையும் உயிர்நேயத்தையும் அள்ளி அள்ளி வழங்கியவன் பாரதி என்று பதிப்புரையில் புகழாரம் சூட்டுகின்றனர். இந்த புத்தகத்தில் 20 பேர் எழுதிய ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பாரதியார் தன் வாழ்வின் 18 ஆண்டுகளை 1904 முதல் 1971 வரை தேச மொழியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்.முதல் கட்டுரையில் தமிழ் காவிரியின் இலக்கிய தரப்பை விசாரப்படுத்திய பாரதியையும் கேரளத்தின் பெரும் நிலப்பரப்பில் பாய்ந்து வளப்படுத்திய நிளாநதியைப் போல தற்கால மலைகள் கவிதையை வளப்படுத்திய வள்ளத்தோளினை தமிழகத்தின் முண்டாசு கவிஞர் பாரதியோடு ஒப்பிட்டு காட்டுவது முதல் கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது. இருவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு உள்ள காங்கிரஸில் இணைந்தனர் .இருவரும் எழுச்சியுடன் சுதந்திரத்தை மக்களிடையே ஊட்டினர் .ஆனால் பாரதியிடம் இருந்த ஆங்கில இலக்கிய அறிமுகம் வள்ளத்தோளுக்கு வாய்க்கவில்லை .பாரதி திலகரை தலைவராக ஏற்றவர். திலகர் விதைத்த வித்து பாரதி. காந்தி விதை வித்து வள்ளத்தோள் என்று கூறுகிறார்.
தன்னம்பிக்கையும் தாழ்வு மனப்பான்மையும் கட்டுரையில் ஒருவனின் தன்னாற்றல் திறமை மற்றும் கருத்து மீது வைக்கும் நம்பிக்கையும் ,அவன் தன் மீது வைக்கும் நம்பிக்கையும் தன்னம்பிக்கை ஏற்படும். இதனை ஒரு பாடலின் வழியே நமக்கு கூறுகிறார் மனத்தடையை வெல்லதலே தன்னை வெல்லதலாகும்.
என்ன வரங்கள், பெருமைகள் ,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்தியமாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
பாரதியார் கவிதைகளில் விளையாட்டியல் என்னும் தலைப்பில் இடம் பெற்ற கருத்துகளில் அவருடைய பாடல்களில் 1.தெய்வ விளையாட்டுகள் 2. மனித விளையாட்டுகள் 3.விலங்கு விளையாட்டுக்கள் 4.விளையாட்டு இலக்கியம் என் வகைப்பாட்டினுள் தெய்வ விளையாட்டு என்பதை கண்ணன் விளையாட்டு கண்ணம்மா விளையாட்டு என்று பாகுபடுத்துகிறார்கள்.
பாரதியார் பாடல்களில் வாய்மொழி மரபு எனும் ஆய்வு கட்டுரையில் குயில் பாட்டில் இடம் பெறும் ஒரு பாட்டினை குறிப்பிட்டு இது உள்ளத்தின் உண்மை ஒளி வாக்குத்தெளிவாக வந்துள்ளது. பாரதியார் நாட்டார் பண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்தவர் என்று புகழாரம் சூட்டுகிறார்கள். அதேபோல கும்மி பாட்டு துளைக்கருவி தோல் கருவி ஆகியவற்றையும் பாரதியார் பாடலில் பதிவு செய்துள்ளார். பாரதியார் கட்டுரைகளில் தமிழருக்கு என்றொரு கட்டுரையில்
கால் தொட்டு கடலை வாங்கி காலை நீட்டி தின் கையிலே
என்னை யவன் கூப்பிட்டு இழுத்தடித்தான் சந்தையிலே"
" சந்தையில் மருக்கொழுந்து சரம்சரமாய் விற்கையிலே
எங்களிடம் காசில்லாமல் எங்க முகம் வாடி போச்சு"
பாடல்களில் நாட்டுப்புற மெட்டும் பாட்டும் இடம்பெற்றது அறிய முடிகிறது
பாரதியின் நம்பிக்கை நம்புதல் எனும் மாயாஜால சிந்தனையின் வெளிப்பாடு. விடுதலை பள்ளு எனும் விடுதலை கீதம் என்கிறார்கள். ஆடுவோமே பள்ளு பாடுவோமே போன்ற பாடல்கள் பின்னாளில் நாங்கள் சுதந்திரம் பெற்று விட்டோம் எனும் நம்பிக்கை விதையை அவர் விதைத்தார். இதை வெற்றிக்கான உந்து சக்தியை மக்களிடம் கொடுத்தது. எதிர்பார்த்தது கிடைக்கும் எண்ணங்களை எதில் செலுத்துகிறீர்களோ கற்பனை ஓட்டுகிறீர்களோ அதைத்தான் நீங்கள் ஈர்ப்பீர்கள். இதைத்தான் இவரும் செய்து இருக்கிறார். ஒவ்வொரு செயலின் மூல சக்தி நமது எண்ணமே என்கிறார் எமர்சன. ஒவ்வொரு செயலின் மூதாதையர் எண்ணம்தான். இந்த புரிதல் ஏற்பட்டால் உலகமே எண்ணங்களினால் இயங்குகிறது என்று புரியும் எனும் வாதம் இதனுடன் ஒத்துப் போகிறது. நிகழ்வுகளை நம் பெரும் ஆசையின் செல்வாக்கினால் நிகழச் செய்கிறோம் என்று சொல்கிறான். பாரதி போன்ற மகத்தான கலைஞனின் பெரும் ஆசையின் விளைவாக பல நிகழ்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
வாழ்வெனும் அபத்த நிலையை சேக்ஸ்பியர் முதல் புறநானூற்று பாடல்கள் வரை சொல்லி உள்ளன. பாரதியாரும் வாழ்வின் இந்த அர்த்தத்தன்மையை பல இடங்களில் பதிவு செய்து கொண்டு போகிறார் அதில் ஒன்றாக
"உலகமெல்லாம் ஒரு பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி யிடர் செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஒரு
கனவினும் கனவாகும்"!
தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழியில் வந்த முக்கிய இதழ்களில் சுதேசி மித்ரன் ஒன்று. 1904 நவம்பர் இறுதி முதல் 1906 செப்டம்பர் வரை சதேசமித்திரனில் உதவி ஆசிரியராக முதலில் பணிபுரிந்த பாரதி பின்னர் 1920 முதல் இறக்கும் வரை அதில் தான் பணிபுரிந்தார். வார இதழாக ஆரம்பித்து பின்னர் வாரமிரு முறை வெளிவந்தது. இந்து வில் ஆசிரியராக இருந்து கொண்டே 1882 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிக்கை துவங்கப்பட்டது. ஜி சுப்ரமணிய ஐயரின் இறுதி காலத்தில் 1915 இந்து ஆசிரியருக்கு சுதேசமித்திரனை அரங்கசாமி ஐயங்காருக்கு விற்றுவிடுகிறார் மீண்டும் பாரதி சுதேஷ் மித்திரனில் எழுத தொடங்கியவர். பாரதியின் வரலாற்றை படித்த அதே போல் சுதேச மித்திரனின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது
ஒவ்வொரு கட்டுரைகளிலும் பாரதியார் குறித்த இன்னொரு முகத்தையும் நாம் அறிய தவறிய பாரதியாரின் மொழி வரலாறு பண்பாடு கவிதை இலக்கியம் என ஒவ்வொரு துறைகளை பற்றியும் நாம் அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவியாளராக இருக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment