Friday, 7 April 2023

book-34


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-14
Book-34
Pages-772

 வைக்கம் போராட்டம்
-பழ அதியமான்

ஆறாம்வகுப்பு படிக்கும்போது பெரியார் குறித்த பாடம் ஒன்றில் வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார் என்றால் பெரியார் என்று ஒரு மதிப்பெண் படித்ததுண்டு. ஆனால் வைக்கம் போராட்டம் பற்றி முழு புத்தகமாய் படிக்கும் போது தான் பல்வேறு உண்மைகளையும் ஆராய்ச்சி தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. வைக்கம் எனும் ஊரில் தெருக்களில் கூட ஈழவர் புலையர் உள்ளிட்ட சாதியினர் நடக்கக்கூடாது எனும் கொடுமை அங்கு நடக்கிறது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேசவ் மேனன், மாதவன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தியிடம் அனுமதி பெற்று சத்தியாகிரகம் நடத்த ஆரம்பிக்கிறார்கள். அப்போது மன்னரின் எதிர்ப்பு பிரிட்டிஷாரின் எதிர்ப்பு,மேல் சாதியினர் எதிர்ப்பு போன்றவை ஒரு சேர அவர்களை நெருக்குகிறது. எனவே தலைவர்கள் அனைவரும் கைதாகின்றனர். ஒவ்வொரு நாளும் எட்டு பேர் பத்து பேர் சத்தியாகிரகம் செய்து வந்தனர். அப்போது தலைமை ஏற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சேர்ந்த பெரியாருக்கு தந்தி அனுப்புகின்றனர். பெரியார் தலைமையில் 14 பேர் வைக்கம் செல்கின்றனர்.

வைக்கம் குறித்த நிலையை இரு வேறு தரப்பில் பத்திரிகைகள் அணுகுகின்றன. ஒன்று போராட்ட தரப்பினரின் தரப்பு மற்றொன்று மன்னரின் தரப்பு. ஆகவே இரு தரப்பினரும் வாதிடும் வகையில் அந்தப் போராட்டம் சமநிலையில் இருக்கிறது அப்போது. எந்த வீதியில் யார் நடக்கலாம் என்ற பழைய உயர் நீதிமன்ற தீர்ப்பை கூறி போராட்டம் பலவீனப்படுத்தப்படுகிறது. போராட்டம் துவங்கிய ஒரு மாதம் ஆகும்போது மே மாதம் நில வரையறை எடுத்துப் பார்க்கின்றனர். வரதராஜர் நாயுடு சொல்லும்போது போராட்டத்தில் பின் வாங்கினால் காங்கிரஸின் மதிப்பு குறைந்து விடும். இன்னும் மேலும் பல ஊர்களில் இதுபோல தீண்டாமை கொடுமைகள் வரக்கூடும் ஆகவே போராட்டத்தை மேலும் தொடர வேண்டும் என்கிறார்கள் தமிழ்நாட்டில் ஈரோடு கோவை மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க வருமாறு தந்தி அனுப்பியுள்ளனர்.

இபிகோ 27ஆவது பிரிவின் படி ஈ வெ ராமசாமி நாயக்கர் வைக்கம் பகுதிகளில் தங்கவோ இருக்கவோ தடை உத்தரவு போடப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட பெரியார் உங்கள் உத்தரவை பெற்றுக் கொண்டேன் .அதை நான் மதிக்க முடியாத இந்த உத்தரவை மீறுகிறேன் என்று கூறி கடிதம் எழுதி அனுப்புகிறார். மே 24ஆம் தேதி பெரியாருக்கு ஒரு மாதம் வெறும் காவல் தண்டனை கிடைக்கிறது அதன் பின்பு வரதராஜ நாயுடுவை தலைமை ஏற்க அழைக்கின்றனர். மே 26 ஆம் தேதி ராஜாஜி வைக்கம் வருகிறார் என்று பெரியாரை சிறையில் சந்திக்கிறார். அதற்குப் பின் பெரியாரின் மனைவி நாகம்மை முத்துச்சாமி போன்றோ ர் போராட்டத்தில் பங்கு கொள்கின்றனர். நாகம்மை ஒரு நாள் காலையில் 5 மணிக்கு கோவிலில் நுழைந்து பூஜை செய்ய வற்புறுத்துகின்றனர். ஆனாலும் மறுத்து விடுகின்றனர் மறுநாள் மழையில் நனைந்தபடியே போராட்டம் செய்ததெல்லாம் புத்தகத்தில் உள்ளது.

மூன்றாவது மாதமான ஜூன் மாதத்தில் போராட்டம் வரை மாற்றம் பெறுகிறது .காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மூன்று குழுக்கள் 4 மணி நேரம் சத்தியாகிரகம் செய்தனர். தினசரி 30 ரூபாய் ஆகிய செலவு இன்று 150 ரூபாயாக உயர்ந்தது பெரியாரும் நாகம்மையும் பணம் வசூலித்து கொடுத்தனர் .மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டி யாரும் வைக்கம் போராட்ட நிதி வசூலித்து அனுப்புகின்றனர். திருப்பூரைச் சேர்ந்த ஆசர் சேட் நேரடியாக வைக்கம் வந்து ரூ 100 பெருமானம் உள்ள அரிசியை கொடுத்தது திருப்பூர் காரர் ஆகிய எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. ஜூலை மாதம் பெரியார் கோட்டயத்தில் தங்கக் கூடாது என்று மேலும் உத்தரவு நீட்டித்து வந்தது. தடையை மீறி பங்கு கொண்டதால் இரண்டாவது முறையாக பெரியார் கைது செய்யப்பட்டார். இந்த போராட்டத்தில் இரண்டு முறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார் மட்டும்தான்.

திருவிதாங்கூர் மன்னர் காலமானதால் ஆகஸ்ட் 9 10 11 ஆகிய மூன்று நாட்கள் சத்தியாகிரகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 9ஆம் தேதி விடுதலை அடைந்த பெரியார் ஈரோட்டுக்கு சென்றிருந்தபோது 11ஆம் தேதி ரகசிய போலீஸாரால் சென்னை ராஜாங்கத்தை எதிர்த்து பேசியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

நவம்பர் 11ஆம் தேதியை தெற்கில் இருந்தும் வடக்கிலிருந்தும் பேரணிகள் நடத்தப்பட்டு மகாராணி அவரிடம் மனு கொடுக்கப்பட்டு மாலை பொதுக்கூட்டம் காங்கிரஸார் தலைமையில் நடைபெற்றது. 4000 பேர் ஊர்வலத்திலும் ஐயாயிரம் பேர் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தீண்டாமைக்கு எதிராக வைக்கச்சத்தில் நடைபெறும் போராட்டத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தலைவர் பெரியார் ஆக இருந்தார். நவசக்தியில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை பற்றி தலையங்கம் எழுதியிருந்தனர். பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்றனர்.

பிப்ரவரியில் ஆண்ட்ரூஸ் வைக்கம் போராட்டத்தில் சென்று வந்ததை அனுபவத்தை எங்கு இந்தியாவில் எழுதுகிறார். மார்ச் எட்டாம் தேதி வைக்கம் காந்தி செல்வதற்காக சென்னையில் ஒரு கூட்டம் நடக்கிறது. பின்பு ஈரோடு திருப்பூர் போத்தனூர் வழியாக வைக்கம் செல்கிறார். அங்கு உள்ள காங்கிரஸ் கமிட்டி யாரிடம் பல்வேறு தலைவர்களுடன் மகாராணியுடன் பேசுகிறார் ,நாராயண குருவுடன் உரையாடுகிறார். அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் மகாராணியார் சாலையை திறந்து விட இருப்பதாகவும் ஆனால் மக்கள் கருத்து எதிராக இருப்பதால் அதிகாரம் அற்ற நிலையில் இருப்பதாகவும் சொல்வதாக சொல்கிறார்.

பின்னர் மகாராணி பெருந்தன்மையுடன் மூன்று பக்க வழிகளில் திறந்து விட்டாலும் குருக்கள் வாழும் ஒரு பகுதியில் மீண்டும் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதிக்கப்படவில்லை .இதனை பல்வேறு இயக்கங்கள் கண்டிக்கின்றன. 1925 ஆகஸ்ட் மாதம் பெரியார் அய்யா முத்து கவுண்டர் உள்ளிட்ட 8 பேரின் மீதான தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நவம்பர் மாதம் வைக்கத்தில் சாலைகள் திறக்கப்பட்டன. கேளப்பன் ஏற்பாட்டில் பெரியார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைமை ஆற்றிய பெரியார் கேவலம் நாய் பன்னி நடக்கும் தெருவில் மனிதன் நடப்பது வெற்றி அல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்பதுதான் நோக்கம். அந்த தத்துவத்தின் அடிப்படையில் இந்த தெருவில் நடப்பது வெற்றி அல்ல, இந்த சுதந்திரத்தை கோவிலுக்குள் நிருபிக்க வேண்டும் என்பதே வெற்றி.

வைக்கத்தோட முடியாமல் டி கே மாதவன் தீண்டாமை பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தால் அதற்காக லாலா லஜபதி ராய் நிதியாக 10,000 தந்தார் என்பதை நவசக்தி பதிவு செய்கிறது. ஈழவரின் எழுச்சியில் முதலில் அடி எடுத்து வைத்தவர் டாக்டர் பால்பு பத்மநாபன்.  பின்னிணைப்பாக ஆய்வு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன அதில் ஈழவரின் எழுச்சியும் காந்தியும் வைக்கமும் பெரியாரும் வைக்கம் போராட்டமும், பெரியாரின் வைக்கம் போராட்டமும் அதன் எதிரொலியும் வைக்கம் வரலாறு சாமி சிதம்பரனார் எழுதிய வைக்கம் வரலாற்றும் டி செல்வராஜ் எழுதிய பெரியார் குறித்த புத்தகமும் வைக்கம் குறித்த ஆய்வுகளை நமக்கு சொல்கிறது. மேலும் வைக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவர் குறித்த விபரமும் அதில் இருக்கிறது தமிழகத்தின் பதிவுகள் கேரளத்தின் பதிவுகள் இந்தியாவின் பதிவுகள் அயல் நாட்டின் பதிவுகள் என ஆய்வு நூலுக்குரிய அத்தனை அம்சங்களும் இப்ப புத்தகத்தில் உள்ளன மன நிறைவோடு ஒரு வரலாற்றை தெரிந்து கொண்ட புத்தகமாக புத்தகம் இருக்கிறது .

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment