கற்கை நன்றே-23-
*மணி
மாத்திரை அட்டைகளில் கோடு
மாத்திரை மருந்து கடைகளின் மருந்து அட்டைகளிலும், டப்பாக்களிலும் பெறும்பாலும் சிவப்பு நிறக்கோடு போடப்பட்டு இருக்கும்..இந்த சிவப்பு நிற கோடானது மருந்து அட்டைகளில் இடது புறமாக ஒரு ஓரத்தில் போட்டு இருப்பார்கள். இது எதற்காக போடப்பட்டுள்ளது என்றால் மருத்துவர் பறிந்துரை(prescription) இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்வது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக அச்சிடப்பட்ட கோடுதான் அது.....
அதாவது மருத்துவர் எழுதி கொடுத்த பரிந்துரை சீட்டை (Prescription) மருந்தகத்தாரிடம் குடுத்தால் மட்டுமே அந்த மருந்து மாத்திரையை அவர்கள் நமக்கு குடுப்பார்கள்....இதுவே சாதாரண அன்னாசின், பாராசிட்டமல் போன்ற சில மாத்திரைகளில் இந்த சிகப்பு காேடு இருக்காது என்பதாலே நம்மால் அந்த மாத்திரிகளை மருந்தகங்களில் எளிதில் கேட்டு பெறமுடிகிறது....
மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள Rx குறியீடானது எதற்காக மருந்து மாத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால்
நாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறோம், மருத்துவர் நமக்கு மருந்து மாத்திரைகளை எழுதிதருவார்..அவ்வாறு எழுதிதந்த மருந்து சீட்டை மருந்தகத்தில் காட்டினால் மட்டுமே இந்த Rx மருந்துகள் குடுக்கப்படும். முக்கியமாக அந்த மருந்தை நாம் எடுத்துக்கொண்டு உடல்நிலை சரியாகிவிட்டு மீண்டும் சில மாதங்கள் கழித்து அதே போன்று உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரிடம் செல்லாமல்..., ஏற்கனவே அம்மருத்துவர் எழுதி கொடுத்த அந்த Rx மாத்திரை, மருந்துகளை நாம் மீண்டும் மீண்டும் மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம் என்பதே இந்த Rx குறியீடானது நமக்கு உணர்த்துகிறது.
இப்ப NRx பற்றி பார்ப்போம்...... பொதுவாக NRx என்பதை New Prescription என்று சொல்வார்கள். இந்த NRx வகை மருந்துகள் சிறிதளவு நம்மை கிளர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் இந்த மருந்து(Drugs) இருக்கக்கூடும் . இந்த மருந்துகளை Narcotic Drugs என்று குறிப்பிடுவார்கள். இந்த NRx மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நமக்கு தர மாட்டார்கள்... குறிப்பாக மருத்துவர் பரிந்துரை சீட்டானது (prescription) 6 மாதம் வரைதான் செல்லுபடியாகும்....பின்பு அந்து மருந்து சீட்டானது காலாவதி ஆகிவிடும். அதாவது 6 மாதம் கழித்து மருத்துவர் எழுதிக் குடுத்த NRx வகை மருந்துகள் நம்மால் மருந்தகங்களில் பெறமுடியாது.
பொதுவாக NRx வகை மருந்துகளை "மனஅழுத்தம், உளவியல், தூக்கமின்மை போன்ற நாேய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இந்த மருந்துகளை H, H1 என்று மருந்தகங்களில் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.
இந்த XRx வகை மருந்துகள் பொதுவாக அதிக அளவு கிளர்ச்சி ஊட்டக் கூடிய போதை வகை மருந்து என குறிப்பிடுவர். இவ்வகை மருந்துகளை Narcotic and psychotropic substance based drugs என்று அழைப்பர். இந்த மருந்துகள் அனைத்தும் X என்ற எழுத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.... இந்த மருந்துகள் எல்லாம் அதிக பலம் வாய்ந்த வலி நிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுகிறது.
பொதுவாக இந்த XRx மருந்துகள் புற்றுநோயாளிகள், மனநோயாளிகள் மற்றும் பெறும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளை எல்லா மருத்துவர்களும் பரிந்துரை செய்ய மாட்டார்கள். குறிப்பாக மனநல டாக்டர், மயக்கவியல் நிபுணர், புற்றுநோய் மருத்துவர்கள்தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள்.
இந்த XRx வகை மருந்து சீட்டை பரிந்துரைக்கப்பட்ட அந்த நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் மருந்தகத்தார்கள் நோயாளிகளின் தகவல்களுடன் இந்த மருந்து சீட்டை 2 வருடம் பாதுகாத்து வைத்திருத்தல் அவசியமாகும்.
NRx மற்றும் XRx மருந்துகளுக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடு எனில் இந்த மருந்துகளை சிலர் போதையூக்கியாக தவறான முறையில் பயன்படுத்துகின்றனர் என்பதாலே..மேலும் மருத்துவர்கள் இந்த வகை Drugs மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரே அடியாக நிறுத்தமாட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துதான் நிறுத்துவார்கள்..அவ்வாறாக இந்த Drugsகளை ஒரே அடியாக நிறுத்தினால் நோயாளிகளுக்கு பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது
-படித்தது
இனிய காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment